அகநானூறு - 302. குறிஞ்சி
சிலம்பில் போகிய செம் முக வாழை அலங்கல் அம் தோடு, அசைவளி உறுதொறும், பள்ளி யானைப் பரூஉப் புறம் தைவரும் நல் வரை நாடனொடு அருவி ஆடியும், பல் இதழ் நீலம் படு சுனைக் குற்றும், |
5 |
நறு வீ வேங்கை இன வண்டு ஆர்க்கும் வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும் அரிய போலும் காதல் அம் தோழி! இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுத கரும்பு எனக் கவினிய பெருங் குரல் ஏனல், |
10 |
கிளி பட விளைந்தமை அறிந்தும்,' செல்க' என, நம் அவண் விடுநள் போலாள், கைம்மிகச் சில் சுணங்கு அணிந்த, செறிந்து வீங்கு, இள முலை, மெல் இயல் ஒலிவரும் கதுப்பொடு, பல் கால் நோக்கும் அறன் இல் யாயே. |
15 |
பகலே சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.- மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 300 | 301 | 302 | 303 | 304 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தோழி