அகநானூறு - 349. பாலை
அரம் போழ் அவ் வளை செறிந்த முன்கை வரைந்து தாம் பிணித்த தொல் கவின் தொலைய, எவன் ஆய்ந்தனர்கொல் தோழி! ஞெமன்ன் தெரி கோல் அன்ன செயிர் தீர் செம் மொழி, உலைந்த ஒக்கல், பாடுநர் செலினே, |
5 |
உரன் மலி உள்ளமொடு முனை பாழாக, அருங் குறும்பு எறிந்த பெருங் கல வெறுக்கை சூழாது சுரக்கும் நன்னன் நல் நாட்டு, எழிற் குன்றத்துக் கவாஅன், கேழ் கொள, திருந்து அரை நிவந்த கருங் கால் வேங்கை |
10 |
எரி மருள் கவளம் மாந்தி, களிறு தன் வரி நுதல் வைத்த வலி தேம்பு தடக் கை கல் ஊர் பாம்பின் தோன்றும் சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே? |
தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 347 | 348 | 349 | 350 | 351 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், -