அகநானூறு - 122. குறிஞ்சி
இரும் பிழி மகாஅர் இவ் அழுங்கல் மூதூர் விழவு இன்றுஆயினும் துஞ்சாது ஆகும்; மல்லல் ஆவண மறுகு உடன் மடியின், வல் உரைக் கடுஞ் சொல் அன்னை துஞ்சாள்; பிணி கோள் அருஞ் சிறை அன்னை துஞ்சின், |
5 |
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்; இலங்குவேல் இளையர் துஞ்சின், வை எயிற்று வலம் சுரித் தோகை ஞாளி மகிழும்; அர வாய் ஞமலி மகிழாது மடியின், பகல் உரு உறழ நிலவுக் கான்று விசும்பின் |
10 |
அகல்வாய் மண்டிலம் நின்று விரியும்மே; திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின், இல் எலி வல்சி வல் வாய்க் கூகை கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்; வளைக்கண் சேவல் வாளாது மடியின், |
15 |
மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும்; எல்லாம் மடிந்தகாலை, ஒரு நாள் நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே; அதனால், அரி பெய் புட்டில் ஆர்ப்பப் பரி சிறந்து, ஆதி போகிய பாய்பரி நன் மா |
20 |
நொச்சி வேலித் தித்தன் உறந்தைக் கல் முதிர் புறங்காட்டு அன்ன பல் முட்டின்றால் தோழி! நம் களவே. |
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய், தலைமகன் சொற்றது; தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - பரணர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 120 | 121 | 122 | 123 | 124 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - மடியின், தலைமகன், தோழி, அன்னை, சொல், துஞ்சின்