அகநானூறு - 251. பாலை
தூதும் சென்றன; தோளும் செற்றும்; ஓதி ஒண் நுதல் பசலையும் மாயும்; வீங்கு இழை நெகிழச் சாஅய், செல்லலொடு நாம் படர் கூரும் அருந் துயர் கேட்பின், நந்தன் வெறுக்கை எய்தினும், மற்று அவண் |
5 |
தங்கலர் வாழி, தோழி! வெல் கொடித் துனை கால் அன்ன புனை தேர்க் கோசர் தொல் மூதாலத்து அரும் பணைப் பொதியில், இன் இசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க, தெம் முனை சிதைத்த ஞான்றை, மோகூர் |
10 |
பணியாமையின், பகை தலைவந்த மா கெழு தானை வம்ப மோரியர் புனை தேர் நேமி உருளிய குறைத்த இலங்கு வெள் அருவிய அறை வாய் உம்பர், மாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானை |
15 |
வாயுள் தப்பிய, அருங் கேழ், வயப் புலி மா நிலம் நௌயக் குத்தி, புகலொடு காப்பு இல வைகும் தேக்கு அமல் சோலை நிரம்பா நீள் இடைப் போகி, அரம் போழ் அவ் வளை நிலை நெகிழ்த்தோரே. |
20 |
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு,தோழி சொல்லியது. - மாமூலனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 249 | 250 | 251 | 252 | 253 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - புனை, தோழி