அகநானூறு - 139. பாலை
துஞ்சுவது போல இருளி, விண் பக இமைப்பது போல மின்னி, உறைக்கொண்டு ஏறுவது போலப் பாடு சிறந்து உரைஇ, நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு, ஆர் தளி பொழிந்த வார் பெயற் கடை நாள்; |
5 |
ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை வான் தோய் உயர் வரை ஆடும் வைகறை, புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலை, தண் நறும் படுநீர் மாந்தி, பதவு அருந்து வெண் புறக்கு உடைய திரிமருப்பு இரலை; |
10 |
வார் மணல் ஒரு சிறைப் பிடவு அவிழ் கொழு நிழல், காமர் துணையொடு ஏமுற வதிய; அரக்கு நிற உருவின் ஈயல் மூதாய் பரப்பியவைபோற் பாஅய், பல உடன் நீர் வார் மருங்கின் ஈரணி திகழ; |
15 |
இன்னும் வாரார் ஆயின் நன்னுதல்! யாதுகொல் மற்றுஅவர் நிலையே? காதலர் கருவிக் கார்இடி இரீஇய பருவம் அன்று, அவர், 'வருதும்' என்றதுவே. |
பிரிவிடை மெலிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - இடைக்காடனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 137 | 138 | 139 | 140 | 141 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வார், வெண், நாள்