அகநானூறு - 239. பாலை
அளிதோதானே; எவன் ஆவதுகொல்? மன்றும் தோன்றாது; மரனும் மாயும் 'புலி என உலம்பும் செங் கண் ஆடவர், ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர், எல் ஊர் எறிந்து, பல் ஆத் தழீஇய |
5 |
விளி படு பூசல் வெஞ் சுரத்து இரட்டும் வேறு பல் தேஎத்து ஆறு பல நீந்தி, புள்ளித் தொய்யில், பொறி படு சுணங்கின், ஒள் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம் புல்லென் மாலை, யாம் இவண் ஒழிய, |
10 |
ஈட்டு அருங்குரைய பொருள்வயிற் செலினே, நீட்டுவிர் அல்லிரோ, நெடுந்தகையீர்?' என, குறு நெடும் புலவி கூறி, நம்மொடு நெருநலும் தீம் பல மொழிந்த சிறு நல் ஒருத்தி பெரு நல் ஊரே! |
15 |
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -எயினந்தை மகன் இளங்கீரனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 237 | 238 | 239 | 240 | 241 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பொருள்வயிற்