அகநானூறு - 37. பாலை
மறந்து, அவண் அமையார் ஆயினும், கறங்கு இசைக் கங்குல் ஓதைக் கலி மகிழ் உழவர் பொங்கழி முகந்த தா இல் நுண் துகள், மங்குல் வானின், மாதிரம் மறைப்ப, வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி, |
5 |
தொழிற் செருக்கு அனந்தர் வீட, எழில் தகை வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்துக் கிளி போல் காய கிளைத் துணர் வடித்து, புளிப்பதன் அமைத்த புதுக் குட மலிர் நிறை வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ்ப் பசுங் குடை, |
10 |
கயம் மண்டு பகட்டின் பருகி, காண் வர, கொள்ளொடு பயறு பால் விரைஇ, வெள்ளிக் கோல் வரைந்தன்ன வால் அவிழ் மிதவை வாங்கு கை தடுத்த பின்றை, ஓங்கிய பருதிஅம் குப்பை சுற்றி, பகல் செல, |
15 |
மருதமர நிழல், எருதொடு வதியும் காமர் வேனில்மன் இது, மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே! |
தலைமகள் தோழிக்கு வன்புறை எதிர் அழிந்து சொல்லியது; பிரிவுணர்த்திய தோழி சொல்லியதூஉம் ஆம்.-விற்றூற்று மூதெயினனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 35 | 36 | 37 | 38 | 39 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், -