அகநானூறு - 182. குறிஞ்சி
பூங் கண் வேங்கைப் பொன் இணர் மிலைந்து, வாங்கு அமை நோன் சிலை எருத்தத்து இரீஇ, தீம் பழப் பலவின் சுளை விளை தேறல் வீளை அம்பின் இளையரொடு மாந்தி, ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட, |
5 |
வேட்டம் போகிய குறவன் காட்ட குளவித் தண் புதல் குருதியொடு துயல் வர, முளவுமாத் தொலைச்சும் குன்ற நாட! அரவு எறி உருமோடு ஒன்றிக் கால் வீழ்த்து உரவு மழை பொழிந்த பானாட் கங்குல், |
10 |
தனியை வந்த ஆறு நினைந்து, அல்கலும், பனியொடு கலுழும் இவள் கண்ணே; அதனால், கடும் பகல் வருதல் வேண்டும் தெய்ய அதிர் குரல் முது கலை கறி முறி முனைஇ, உயர்சிமை நெடுங் கோட்டு உகள, உக்க |
15 |
கமழ் இதழ் அலரி தாஅய் வேலன் வெறி அயர் வியன் களம் கடுக்கும் பெரு வரை நண்ணிய சாரலானே. |
தோழி இரா வருவானைப் 'பகல் வா' என்றது. - கபிலர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 180 | 181 | 182 | 183 | 184 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பகல்