அகநானூறு - 342. குறிஞ்சி
ஒறுப்ப ஓவலை; நிறுப்ப நில்லலை; புணர்ந்தோர் போலப் போற்றுமதி! நினக்கு யான் கிளைஞன் அல்லெனோ? நெஞ்சே! தெனாஅது வெல் போர்க் கவுரியர் நல் நாட்டு உள்ளதை மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின் |
5 |
ஆ கொள் மூதூர்க் கள்வர் பெருமகன், ஏவல் இளையர் தலைவன், மேவார் அருங் குறும்பு எறிந்த ஆற்றலொடு, பருந்து படப் பல் செருக் கடந்த செல் உறழ் தடக் கை, கெடாஅ, நல் இசைத் தென்னன், தொடாஅ |
10 |
நீர் இழி மருங்கில் கல் அளைக் கரந்த அவ் வரையரமகளிரின் அரியள், அவ் வரி அல்குல் அணையாக்காலே! |
அல்லகுறிப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைக் கணக்காயனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 340 | 341 | 342 | 343 | 344 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கொள்