அகநானூறு - 155. பாலை
அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும் பிறன்கடைச் செலாஅச் செல்வமும், இரண்டும் பொருளின் ஆகும், புனையிழை!' என்று, நம் இருள் ஏர் ஐம்பால் நீவியோரே நோய் நாம் உழக்குவம்ஆயினும், தாம் தம் |
5 |
செய் வினை முடிக்க; தோழி! பல்வயின் பய நிரை சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண் நெடு விளிக் கோவலர் கூவல் தோண்டிய கொடு வாய்ப் பத்தல் வார்ந்து உகு சிறு குழி, நீர் காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது |
10 |
பெருங் களிறு மிதித்த அடியகத்து, இரும் புலி ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர் வழி, செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை மண் ஆர் முழவின் கண்ணகத்து அசைத்த விரல் ஊன்று வடுவின் தோன்றும் |
15 |
மரல் வாடு மருங்கின் மலை இறந்தோரே. |
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 253 | 254 | 255 | 256 | 257 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பாலை