அகநானூறு - 329. பாலை
பூங் கணும் நுதலும் பசப்ப, நோய் கூர்ந்து, ஈங்கு யான் வருந்தவும், நீங்குதல் துணிந்து, வாழ்தல் வல்லுநர் ஆயின், காதலர் குவிந்த குரம்பை அம் குடிச் சீறூர், படு மணி இயம்பப் பகல் இயைந்து, உமணர் |
5 |
கொடு நுகம் பிணித்த செங் கயிற்று ஒழுகைப் பகடு அயாக் கொள்ளும் வெம் முனைத் துகள் தொகுத்து, எறி வளி சுழற்றும் அத்தம், சிறிது அசைந்து, ஏகுவர்கொல்லோ தாமே பாய் கொள்பு, உறு வெரிந் ஒடிக்கும் சிறு வரிக் குரு |
10 |
நெடு நல் யானை நீர் நசைக்கு இட்ட கை கறித்து உரறும் மை தூங்கு இறும்பில், புலி புக்கு ஈனும் வறுஞ் சுனை, பனி படு சிமையப் பல் மலை இறந்தே? |
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது; பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - உறையூர் முதுகூத்தனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 327 | 328 | 329 | 330 | 331 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தலைமகள்