அகநானூறு - 100. நெய்தல்
அரையுற்று அமைந்த ஆரம் நீவி, புரையப் பூண்ட கோதை மார்பினை, நல் அகம் வடுக் கொள முயங்கி, நீ வந்து, எல்லினில் பெயர்தல் எனக்குமார் இனிதே. பெருந் திரை முழக்கமொடு இயக்கு அவிந்திருந்த |
5 |
கொண்டல் இரவின் இருங் கடல் மடுத்த கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண் சுடர் ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை, ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த ஓடை ஒண் சுடர் ஒப்பத் தோன்றும் |
10 |
பாடுநர்த் தொடுத்த கை வண் கோமான், பரியுடை நல் தேர்ப் பெரியன், விரிஇணர்ப் புன்னைஅம் கானல் புறந்தை முன்துறை வம்ப நாரைஇனன் ஒலித்தன்ன அம்பல் வாய்த்த தெய்ய தண் புலர் |
15 |
வைகுறு விடியல் போகிய எருமை நெய்தல் அம் புது மலர் மாந்தும் கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊரே! |
தோழி வரைவு கடாயது. - உலோச்சனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 98 | 99 | 100 | 101 | 102 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - சுடர், நெய்தல்