அகநானூறு - 232. குறிஞ்சி
காண் இனி வாழி, தோழி! பானாள், மழை முழங்கு அரவம் கேட்ட, கழை தின், மாஅல் யானை புலி செத்து வெரீஇ, இருங் கல் விடரகம் சிலம்பப் பெயரும் பெருங் கல் நாடன் கேண்மை, இனியே, |
5 |
குன்ற வேலிச் சிறுகுடி ஆங்கண், மன்ற வேங்கை மண நாட் பூத்த மணி ஏர் அரும்பின் பொன் வீ தாஅய் வியல் அறை வரிக்கும் முன்றில், குறவர் மனை முதிர் மகளிரொடு குரவை தூங்கும் |
10 |
ஆர் கலி விழவுக் களம் கடுப்ப, நாளும், விரவுப் பூம் பலியொடு விரைஇ, அன்னை கடியுடை வியல் நகர்க் காவல் கண்ணி, 'முருகு' என வேலற் தரூஉம். பருவமாகப் பயந்தன்றால், நமக்கே. |
15 |
தோழி தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்,சொல்லியது. - கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 230 | 231 | 232 | 233 | 234 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வியல், தோழி