அகநானூறு - 142. குறிஞ்சி
இலமலர் அன்ன அம் செந் நாவின் புலம் மீக்கூறும் புரையோர் ஏத்த, பலர் மேந் தோன்றிய கவி கை வள்ளல் நிறைஅருந் தானை வெல்போர் மாந்தரம் பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற |
5 |
குறையோர் கொள்கலம் போல, நன்றும் உவ இனி வாழிய, நெஞ்சே! காதலி முறையின் வழாஅது ஆற்றிப் பெற்ற கறை அடி யானை நன்னன் பாழி, ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய்க் |
10 |
கூட்டு எதிர்கொண்ட வாய் மொழி மிஞிலி புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர் வெள்ளத் தானை அதிகற் கொன்று, உவந்து ஒள் வாள் அமலை ஆடிய ஞாட்பின், பலர் அறிவுறுதல் அஞ்சி, பைப்பய, |
15 |
நீர்த் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளிச் சூர்ப்புறு கோல் வளை செறித்த முன்கை குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல், இடன் இல் சிறு புறத்து இழையொடு துயல்வர, கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து, |
20 |
உருவு கிளர் ஓவினைப் பொலிந்த பாவை இயல் கற்றன்ன ஒதுக்கினள் வந்து, பெயல் அலைக் கலங்கிய மலைப் பூங் கோதை இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்ப, தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்; |
25 |
வடிப்பு உறு நரம்பின் தீவிய மொழிந்தே. |
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 140 | 141 | 142 | 143 | 144 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வந்து, இயல், தானை, பலர், அன்ன