அகநானூறு - 324. முல்லை
விருந்தும் பெறுகுநள் போலும், திருந்து இழைத் தட மென் பணைத் தோள், மட மொழி அரிவை தளிர் இயல் கிள்ளை இனி தினின் எடுத்த வளராப் பிள்ளைத் தூவி அன்ன, உளர் பெயல் வளர்த்த, பைம் பயிர்ப் புறவில் |
5 |
பறைக் கண் அன்ன நிறைச் சுனை தோறும் துளி படு மொக்குள் துள்ளுவன சால, தொளி பொரு பொகுட்டுத் தோன்றுவன மாய, வளி சினை உதிர்த்தலின், வெறி கொள்பு தாஅய், சிரற் சிறகு ஏய்ப்ப அறற்கண் வரித்த |
10 |
வண்டு உண் நறு வீ துமித்த நேமி தண் நில மருங்கில் போழ்ந்த வழியுள், நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுக, செல்லும், நெடுந்தகை தேரே முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே! |
15 |
வினை முற்றிய தலைமகன் கருத்து உணர்ந்து உழையர் சொல்லியது. -ஒக்கூர் மாசாத்தியார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 322 | 323 | 324 | 325 | 326 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - அன்ன, முல்லை