அகநானூறு - 227. பாலை
'நுதல் பசந்தன்றே; தோள் சாயினவே; திதலை அல்குல் வரியும் வாடின; என் ஆகுவள்கொல் இவள்?' என, பல் மாண் நீர் மலி கண்ணொடு நெடிது நினைந்து ஒற்றி, இனையல் வாழி, தோழி! நனை கவுள் |
5 |
காய் சினம் சிறந்த வாய் புகு கடாத்தொடு முன் நிலை பொறாஅது முரணி, பொன் இணர்ப் புலிக் கேழ் வேங்கைப் பூஞ் சினை புலம்ப, முதல் பாய்ந்திட்ட முழு வலி ஒருத்தல் செந் நிலப் படு நீறு ஆடி, செரு மலைந்து, |
10 |
களம் கொள் மள்ளரின் முழங்கும் அத்தம் பல இறந்து அகன்றனர் ஆயினும், நிலைஇ, நோய் இலராக, நம் காதலர்! வாய் வாள், தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முரசின், வருநர் வரையாப் பெரு நாள் இருக்கை, |
15 |
தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல் இசைப் பிடி மிதி வழுதுணைப் பெரும் பெயர்த் தழும்பன் கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர், விழு நிதி துஞ்சும் வீறு பெறு திரு நகர், இருங் கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து, |
20 |
எல் உமிழ் ஆவணத்து அன்ன, கல்லென் கம்பலை செய்து அகன்றோரே! |
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது; பிரிவின்கண் வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - நக்கீரர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 225 | 226 | 227 | 228 | 229 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வேறுபட்ட, பிரிவின்கண், பெரு, வாய், தோழி