அகநானூறு - 216. மருதம்
'நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண் மகள் தான் புனல் அடைகரைப் படுத்த வராஅல், நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு, வஞ்சி விறகின் சுட்டு, வாய் உறுக்கும் தண் துறை ஊரன் பெண்டிர் எம்மைப் |
5 |
பெட்டாங்கு மொழிப' என்ப; அவ் அலர்ப் பட்டனம்ஆயின், இனி எவன் ஆகியர்; கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும், கழனி உழவர் குற்ற குவளையும், கடி மிளைப் புறவின் பூத்த முல்லையொடு, |
10 |
பல் இளங் கோசர் கண்ணி அயரும், மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான் எறிவிடத்து உலையாச் செறி சுரை வெள் வேல் ஆதன் எழினி அரு நிறத்து அழுத்திய பெருங் களிற்று எவ்வம் போல, |
15 |
வருந்துபமாது, அவர் சேரி யாம் செலினே. |
தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப, தனக்குப் பாங்காயினார்க்குப் பரத்தை சொல்லியது. - ஐயூர் முடவனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 214 | 215 | 216 | 217 | 218 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கொள்