அகநானூறு - 384. முல்லை
'இருந்த வேந்தன் அருந் தொழில் முடித்தென, புரிந்த காதலொடு பெருந் தேர் யானும் ஏறியது அறிந்தன்று அல்லது, வந்த ஆறு நனி அறிந்தன்றோஇலெனே; "தாஅய், முயற் பறழ் உகளும் முல்லை அம் புறவில், |
5 |
கவைக் கதிர் வரகின் சீறூர் ஆங்கண், மெல் இயல் அரிவை இல்வயின் நிறீஇ, இழிமின்" என்ற நின் மொழி மருண்டிசினே; வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ? மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ? |
10 |
உரைமதி வாழியோ, வலவ!' என, தன் வரை மருள் மார்பின் அளிப்பனன் முயங்கி, மனைக் கொண்டு புக்கனன், நெடுந் தகை; விருந்து ஏர் பெற்றனள், திருந்திழையோளே. |
வினை முற்றிய தலைமகனது வரவு கண்டு, உழையர் சொல்லியது. - ஒக்கூர் மாசாத்தியார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 382 | 383 | 384 | 385 | 386 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பூட்டினையோ, நின், முல்லை