அகநானூறு - 334. முல்லை
ஓடா நல் ஏற்று உரிவை தைஇய ஆடு கொள் முரசம் இழுமென முழங்க, நாடு திறை கொண்டனம்ஆயின் பாக! பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு பெருங் களிற்றுத் தடக் கை புரையக் கால் வீழ்த்து, |
5 |
இரும் பிடித் தொழுதியின் ஈண்டுவன குழீஇ, வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும் கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறி, பெயல் தொடங்கின்றால், வானம்; வானின் வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப, |
10 |
நால்கு உடன் பூண்ட கால் நவில் புரவிக் கொடிஞ்சி நெடுந் தேர் கடும் பரி தவிராது, இன மயில் அகவும் கார் கொள் வியன் புனத்து, நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப, ஈண்டே காணக் கடவுமதி பூங் கேழ்ப் |
15 |
பொலிவன அமர்த்த உண்கண், ஒலி பல் கூந்தல் ஆய் சிறு நுதலே! |
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரைக் கூத்தனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 332 | 333 | 334 | 335 | 336 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கால், கொள்