அகநானூறு - 196. மருதம்
நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி பாக்கத்து, நாள் துறைப்பட்ட மோட்டு இரு வராஅல் துடிக்கண் கொழுங் குறை நொடுத்து, உண்டு ஆடி, வேட்டம் மறந்து, துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி ஆம்பல் அகல் இலை, அமலை வெஞ் சோறு |
5 |
தீம் புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து, விடியல் வைகறை இடூஉம் ஊர! தொடுகலம்; குறுக வாரல் தந்தை கண் கவின் அழித்ததன் தப்பல், தெறுவர, ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று, முரண் போகிய, |
10 |
கடுந் தேர்த் திதியன் அழுந்தை, கொடுங் குழை அன்னிமிஞிலியின் இயலும் நின் நலத் தகுவியை முயங்கிய மார்பே. |
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குச் கிழத்தி சொல்லியது. - பரணர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 194 | 195 | 196 | 197 | 198 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், -