அகநானூறு - 288. குறிஞ்சி
சென்மதி; சிறக்க, நின் உள்ளம்! நின் மலை ஆரம் நீவிய அம் பகட்டு மார்பினை, சாரல் வேங்கைப் படு சினைப் புதுப் பூ முருகு முரண் கொள்ளும் உருவக் கண்ணியை, எரி தின் கொல்லை இறைஞ்சிய ஏனல், |
5 |
எவ்வம் கூரிய, வைகலும் வருவோய்! கனி முதிர் அடுக்கத்து எம் தனிமை காண்டலின், எண்மை செய்தனை ஆகுவை நண்ணிக் கொடியோர் குறுகும் நெடி இருங் குன்றத்து, இட்டு ஆறு இரங்கும் விட்டு ஒளிர் அருவி |
10 |
அரு வரை இழிதரும் வெரு வரு படாஅர்க் கயந் தலை மந்தி உயங்கு பசி களைஇயர், பார்ப்பின் தந்தை பழச் சுளை தொடினும், நனி நோய் ஏய்க்கும் பனி கூர் அடுக்கத்து, மகளிர் மாங்காட்டு அற்றே துகள் அறக் |
15 |
கொந்தொடு உதிர்த்த கதுப்பின், அம் தீம் கிளவித் தந்தை காப்பே. |
பகற்குறிக்கண் தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது. - விற்றூற்று மூதெயினனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 286 | 287 | 288 | 289 | 290 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தந்தை, அடுக்கத்து, நின்