அகநானூறு - 372. குறிஞ்சி
அருந் தெறல் மரபின் கடவுள் காப்ப, பெருந் தேன் தூங்கும் நாடு காண் நனந்தலை, அணங்குடை வரைப்பின், பாழி ஆங்கண், வேள் முது மாக்கள் வியல் நகர்க் கரந்த அருங் கல வெறுக்கையின் அரியோள் பண்பு நினைந்து, |
5 |
வருந்தினம்மாதோ எனினும், அஃது ஒல்லாய், இரும் பணைத் தொடுத்த பலர் ஆடு ஊசல், ஊர்ந்து இழி கயிற்றின், செல வர வருந்தி, நெடு நெறிக் குதிரைக் கூர் வேல் அஞ்சி கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர் |
10 |
ஆடு கொள் பூசலின் பாடு சிறந்து எறியும், பெருந் துடி வள்பின் வீங்குபு நெகிழா, மேய் மணி இழந்த பாம்பின், நீ நனி தேம்பினை வாழி, என் நெஞ்சே! வேந்தர் கோண் தணி எயிலின் காப்புச் சிறந்து, |
15 |
ஈண்டு அருங்குரையள், நம் அணங்கியோளே. |
அல்லகுறிப்பட்டுப் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 370 | 371 | 372 | 373 | 374 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - சிறந்து, பெருந்