அகநானூறு - 375. பாலை
'சென்று நீடுநர்அல்லர்; அவர்வயின் இனைதல் ஆனாய்' என்றிசின் இகுளை! அம்பு தொடை அமைதி காண்மார், வம்பலர் கலன் இலர் ஆயினும் கொன்று, புள் ஊட்டும் கல்லா இளையர் கலித்த கவலை, |
5 |
கண நரி இனனொடு குழீஇ, நிணன் அருந்தும் நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல், அத்த எருவைச் சேவல் சேர்ந்த அரை சேர் யாத்த வெண் திரள், வினை விறல், எழூஉத் திணி தோள், சோழர் பெரு மகன் |
10 |
விளங்கு புகழ் நிறுத்த இளம் பெருஞ் சென்னி குடிக் கடன் ஆகலின், குறைவினை முடிமார், செம்பு உறழ் புரிசைப் பாழி நூறி, வம்ப வடுகர் பைந் தலை சவட்டி, கொன்ற யானைக் கோட்டின் தோன்றும், |
15 |
அஞ்சுவரு மரபின் வெஞ் சுரம் இறந்தோர் நோய் இலர் பெயர்தல் அறியின், ஆழலமன்னோ, தோழி! என் கண்ணே. |
பிரிவிடை வேறுபட்ட தலைமகன் தோழிக்குச் சொல்லியது. - இடையன் சேந்தங் கொற்றனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 373 | 374 | 375 | 376 | 377 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - இலர்