அகநானூறு - 236. மருதம்
மணி மருள் மலர முள்ளி அமன்ற, துணி நீர், இலஞ்சிக் கொண்ட பெரு மீன் அரி நிறக் கொழுங் குறை வெளவினர் மாந்தி, வெண்ணெல் அரிநர் பெயர்நிலைப் பின்றை, இடை நிலம் நெரிதரு நெடுங் கதிர்ப் பல் சூட்டுப் |
5 |
பனி படு சாய்ப் புறம் பரிப்ப, கழனிக் கருங் கோட்டு மாஅத்து அலங்கு சினைப் புதுப் பூ மயங்கு மழைத் துவலையின் தாஅம் ஊரன் காமம் பெருமை அறியேன், நன்றும் உய்ந்தனென் வாழி, தோழி! அல்கல் |
10 |
அணி கிளர் சாந்தின் அம் பட்டு இமைப்ப, கொடுங் குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை அறியாமையின் அழிந்த நெஞ்சின், 'ஏற்று இயல் எழில் நடைப் பொலிந்த மொய்ம்பின், தோட்டு இருஞ் சுரியல் மணந்த பித்தை, |
15 |
ஆட்டன் அத்தியைக் காணீரோ?' என நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின், 'கடல் கொண்டன்று' என, 'புனல் ஒளித்தன்று' என, கலுழ்ந்த கண்ணள், காதலற் கெடுத்த ஆதிமந்தி போல, |
20 |
ஏதம் சொல்லி, பேது பெரிது உறலே. |
ஆற்றாமை வயிலாகப் புக்க தலைமகன் நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - பரணர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 234 | 235 | 236 | 237 | 238 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - புக்க, ஊரின், நாட்டின்