அகநானூறு - 22. குறிஞ்சி
அணங்குடை நெடு வரை உச்சியின் இழிதரும் கணம் கொள் அருவிக் கான் கெழு நாடன் மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல் இது என அறியா மறுவரற் பொழுதில், படியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக் கை |
5 |
நெடு வேட் பேணத் தணிகுவள் இவள்' என, முது வாய்ப் பெண்டிர் அது வாய் கூற, களம் நன்கு இழைத்து, கண்ணி சூட்டி, வள நகர் சிலம்பப் பாடி, பலி கொடுத்து, உருவச் செந்தினை குருதியொடு தூஉய், |
10 |
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடு நாள், ஆரம் நாற, அரு விடர்த் ததைந்த சாரற் பல் பூ வண்டு படச் சூடி, களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின் ஒளித்து இயங்கும் மரபின் வயப் புலி போல, |
15 |
நல் மனை நெடு நகர்க் காவலர் அறியாமை தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப, இன் உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம் மலிந்து, நக்கனென் அல்லெனோ யானே எய்த்த நோய் தணி காதலர் வர, ஈண்டு |
20 |
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே? |
வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்து, தலைமகள் ஆற்றாளாக,தோழி தலைமகனை இயற்பழிப்ப, தலைமகள் இயற்பட மொழிந்தது;தலைமகன் இரவுக்குறி வந்து சிறைப்புறத்தானாக, தோழியாற் சொல்லெடுக்கப்பட்டுத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - வெற
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 20 | 21 | 22 | 23 | 24 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நெடு, தலைமகள், கெழு