அகநானூறு - 370. நெய்தல்
'வளை வாய்க் கோதையர் வண்டல் தைஇ, இளையோர், செல்ப; எல்லும் எல்லின்று; அகல் இலைப் புன்னைப் புகர் இல் நீழல், பகலே எம்மொடு ஆடி, இரவே, காயல் வேய்ந்த தேயா நல் இல் |
5 |
நோயொடு வைகுதிஆயின், நுந்தை அருங் கடிப் படுவலும்' என்றி; மற்று, 'நீ செல்லல்' என்றலும் ஆற்றாய்; 'செலினே, வாழலென்' என்றி, ஆயின்; ஞாழல் வண்டு படத் ததைந்த கண்ணி, நெய்தல் |
10 |
தண் அரும் பைந் தார் துயல்வர, அந்தி, கடல் கெழு செல்வி கரை நின்றாங்கு, நீயே கானல் ஒழிய, யானே வெறி கொள் பாவையின் பொலிந்த என் அணி துறந்து, ஆடு மகள் போலப் பெயர்தல் |
15 |
ஆற்றேன்தெய்ய; அலர்க, இவ் ஊரே! |
பகலே சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. -அம்மூவனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 368 | 369 | 370 | 371 | 372 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - என்றி, பகலே, நெய்தல்