அகநானூறு - 218. குறிஞ்சி
'கிளை பாராட்டும் கடு நடை வயக் களிறு முளை தருபு ஊட்டி, வேண்டு குளகு அருத்த, வாள் நிற உருவின் ஒளிறுபு மின்னி, பரூஉ உறைப் பல் துளி சிதறி, வான் நவின்று, பெரு வரை நளிர் சிமை அதிர வட்டித்து, |
5 |
புயல் ஏறு உரைஇய வியல் இருள் நடு நாள், விறல் இழைப் பொலிந்த காண்பு இன் சாயல், தடைஇத் திரண்ட நின் தோள் சேர்பு அல்லதை, படாஅவாகும், எம் கண்' என, நீயும், 'இருள் மயங்கு யாமத்து இயவுக் கெட விலங்கி, |
10 |
வரி வயங்கு இரும் புலி வழங்குநர்ப் பார்க்கும் பெரு மலை விடரகம் வர அரிது' என்னாய், வர எளிதாக எண்ணுதி; அதனால், நுண்ணிதின் கூட்டிய படு மாண் ஆரம் தண்ணிது கமழும் நின் மார்பு, ஒரு நாள் |
15 |
அடைய முயங்கேம்ஆயின், யாமும் விறல் இழை நெகிழச் சாஅய்தும்; அதுவே அன்னை அறியினும் அறிக! அலர் வாய் அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க! வண்டு இறை கொண்ட எரி மருள் தோன்றியொடு, |
20 |
ஒண் பூ வேங்கை கமழும் தண் பெருஞ் சாரல் பகல் வந்தீமே! |
தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால், தலை மகனை வரைவு கடாயது. - கபிலர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 216 | 217 | 218 | 219 | 220 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நின், கமழும், விறல், நாள், இருள், பெரு