அகநானூறு - 271. பாலை
பொறி வரிப் புறவின் செங் காற் சேவல் சிறு புன் பெடையொடு சேண் புலம் போகி, அரி மணல் இயவில் பரல் தேர்ந்து உண்டு, வரி மரல் வாடிய வான் நீங்கு நனந்தலைக் குறும்பொறை மருங்கின் கோட் சுரம் நீந்தி, |
5 |
நெடுஞ் சேண் வந்த நீர் நசை வம்பலர் செல் உயிர் நிறுத்த சுவைக் காய் நெல்லிப் பல் காய் அம் சினை அகவும் அத்தம் சென்று, நீர் அவணிர் ஆகி, நின்று தரு நிலை அரும் பொருட் பிணி நினைந்தனிர்எனினே, |
10 |
வல்வதாக, நும் செய் வினை! இவட்கே, களி மலி கள்ளின் நல் தேர் அவியன் ஆடு இயல் இள மழை சூடித் தோன்றும் பழம் தூங்கு விடரகத்து எழுந்த காம்பின் கண் இடை புரையும் நெடு மென் பணைத் தோள், |
15 |
திருந்து கோல் ஆய் தொடி ஞெகிழின், மருந்தும் உண்டோ, பிரிந்து உறை நாட்டே? |
செலவு உணர்த்திய தோழி, தலைமகளது குறிப்பு அறிந்து, தலைமகனைச் செலவு அழுங்கச் சொல்லியது. - காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 269 | 270 | 271 | 272 | 273 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - செலவு, காய், நீர், சேண்