அகநானூறு - 333. பாலை
'யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்தன்ன நின் ஆக மேனி அம் பசப்பு ஊர, அழிவு பெரிது உடையையாகி, அவர்வயின் பழி தலைத்தருதல் வேண்டுதி; மொழி கொண்டு தாங்கல் ஒல்லுமோ மற்றே; ஆங்கு நின் |
5 |
எவ்வம் பெருமை உரைப்பின்; செய் பொருள் வயங்காதுஆயினும் பயம் கெடத் தூக்கி, நீடலர் வாழி, தோழி! கோடையில், குருத்து இறுபு உக்க வருத்தம் சொலாது, தூம்புடைத் துய்த் தலை கூம்புபு திரங்கிய, |
10 |
வேனில், வெளிற்றுப் பனை போலக் கை எடுத்து, யானைப் பெரு நிரை வானம் பயிரும் மலை சேண் இகந்தனர்ஆயினும், நிலை பெயர்ந்து, நாள் இடைப்படாமை வருவர், நமர்' என, பயம் தரு கொள்கையின் நயம் தலைதிரியா |
15 |
நின் வாய் இன் மொழி நல் வாயாக வருவர் ஆயினோ நன்றே; வாராது, அவணர் காதலர்ஆயினும், இவண் நம் பசலை மாய்தல் எளிதுமன் தில்ல சென்ற தேஎத்துச் செய் வினை முற்றி, |
20 |
மறுதரல் உள்ளத்தர்எனினும், குறுகு பெரு நசையொடு தூது வரப்பெறினே. |
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கல்லாடனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 331 | 332 | 333 | 334 | 335 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நின், வருவர், பெரு, செய், மொழி, பயம்