அகநானூறு - 353. பாலை
ஆள்வினைப் பிரிதலும் உண்டோ? பிரியினும், கேள், இனி வாழிய, நெஞ்சே! நாளும் கனவுக் கழிந்தனையவாகி, நனவின், நாளது செலவும், மூப்பினது வரவும், அரிது பெறு சிறப்பின் காமத்து இயற்கையும், |
5 |
இந் நிலை அறியாய்ஆயினும், செந் நிலை அமை ஆடு அம் கழை தீண்டி, கல்லென ஞெமை இலை உதிர்த்த எரி வாய்க் கோடை நெடு வெண் களரி நீறு முகந்து சுழல, கடு வெயில் திருகிய வேனில் வெங் காட்டு, |
10 |
உயங்கு நடை மடப் பிணை தழீஇய, வயங்கு பொறி, அறு கோட்டு, எழிற் கலை அறுகயம் நோக்கி, தெண் நீர் வேட்ட சிறுமையின், தழை மறந்து, உண்நீர் இன்மையின், ஒல்குவன தளர, மரம் நிழல் அற்ற இயவின் சுரன் இறந்து, |
15 |
உள்ளுவை அல்லையோ மற்றே உள்ளிய விருந்து ஒழிவு அறியாப் பெருந் தண் பந்தர், வருந்தி வருநர் ஓம்பி, தண்ணெனத் தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல் வீழ் இதழ் அலரி மெல் அகம் சேர்த்தி, |
20 |
மகிழ் அணி முறுவல் மாண்ட சேக்கை, நம்மொடு நன் மொழி நவிலும் பொம்மல் ஓதிப் புனையிழை குணனே? |
முன் ஒரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பொருள் முற்றி வந்திருந்த காலத்து, மீண்டும் பொருள் கடாவின நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர ஞாழார் மகனார் மள்ளனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 351 | 352 | 353 | 354 | 355 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பொருள், உதிர்த்த, நிலை