அகநானூறு - 314. முல்லை
'நீலத்து அன்ன நீர் பொதி கருவின், மா விசும்பு அதிர முழங்கி, ஆலியின் நிலம் தண்ணென்று கானம் குழைப்ப, இனம் தேர் உழவர் இன் குரல் இயம்ப, மறியுடை மடப் பிணை தழீஇ, புறவின் |
5 |
திரிமருப்பு இரலை பைம் பயிர் உகள, ஆர் பெயல் உதவிய கார் செய் காலை, நூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவி கல்லெனக் கறங்கு மணி இயம்ப, வல்லோன் வாச் செல வணக்கிய தாப் பரி நெடுந் தேர் |
10 |
ஈர்ம் புறவு இயங்கு வழி அறுப்ப, தீம் தொடைப் பையுள் நல் யாழ் செவ்வழி பிறப்ப, இந் நிலை வாரார்ஆயின், தம் நிலை எவன்கொல்? பாண! உரைத்திசின், சிறிது' என, கடவுட் கற்பின் மடவோள் கூற, |
15 |
செய் வினை அழிந்த மையல் நெஞ்சின் துனி கொள் பருவரல் தீர, வந்தோய்! இனிது செய்தனையால்; வாழ்க, நின் கண்ணி! வேலி சுற்றிய வால் வீ முல்லைப் பெருந் தார் கமழும், விருந்து ஒலி, கதுப்பின் |
20 |
இன் நகை இளையோள் கவவ, மன்னுக, பெரும! நின் மலர்ந்த மார்பே! |
வினை முற்றிப் புகுந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 312 | 313 | 314 | 315 | 316 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வினை, நின், நிலை, செய், இயம்ப, தேர்