அகநானூறு - 201. பாலை
அம்ம, வாழி தோழி! 'பொன்னின் அவிர் எழில் நுடங்கும் அணி கிளர் ஓடை வினை நவில் யானை விறற் போர்ப் பாண்டியன் புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை, அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து, |
5 |
தழை அணிப் பொலிந்த கோடு ஏந்து அல்குல் பழையர் மகளிர் பனித் துறைப் பரவ, பகலோன் மறைந்த அந்தி ஆர் இடை, உரு கெழு பெருங் கடல் உவவுக் கிளர்ந்தாங்கு, அலரும் மன்று பட்டன்றே; அன்னையும் |
10 |
பொருந்தாக் கண்ணள், வெய்ய உயிர்க்கும்' என்று எவன் கையற்றனை, இகுளை? சோழர் வெண்ணெல் வைப்பின் நல் நாடு பெறினும், ஆண்டு அமைந்து உறைநர்அல்லர் முனாஅது வான் புகு தலைய குன்றத்துக் கவாஅன், |
15 |
பெருங் கை எண்கின் பேழ்வாய் ஏற்றை இருள் துணிந்தன்ன குவவு மயிர்க் குருளைத் தோல் முலைப் பிணவொடு திளைக்கும் வேனில் நீடிய சுரன் இறந்தோரே. |
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 199 | 200 | 201 | 202 | 203 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பெருங், தோழி