அகநானூறு - 132. குறிஞ்சி
ஏனலும் இறங்கு குரல் இறுத்தன; நோய் மலிந்து, ஆய்கவின் தொலைந்த, இவள் நுதலும்; நோக்கி ஏதில மொழியும், இவ் ஊரும்; ஆகலின், களிற்று முகம் திறந்த கவுளுடைப் பகழி, வால் நிணப் புகவின், கானவர் தங்கை |
5 |
அம் பணை மென் தோள் ஆய் இதழ் மழைக் கண் ஒல்கு இயற் கொடிச்சியை நல்கினைஆயின், கொண்டனை சென்மோ நுண் பூண் மார்ப! துளிதலைத் தலைஇய சாரல் நளி சுனைக் கூம்பு முகை அவிழ்த்த குறுஞ் சிறைப் பறவை |
10 |
வேங்கை விரி இணர் ஊதி, காந்தள் தேனுடைக் குவிகுலைத் துஞ்சி, யானை இருங் கவுட் கடாஅம் கனவும், பெருங் கல் வேலி, நும் உறைவு இன் ஊர்க்கே. |
தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, தலைமகனை எதிர்ப்பட்டு நின்று,வரைவு கடாயது. - தாயங்கண்ணனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 130 | 131 | 132 | 133 | 134 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், -