அகநானூறு - 266. மருதம்
கோடுற நிவந்த நீடு இரும் பரப்பின் அந்திப் பராஅய புதுப் புனல், நெருநை, மைந்து மலி களிற்றின் தலைப் புணை தழீஇ, நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல் இளந் துணை மகளிரொடு ஈர் அணிக் கலைஇ, |
5 |
நீர் பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழைக் கண் நோக்குதொறும் நோக்குதொறும் தவிர்விலையாகி, காமம் கைம்மிகச் சிறத்தலின், நாண் இழந்து, ஆடினை என்ப மகிழ்ந! அதுவே யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன் |
10 |
வாய் வாள் எவ்வி ஏவல் மேவார் நெடு மிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர் அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண், கள்ளுடைப் பெருஞ் சோற்று எல் இமிழ் அன்ன, கவ்வை ஆகின்றால் பெரிதே; இனி அஃது |
15 |
அவலம் அன்றுமன், எமக்கே; அயல கழனி உழவர் கலி சிறந்து எடுத்த கறங்கு இசை வெரீஇப் பறந்த தோகை அணங்குடை வரைப்பகம் பொலிய வந்து இறுக்கும் திரு மணி விளக்கின் அலைவாய்ச் |
20 |
செரு மிகு சேஎயொடு உற்ற சூளே! |
பரத்தையிற் பிரிந்து வந்து கூடிய தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. -பரணர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 264 | 265 | 266 | 267 | 268 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வந்து, நோக்குதொறும்