அகநானூறு - 215. பாலை
'விலங்கு இருஞ் சிமையக் குன்றத்து உம்பர், வேறு பல் மொழிய தேஎம் முன்னி, வினை நசைஇப் பரிக்கும் உரன் மிகு நெஞ்சமொடு புனை மாண் எஃகம் வல வயின் ஏந்தி, செலல் மாண்பு உற்ற நும்வயின், வல்லே, |
5 |
வலன் ஆக!' என்றலும் நன்றுமன் தில்ல கடுத்தது பிழைக்குவதுஆயின், தொடுத்த கை விரல் கவ்வும் கல்லாக் காட்சி, கொடுமரம் பிடித்த கோடா வன்கண், வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர், |
10 |
ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை, கூர் நுதிச் செவ் வாய் எருவைச் சேவல் படு பிணப் பைந் தலை தொடுவன குழீஇ, மல்லல் மொசிவிரல் ஒற்றி, மணி கொண்டு, வல் வாய்ப் பேடைக்குச் சொரியும் ஆங்கண், |
15 |
கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடு ஒழிந்து இவண் உறைதல் ஆற்றுவோர்க்கே. |
செலவு உணர்த்திய தோழி, தலைமகள் குறிப்பறிந்து, தலைமகனைச் செலவு அழுங்குவித்தது. - இறங்கு குடிக் குன்ற நாடன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 213 | 214 | 215 | 216 | 217 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - செலவு, நெஞ்சமொடு