முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » வைணவ இலக்கியங்கள் » நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் » ஸ்ரீநம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - ஸ்ரீநம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி
ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
திருவாய் மொழி நான்காம் பத்து
3123 |
ஒருநா யகமாய் ஓட,வுலகுட னாண்டவர், கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர், பெருநாடு காண இம்மையிலேபிச்சை தாம்கொள்வர், திருநாரணன்தாள் காலம் பெறச்சிந்தித் துய்ம்மினோ. |
1.1 |
3124 |
உய்ம்மின் திறைகொணர்ந் தென்றுலகாண்டவர், இம்மையே தம்மின் சுவைமட வாரைப்பிறர் கொள்ளத் தாம்விட்டு வெம்மி னொளிவெயில் கானகம்போய்க்குமை தின்பர்கள், செம்மின் முடித்திரு மாலைவிரைந்தடி சேர்மினோ. |
1.2 |
3125 |
அடிசேர் முடியின ராகியரசர்கள் தாம்தொழ, இடிசேர் முரசங்கள் முற்றத்தியம்ப இருந்தவர், பொடிசேர் துகளாய்ப் போவர்களாதலின் நொக்கென கடிசேர் துழாய்முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ. |
1.3 |
3126 |
நினைப்பான் புகில்கடல் எக்கலின் நுண்மண லிற்பலர், எனைத்தோ ருகங்களும் இவ்வுல காண்டு கழிந்தவர், மனைப்பால் மருங்கற மாய்தலல்லால்மற்றுக் கண்டிலம், பனைத்தாள் மதகளி றட்டவன் பாதம் பணிமினோ. |
1.4 |
3127 |
பணிமின் திருவருள் என்னும்அஞ்சீதப் பைம்பூம்பள்ளி, அணிமென் குழலார் இன்பக்கலவி அமுதுண்டார், துணிமுன்பு நாலப்பல் லேழையர் தாமிழிப் பச்செல்வர், மணிமின்னு மேனிநம் மாயவன் பேர்சொல்லி வாழ்மினோ. |
1.5 |
3128 |
வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்துமாய்ந்து, ஆழ்ந்தாரென் றல்லால் அன்று முதலின் றறுதியா, வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பரென் பதில்லை நிற்குறில், ஆழ்ந்தார் கடல்பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ. |
1.6 |
3129 |
ஆமின் சுவையவை ஆறொடடிசிலுண் டார்ந்தபின், தூமென் மொழிமட வாரிரக்கப்பின்னும் துற்றுவார், ஈமின் எமக்கொரு துற் றென்றிடறுவ ராதலின், கோமின் துழாய்முடி ஆதியஞ்சோதி குணங்களே. |
1.7 |
3130 |
குணங்கொள் நிறைபுகழ் மன்னர்க்கொடைக்கடன் பூண்டிருந்து, இணங்கி யுலகுட னாக்கிலும் ஆங்கவ னையில்லார், மணங்கொண்ட கோபத்து மன்னியு மீள்வர்கள் மீள்வில்லை, பணங்கொள் அரவணை யான்திரு நாமம் படிமினோ. |
1.8 |
3131 |
படிமன்னு பல்கலன் பற்றோடறுத்துஐம் புலன்வென்று, செடிமன்னு காயம்செற்றார்களு மாங்கவ னையில்லார், குடிமன்னு மின்சுவர்க்க மெய்தியுமீள்வர்கள் மீள்வில்லை, கொடிமன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ. |
1.9 |
3132 |
குறுக மிகவுணர் வத்தொடு நோக்கியெல் லாம்விட்ட, இறுக லிறப்பென்னும் ஞானிக்கும் அப்பய னில்லையேல், சிறுக நினைவதோர் பாசமுண்டாம்பின்னும் வீடில்லை, மறுபகலில் ஈசனைப் பற்றி விடாவிடில் வீடஃதே. |
1.10 |
3133 |
அஃதே உய்யப் புகுமாறென்று கண்ணன் கழல்கள்மேல், கொய்பூம் பொழில்சூழ் குருகூர்ச்சடகோபன் குற்றேவல், செய்கோலத் தாயிரம் சீர்த்தொடைப்பாடல் இவைபத்தும், அஃகாமற் கற்பவர் ஆழ்துயர் போயுய்யற் பாலரே. |
1.11 |
3134 |
பாலனா யேழுல குண்டு பரிவின்றி, ஆலிலை யன்னவ சஞ்செய்யும் அண்ணலார், தாளிணை மேலணி தண்ணந் துழாயென்றே மாலுமால், வல்வினை யேன்மட வல்லியே. |
2.1 |
3135 |
வல்லிசேர் நுண்ணிடை யாய்ச்சியர் தம்மொடும், கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர், நல்லடி மேலணி நாறு துழாயென்றே சொல்லுமால், சூழ்வினை யாட்டியேன் பாவையே. |
2.2 |
3136 |
பாவியல் வேதநன் மாலை பலகொண்டு, தேவர்கள் மாமுனி வரிறைஞ் சநின்ற சேவடி மேலணி செம்பொற் றுழாயென்றே கூவுமால், கோள்வினை யாட்டியேன் கோதையே. |
2.3 |
3137 |
கோதில வண்புகழ் கொண்டு சமயிகள், பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான்பரன், பாதங்கள் மேலணி பைம்பொற் றுழாயென்றே ஓதுமால், ஊழ்வினை யேன்தடந் தோளியே. |
2.4 |
3138 |
தோளிசேர் பின்னை பொருட்டெரு தேழ்தழீஇ க் கோளியார் கோவல னார்க்குடக் கூத்தனார், தாளிணை மேலணி தண்ணந்து ழாயென்றே நாளுநாள், நைகின்ற தால்எ ன்தன் மாதரே. |
2.5 |
3139 |
மாதர்மா மண்மடந் தைபொருட் டேனமாய், ஆதியங் காலத் தகலிடம் கீண்டவர், பாதங்கள் மேலணி பைம்பொற் றுழாயென்றே ஓதும்மால், எய்தினள் என்தன் மடந்தையே. |
2.6 |
3140 |
மடந்தையை வண்கம லத்திரு மாதினை, தடங்கொள்தார் மார்பினில் வைத்தவர் தாளின்மேல், வடங்கொள்பூந் தண்ணந் துழாய்மலர்க் கேயிவள் மடங்குமால், வாணுத லீர்.என் மடக்கொம்பே. |
2.7 |
3141 |
கொம்புபோல் சீதை பொருட்டிலங் கைநகர் அம்பெரி யுய்த்தவர் தாளிணை மேலணி, வம்பவிழ் தண்ணந்து ழாய்மலர்க் கேயிவள் நம்புமால், நானிதற் கென்செய்கேன் நங்கைமீர். |
2.8 |
3142 |
நங்கைமீர். நீரும்ஒ ர் பெண்பெற்று நல்கினீர், எங்ஙனே சொல்லுகேன் யான்பெற்ற ஏழையை, சங்கென்னும் சக்கர மென்னும் துழாயென்னும், இங்ஙனே சொல்லும் இராப்பகல் என்செய்கேன்? |
2.9 |
3143 |
என்செய்கேன் என்னுடைப் பேதையென் கோமளம், என்சொல்லும் என்வச முமல்லள் நங்கைமீர், மின்செய்பூண் மார்பினன் கண்ணன் கழல்துழாய், பொன்செய்பூண் மென்முலைக் கென்று மெலியுமே. |
2.10 |
3144 |
மெலியுநோய் தீர்க்கும்நங் கண்ணன் கழல்கள்மேல், மலிபுகழ் வண்குரு கூர்ச்சட கோபன்சொல், ஒலிபுகழ் ஆயிரத் திப்பத்தும் வல்லவர், மலிபுகழ் வானவர்க் காவர்நற் கோவையே. |
2.11 |
3145 |
கோவை வாயாள் பொருட்டேற்றின் எருத்தம் இறுத்தாய், மதிளிலங்கைக் கோவை வீயச் சிலைகுனித்தாய். குலநல் யானை மருப்பொசித்தாய், பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கே னேலும்,நின் பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்தென் னெஞ்சமே. |
3.1 |
3146 |
பூசும் சாந்தென் னெஞ்சமே புனையும் கண்ணி எனதுடைய, வாச கம்செய் மாலையே வான்பட் டாடை யுமஃதே, தேச மான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே, ஈசன் ஞால முண்டுமிழ்ந்த எந்தை யேக மூர்த்திக்கே. |
3.2 |
3147 |
ஏக மூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி பலமூர்த்தி ஆகி, ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி, நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாரா யணனே,உன் ஆகம் முற்றும் அகத்தடக்கி ஆவி யல்லல் மாய்த்ததே. |
3.3 |
3148 |
மாய்த்தல் எண்ணி வாய்முலை தந்த மாயப் பேயுயிர் மாய்த்த, ஆய மாயனே. வாம னனே மாதவா, பூத்தண் மாலை கொண்டுன்னைப் போதால் வணங்கே னேலும்,நின் பூத்தண் மாலை நெடுமுடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே. |
3.4 |
3149 |
கண்ணி யெனதுயிர் காதல் கனகச் சோதி முடிமுதலா, எண்ணில் பல்க லன்களும் ஏலு மாடை யுமஃதே, நண்ணி மூவு லகும்நவிற்றும் கீர்த்தி யுமஃதே, கண்ண னெம்பி ரானெம்மான் கால சக்கரத் தானுக்கே. |
3.5 |
3150 |
கால சக்க ரத்தோடு வெண்சங் கம்கை யேந்தினாய், ஞால முற்று முண்டுமிழ்ந்த நாரா யணனே. என்றென்று, ஓல மிட்டு நானழைத்தால் ஒன்றும் வாரா யாகிலும், கோல மாமென் சென்னிக்குன் கமலம் அன்ன குரைகழலே. |
3.6 |
3151 |
குரைக ழல்கள் நீட்டிமண் கொண்ட கோல வாமனா, குரைக ழல்கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே, விரைகொள் பூவும் நீரும்கொண்டேத்த மாட்டே னேலும்,உன் உரைகொள் சோதித் திருவுருவம் என்ன தாவி மேலதே. |
3.7 |
3152 |
என்ன தாவி மேலையாய் ஏர்கொள் ஏழு லகமும், துன்னி முற்று மாகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய், உன்ன தென்ன தாவியும் என்ன துன்ன தாவியும் இன்ன வண்ண மேநின்றாய் என்று ரைக்க வல்லேனே? |
3.8 |
3153 |
உரைக்க வல்லேன் அல்லேனுன் உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின் கரைக்கண் என்று செல்வன்நான்? காதல் மையல் ஏறினேன், புரைப்பி லாத பரம்பரனே. பொய்யி லாத பரஞ்சுடரே, இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த யானும் ஏத்தினேன். |
3.9 |
3154 |
யானும் ஏத்தி ஏழுலகும் முற்றும் ஏத்தி, பின்னையும் தானும் ஏத்தி லும்தன்னை ஏத்த ஏத்த எங்கெய்தும், தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்திப்ப, யானு மெம்பி ரானையே ஏத்தி னேன்யா னுய்வானே. |
3.10 |
3155 |
உய்வு பாயம் மற்றின்மை தேறிக் கண்ணன் ஒண்கழல்கள்மேல் செய்ய தாம ரைப்பழனத் தென்னன் குருகூர்ச் சடகோபன், பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள், வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே. |
3.11 |
3156 |
மண்ணை யிருந்து துழாவி வாமனன் மண்ணிது என்னும், விண்ணைத் தொழுதவன் மேவு வைகுந்த மென்றுகை காட்டும், கண்ணையுள் நீர்மல்க நின்று கடல்வண்ணன் என்னும் அன்னே.என் பெண்ணைப் பெருமயல் செய்தாற் கென்செய்கேன் பெய்வளை யீரே |
4.1 |
3157 |
பெய்வளைக் கைகளைக் கூப்பிப் பிரான்கிடக் கும்கடல் என்னும், செய்யதோர் ஞாயிற்றைக் காட்டிச் சிரீதரன் மூர்த்தியீ தென்னும், நையும்கண் ணீர்மல்க நின்று நாரணன் என்னும்அ ன் னே,என் தெய்வ வுருவில் சிறுமான் செய்கின்ற தொன்றறி யேனே. |
4.2 |
3158 |
அறியும்செந் தீயைத் தழுவி அச்சுதன் என்னும்மெய் வேவாள், எறியும்தண் காற்றைத் தழுவி என்னுடைக் கோவிந்தன் என்னும், வெறிகொள் துழாய்மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்ற தென்கண்ணுக் கொன்றே. |
4.3 |
3159 |
ஒன்றிய திங்களைக் காட்டி ஒளிமணி வண்ணனே என்னும் நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே. வா என்று கூவும், நன்றுபெய் யும்மழை காணில் நாரணன் வந்தான் என் றாலும், என்றின மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத் தையே. |
4.4 |
3160 |
கோமள வான்கன்றைப் புல்கிக் கோவிந்தன் மேய்த்தன என்னும், போமிள நாகத்தின் பின்போய் அவன்கிடக் கையீ தென்னும், ஆமள வொன்றும் அறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற, கோமள வல்லியை மாயோன் மால்செய்து செய்கின்ற கூத்தே. |
4.5 |
3161 |
கூத்தர் குடமெடுத் தாடில் கோவிந்த னாம் எனா ஓடும், வாய்த்த குழலோசை கேட்கில் மாயவன் என்றுமை யாக்கும், ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில் அவனுண்ட வெண்ணெயீ தென்னும், பேய்ச்சி முலைசுவைத் தாற்கென் பெண்கொடி யேறிய பித்தே. |
4.6 |
3162 |
ஏறிய பித்தினோ டெல்லா வுலகும்கண் ணன்படைப் பென்னும் நீறுசெவ் வேயிடக் காணில் நெடுமால் அடியார் என் றோடும், நாறு துழாய்மலர் காணில் நாரணன் கண்ணியீ தென்னும், தேறியும் தேறாது மாயோன் திறத்தன ளேயித் திருவே. |
4.7 |
3163 |
திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும், உருவுடை வண்ணங்கள் காணில் உலகளந் தான் என்று துள்ளும், கருவுடைத் தேவில்க ளெல்லாம் கடல்வண்ணன் கோயிலே என்னும் வெருவிலும் வீழ்விலும் ஓவாக்f கண்ணன் கழல்கள் விரும்புமே. |
4.8 |
3164 |
விரும்பிப் பகைவரைக் காணில் வியலிடம் உண்டானே. என்னும், கரும்பெரு மேகங்கள் காணில் கண்ணன் என் றேறப் பறக்கும், பெரும்புல ஆநிரை காணில் பிரானுளன் என்றுபின் செல்லும், அரும்பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின் றானே. |
4.9 |
3165 |
அயர்க்கும்சுற் றும்பற்றி நோக்கும் அகலவே நீள் நோக்குக் கொள்ளும், வியர்க்கும் மழைக்கண் துளும்ப வெவ்வுயிர்க் கொள்ளும்மெய் சோரும், பெயர்த்தும் கண் ணா. என்று பேசும், பெருமானே. வா. என்று கூவும், மயல்பெருங் காதலென் பேதைக் கென்செய்கேன் வல்வினை யேனே. |
4.10 |
3166 |
வல்வினை தீர்க்கும் கண்ணனை வண்குரு கூர்ச்சட கோபன், சொல்வினை யால்சொன்ன பாடல் ஆயிரத் துள்ளிவை பத்தும், நல்வினை யென்றுகற் பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணி, தொல்வினை தீரவெல் லாரும் தொழுதெழ வீற்றிருப் பாரே. |
4.11 |
3167 |
வீற்றிருந் தேழுலகும் தனிக்கோல் செல்ல, வீவில்சீர், ஆற்றல்மிக் காளும் அம்மானைவெம்மா பிளந்தான்தன்னை, போற்றி யென்றே கைகளாரத் தொழுது சொல்மாலைகள், ஏற்ற நோற்றேற் கினியென்னகுறை யெழுமையுமே? |
5.1 |
3168 |
மைய கண்ணாள் மலர்மேலுறைவா ளுறைமார்பினன், செய்ய கொலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை மொய்ய சொல்லா லிசைமாலைகளேத்தி யுள்ளப் பெற்றேன், வெய்ய நோய்கள் முழுதும் வியன்ஞாலத்து வீயவே. |
5.2 |
3169 |
வீவி லின்ப மிகஎல்லை நிகழ்ந்தநம் அச்சுதன், வீவில் சீரன் மலர்க்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை, வீவில் காலம் இசைமாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன், வீவி லின்பமிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே. |
5.3 |
3170 |
மேவி நின்று தொழுவார் வினைபோக மேவும்பிரான், தூவியம் புள்ளு டையான் அடலாழியம் மான்றன்னை, நாவிய லாலிசை மாலைக ளேத்திநண் ணப்பெற்றேன், ஆவியென் னாவியை யானறியேன்செய்த வாற்றையே. |
5.4 |
3171 |
ஆற்ற நல்ல வகைகாட்டும் அம்மானை, அமரர்தம் ஏற்றை யெல்லாப் பொருளும் விரித்தானை எம்மான்தன்னை, மாற்ற மாலை புனைந்தேத்தி நாளும் மகிழ்வெய்தினேன், காற்றின் முன்னம் கடுகி வினைநோய்கள் கரியவே. |
5.5 |
3172 |
கரிய மேனிமிசை வெளிய நீறுசிறி தேயிடும், பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை, உரிய சொல்லா லிசைமாலைகள் ஏத்தியுள்ளப் பெற்றேற்கு, அரிய துண்டோ எனக்கின்று தொட்டுமினி யென்றுமே? |
5.6 |
3173 |
என்றும் ஒன்றாகி யொத்தாரும்மிக்கார்களும், தன்றனக் கின்றி நின்றானை யெல்லாவுலகும் உடையான் தன்னை, குன்ற மொன்றால் மழைகாத்தபிரானைச்சொன் மாலைகள், நன்று சூட்டும் விதியெய்தினம் என்ன குறைநமக்கே? |
5.7 |
3174 |
நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை, ஞாலத்தார் தமக்கும் வானத் தவர்க்கும் பெருமானை, தண்டாமரை சுமக்கும் பாதப் பெருமானைச் சொன்மாலைகள், சொல்லுமா றமைக்க வல்லேற் கினியாவர் நிகரகல் வானத்தே? |
5.8 |
3175 |
வானத்தும் வானத்துள் ளும்பரும் மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த் தானத்தும், எண்டிசை யும்தவி ராதுநின் றான்தன்னை, கூனற்சங் கத்தடக் கையவனைக் குடமாடியை வானக் கோனைக், கவிசொல்ல வல்லேற் கினிமா றுண்டோ ? |
5.9 |
3176 |
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும்நின்றும், கொண்ட கோலத் தொடுவீற் றிருந்தும் மணங்கூடியும், கண்ட வாற்றால் தனக்கே யுலகென நின்றான்தன்னை, வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க் கின்பமாரியே. |
5.10 |
3177 |
மாரி மாறாத தண்ணம்மலை வேங்கடத் தண்ணலை, வாரி வாறாத பைம்பூம் பொழில்சூழ் குருகூர்நகர், காரி மாறன் சடகோபன் சொல்லாயிரத் திப்பத்தால், வேரி மாறாத பூமே லிருப்பாள் வினைதீர்க்குமே. |
5.11 |
3178 |
தீர்ப்பாரை யாமினி யெங்ஙனம் நாடுதும் அன்னைமீர், ஓர்ப்பாலிவ் வொண்ணுதல் உற்றநன் னோயிது தேறினோம், போர்ப்பாகு தான்செய்தன் றைவரை வெல்வித்த, மாயப்போர்த் தேர்ப்பாக னார்க்கிவள் சிந்தை துழாய்த்திசைக் கின்றதே. |
6.1 |
3179 |
திசைக்கின்ற தேயிவள் நோயிது மிக்க பெருந்தெய்வம், இசைப்பின்றி நீரணங் காடும் இளந்தெய்வம் அன்றிது, திசைப்பின்றி யேசங்கு சக்கர மென்றிவள் கேட்க,நீர் இசைக்கிற்றி ராகில்நன் றேயில் பெறுமிது காண்மினே. |
6.2 |
3180 |
இதுகாண்மின் அன்னைமீர். இக்கட்டு விச்சிசொற் கொண்டு,நீர் எதுவானும் செய்தங்கோர் கள்ளும் இறைச்சியும் தூவேல்மின், மதுவார் துழாய்முடி மாயப் பிரான்கழல் வாழ்த்தினால், அதுவே யிவளுற்ற நோய்க்கும் அருமருந் தாகுமே. |
6.3 |
3181 |
மருந்தாகும் என்றங்கோர் மாய வலவைசொற் கொண்டு,நீர் கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் களனிழைத் தென்பயன்? ஒருங்காக வேயுல கேழும் விழுங்கி உமிழ்ந்திட்ட, பெருந்தெவன் பேர்சொல்ல கிற்கில் இவளைப் பெறுதிரே. |
6.4 |
3182 |
இவளைப் பெறும்பரி சிவ்வணங் காடுதல் அன்றந்தோ, குவளைத் தடங்கண்ணும் கோவைச்செவ்வாயும் பயந்தனள், கவளக் கடாக்களி றட்டபிரான்திரு நாமத்தால், தவளப் பொடிக்கொண்டு நீரிட்டிடுமின் தணியுமே. |
6.5 |
3183 |
தணியும் பொழுதில்லை நீரணங்காடுதிர் அன்னைமீர், பிணியும் ஒழிகின்ற தில்லை பெருகு மிதுவல்லால், மணியின் அணிநிற மாயன் தமரடி நீறுகொண்டு, அணிய முயலின்மற் றில்லைகண்டீரிவ் வணங்குக்கே. |
6.6 |
3184 |
அணங்குக் கருமருந் தென்றங்கோர் ஆடும்கள் ளும்பராய் துணங்கை யெறிந்துநுந் தோள்குலைக்கப்படும் அன்னைமீர், உணங்கல் கெடக்கழு தையுதடாட்டம்கண் டென்பயன்? வணங்கீர்கள் மாயப் பிரான்தமர் வேதம்வல் லாரையே. |
6.7 |
3185 |
வேதம்வல் லார்களைக் கொண்டுவிண்ணோர்பெரு மான்திருப் பாதம் பணிந்து,இவள் நோயிது தீர்த்துக்கொள் ளாதுபோய் ஏதம் பறைந்தல்ல செய்துகள்ளூடு கலாய்த்தூய், கீத முழவிட்டு நீர் அணங் காடுதல் கீழ்மையே. |
6.8 |
3186 |
கீழ்மையினா லங்கோர் கீழ்மகனிட்ட முழவின்கீழ், நாழ்மை பலசொல்லி நீரணங்காடும்பொய் காண்கிலேன், ஏழ்மைப் பிறப்புக்கும் சேமமிந் நோய்க்குமீ தேமருந்து, ஊழ்மையில் கண்ணபி ரான்கழல் வாழ்த்துமின் உன்னித்தே. |
6.9 |
3187 |
உன்னித்து மற்றொரு தெய்வம்தொழாளவ னையல்லால், நும்மிச்சை சொல்லிநும் தோள்குலைக்கப்படும் அன்னைமீர், மன்னப் படும்மறை வாணனை வண்துவ ராபதி மன்னனை, ஏத்துமின் ஏத்துதலும்தொழு தாடுமே. |
6.10 |
3188 |
தொழுதாடி தூமணி வண்ணனுக்காட்செய்து நோய்தீர்ந்த வழுவாத தொல்புகழ் வண்குருகூர்ச்சட கோபன், சொல் வழுவாத ஆயிரத் துள்ளிவை பத்து வெறிகளும், தொழுதாடிப் பாடவல் லார்துக்க சீலம் இலர்களே. |
6.11 |
3189 |
சீலம் இல்லாச் சிறிய னேலும் செய்வினை யோபெரிதால், ஞாலம் உண்டாய் ஞானமூர்த்தி நாராய ணா. என்றென்று, காலந் தோறும் யானிருந்து கைதலை பூசலிட்டால் கோல மேனி காண வாராய் கூவியும் கொள்ளாயே. |
7.1 |
3190 |
கொள்ள மாளா இன்ப வெள்ளம் கொதில தந்திடும்,என் வள்ள லேயோ. வையங் கொண்ட வாமனா வோ. என்றென்று, நள்ளி ராவும் நண்பகலும் நானிருந் தோலமிட்டால், கள்ள மாயா. உன்னை யென்கண் காணவந் தீயாயே. |
7.2 |
3191 |
ஈவி லாத தீவினைகள் எத்தனை செய்த னன்கொல்? தாவி வையம் கொண்ட எந்தாய். தாமோதரா. என்றென்று கூவிக் கூவி நெஞ்சுருகிக் கண்பனி சோர நின்றால், பாவி நீயென் றொன்று சொல்லாய் பாவியேன் காணவந்தே. |
7.3 |
3192 |
காண வந்தென கண்முகப்பே தாமரைக் கண்பிறழ, ஆணி செம்பொன் மேனியெந்தாய். நின்றருளாய் என்றென்று, நாண மில்லாச் சிறுதகையேன் நானிங் கலற்றுவதென், பேணி வானோர் காணமாட்டாப் பீடுடை யப்பனையே? |
7.4 |
3193 |
அப்ப னே.அட லாழியானே, ஆழ்கட லைக்கடைந்த துப்ப னே,உன் தோள்கள் நான்கும் கண்டிடக்கூடுங் கொலென்று, எப்பொ ழுதும் கண்ண நீர்கொண் டாவி துவர்ந்துவர்ந்து, இப்போ ழுதே வந்தி டாயென் றேழையேன் நோக்குவனே. |
7.5 |
3194 |
நோக்கி நோக்கி உன்னைக் காண்பான் யானென தாவியுள்ளே, நாக்கு நீள்வன் ஞான மில்லை நாடோ று மென்னுடைய, ஆக்கை யுள்ளூ மாவி யுள்ளும் அல்லபு றத்தினுள்ளும், நீக்க மின்றி யெங்கும் நின்றாய். நின்னை யறிந்தறிந்தே. |
7.6 |
3195 |
அறிந்த றிந்து தேறித் தேறி யானென தாவியுள்ளே, நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மல மாகவைத்து, பிறந்தும் செத்தும் நின்றிடறும் பேதைமை தீர்ந்தொ ழிந்தேன் நறுந்து ழாயின் கண்ணி யம்மா. நானுன்னைக் கண்டுகொண்டே. |
7.7 |
3196 |
கண்டு கொண்டென் கைக ளார நின்திருப் பாதங்கள்மேல், எண்டி சையு முள்ள பூக்கொண் டேத்தி யுகந்துகந்து, தொண்ட ரோங்கள் பாடி யாடச் சூழ்கடல் ஞாலத்துள்ளே, வண்டு ழாயின் கண்ணி வேந்தே. வந்திட கில்லாயே. |
7.8 |
3197 |
இடகி லேனோன் றட்ட கில்லேன் ஐம்புலன் வெல்லகில்லேன், கடவ னாகிக் காலந் தோறும் பூப்பறித் தேத்தகில்லேன், மடவன் நெஞ்சம் காதல் கூர வல்வினை யேன்அயர்ப்பாய், தடவு கின்றே னெங்குக் காண்பன் சக்கரத் தண்ணலையே? |
7.9 |
3198 |
சக்க ரத்தண் ணலேயென்று தாழ்ந்து கண்ணீர் ததும்ப, பக்கம் நோக்கி நின்ற லந்தேன் பாவியேன் காண்கின்றிலேன், மிக்க ஞான மூர்த்தி யாய வேத விளக்கினை,என் தக்க ஞானக் கண்க ளாலே கண்டு தழுவுவனே. |
7.10 |
3199 |
தழுவி நின்ற காதல்தன்னால் தாமரைக் கண்ணன்தன்னை, குழுவு மாடத் தென்குரு கூர்மா றன்சட கோபன்,சொல் வழுவி லாத வொண்தமிழ்கள் ஆயிரத்து ளிப்பத்தும், தழுவப் பாடி யாட வல்லார் வைகுந்த மேறுவரே. |
7.11 |
3200 |
ஏறாளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும், கூறாளும் தனியுடம்பன் குலங்குலமா அசுரர்களை, நீறாகும் படியாக நிருமித்துப் படைதொட்ட, மாறாளன் கவராத மணிமாமை குறைவிலமே. |
8.1 |
3201 |
மணிமாமை குறைவில்லா மலர்மாதர் உறைமார்வன், அணிமானத் தடவரைத்தோள் அடலாழித் தடக்கையன், பணிமானம் பிழையாமே யடியேனைப் பணிகொண்ட, மணிமாயன் கவராத மடநெஞ்சால் குறைவிலமே. |
8.2 |
3202 |
மடநெஞ்சால் குறைவில்லா மகள்தாய்செய் தொருபேய்ச்சி, விடநஞ்ச முலைசுவைத்த மிகுஞானச் சிறுகுழவி, படநாகத் தணைக்கிடந்த பருவரைத்தோள் பரம்புருடன், நெடுமாயன் கவராத நிறையினால் குறைவிலமே. |
8.3 |
3203 |
நிறையினாற் குறைவில்லா நெடும்பணைத்தோள் மடப்பின்னை, பொறையினால் முலையணைவான் பொருவிடைஏழ் அடர்த்துகந்த, கறையினார் துவருடுக்கை கடையாவின் கழிகோல்கை, சறையினார் கவராத தளிர்நிறத்தால் குறைவிலமே. |
8.4 |
3204 |
தளிர்நிறத்தால் குறைவில்லாத் தனிச்சிறையில் விளப்புற்ற, கிளிமொழியாள் காரணமாக் கிளரரக்கன் நகரெரித்த, களிமலர்த் துழாயலங்கல் கமழ்முடியன் கடல்ஞாலத்து, அளிமிக்கான் கவராத அறிவினால் குறைவிலமே. |
8.5 |
3205 |
அறிவினால் குறைவில்லா அகல்ஞாலத் தவரறிய, நெறியெல்ல மெடுத்துரைத்த நிறைஞானத் தொருமூர்த்தி, குறியமாண் உருவாகிக் கொடுங்கோளால் நிலங்கொண்ட, கிறியம்மான் கவராத கிளரொளியால் குறைவிலமே. |
8.6 |
3206 |
கிளரொளியால் குறைவில்லா அரியுருவாய்க் கிளர்ந்தெழுந்து, கிளரொளிய இரணியன தகல்மார்பம் கிழிந்துகந்த, வளரொளிய கனலாழி வலம்புரியன் மணிநீல, வளரொளியான் கவராத வரிவளையால் குறைவிலமே. |
8.7 |
3207 |
வரிவளையால் குறைவில்லாப் பெருமுழக்கால் அடங்காரை, எரியழலம் புகவூதி யிருநிலமுன் துயர்தவிர்த்த, தெரிவரிய சிவன்பிரமன் அமரர் கோன் பணிந்தேத்தும், விரிபுகழான் கவராத மேகலையால் குறைவிலமே. |
8.8 |
3208 |
மேகலையால் குறைவில்லா மெலிவுற்ற அகலல்குல், போகமகள் புகழ்த்தந்தை விறல்வாணன் புயம்துணித்து, நாகமிசைத் துயில்வான்போல் உலகெல்லாம் நன்கொடுங்க, யோகணைவான் கவராத வுடம்பினால் குறைவிலமே. |
8.9 |
3209 |
உடம்பினால் குறைவில்லா உயிர்பிரிந்த மலைத்துண்டம், கிடந்தனபோல் துணிபலவா அசுரர் குழாம் துணித்துகந்த, தடம்புனல சடைமுடியன் தனியொருகூ றமர்ந்துறையும், உடம்புடையான் கவராத உயிரினால் குறைவிலமே. |
8.10 |
3210 |
உயிரினால் குறைவில்லா உலகேழ்தன் உள்ளொடுக்கி, தயிர்வெண்ணெ யுண்டானைத், தடங்குருகூர்ச் சடகோபன், செயிரில்சொல் லிசைமாலை யாயிரத்து ளிப்பத்தால் வயிரம்சேர் பிறப்பறுத்து வைகுந்தம் நண்ணுவரே. |
8.11 |
3211 |
நண்ணாதார் முறுவலிப்ப நல்லுற்றார் கரைந்தேங்க, எண்ணாராத் துயர்விளைக்கும் இவையென்ன உலகியற்கை?, கண்ணாளா. கடல்கடைந்தாய். உனகழற்கே வரும்பரிசு, தண்ணாவா தடியேனைப் பணிகண்டாய் சாமாறே. |
9.1 |
3212 |
சாமாறும் கெடுமாறும் தமருற்றார் தலைத்தலைப்பெய்து, ஏமாறிக் கிடந்தலற்றும் இவையென்ன உலகியற்கை?, ஆமாறொன் றறியேன்நான் அரவணையாய். அம்மானே, கூமாறே விரைகண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே. |
9.2 |
3213 |
கொண்டாட்டும் குலம்புனைவும் தமருற்றார் விழுநிதியும், வண்டார்பூங் குழலாளும் மனையொழிய வுயிர்மாய்தல், கண்டாற்றேன் உலகியற்கை கடல்வண்ணா. அடியேனைப் பண்டேபோல் கருதாதுன் அடிக்கேகூய்ப் பணிகொள்ளே. |
9.3 |
3214 |
கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம் நெருப்பாக, கொள்ளென்று தமம்மூடும் இவையென்ன உலகியற்கை? வள்ளலே. மணிவண்ணா. உனகழற்கே வரும்பரிசு, வள்ளல்செய் தடியேனை உனதருளால் வாங்காயே. |
9.4 |
3215 |
வாங்குநீர் மலருலகில் நிற்பனவுமீ திரிவனவும், ஆங்குயிர்கள் பிறப்பிறப்புப் பிணிமூப்பால் தகர்ப்புண்ணும், ஈங்கிதன்மேல் வெந்நரகம் இவையென்ன உலகியற்கை? வாங்கெனைநீ மணிவண்ணா. அடியேனை மறுக்கேலே. |
9.5 |
3216 |
மறுக்கிவல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர், அறப்பொருளை யறிந்தோரார் இவையென்ன உலகியற்கை? வெறித்துளவ முடியானே. வினையேனை யுனக்கடிமை அறக்கொண்டாய், இனியென்னா ரமுதே.கூய் அருளாயே. |
9.6 |
3217 |
ஆயே.இவ் வுலகத்து நிற்பனவும் திரிவனவும் நீயேமற் றொருபொருளும் இன்றிநீ நின்றமையால், நோயேமூப் பிறப்பிறப்புப் பிணியேயென் றிவையொழியக், கூயேகொள் அடியேனைக் கொடுவுலகம் காட்டேலே. |
9.7 |
3218 |
காட்டிநீ கரந்துமிழும் நிலநீர்தீ விசும்புகால், ஈட்டீநீ வைத்தமைத்த இமையோர்வாழ் தனிமுட்டைக், கோட்டையினில் கழித்தெனையுன் கொழுஞ்சோதி யுயரத்து, கூட்டரிய திருவடிக்க ளெஞ்ஞான்று கூட்டுதியே? |
9.8 |
3219 |
கூட்டுதிநின் குரைகழல்கள் இமையோரும் தொழாவகை செய்து, ஆட்டுதிநீ யரவணையாய். அடியேனும் அஃதறிவன், வேட்கையெல்லாம் விடுத்தெனையுன் திருவடியே சுமந்துழல, கூட்டரிய திருவடிக்கள் கூட்டினைநான் கண்டேனே. |
9.9 |
3220 |
கண்டுகேட் டுற்றுமோந்துண்டுழலும் ஐங்கருவி கண்டவின்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம், ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக், கண்டசதிர் கண்டொழிந்தேன் அடைந்தேனுன் திருவடியே. |
9.10 |
3221 |
திருவடியை நாரணனைக்கேசவனைப் பரஞ்சுடரை, திருவடிசேர் வதுகருதிச் செழுங்குருகூர்ச் சடகோபன், திருவடிமே லுரைத்ததமிழ் ஆயிரத்து ளிப்பத்தும், திருவடியே அடைவிக்கும் திருவடிசேர்ந் தொன்றுமினே. |
9.11 |
3222 |
ஒன்றுந் தேவு முலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா அன்று, நான்முகன் தன்னொடு தேவ ருலகோ டுயிர்படைத்தான், குன்றம் போல்மணி மாடம் நீடு திருக்குரு கூரதனுள், நின்ற ஆதிப்பி ரான்நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே. |
10.1 |
3223 |
நாடி நீர்வ ணங்கும் தெய்வமும் உம்மையு முன்படைத்தான், வீடில் சீர்ப்புக ழாதிப்பி ரானவன் மேவி யுறைகோயில், மாட மாளிகை சூழ்ந்தழ காய திருக்குரு கூரதனைப், பாடி யாடிப் பரவிச் செல்மின்கள் பல்லுல கீர்.பரந்தே. |
10.2 |
3224 |
பரந்த தெய்வமும் பல்லுல கும்படைத் தன்றுட னேவிழுங்கிக், கரந்து மிழ்ந்து கடந்தி டந்தது கண்டும் தெளியகில்லீர், சிரங்க ளால்அ மரர்வ ணங்கும் திருக்குரு கூரதனுள், பரன்திற மன்றிப் பல்லுலகீர். தெய்வம் மற்றில்லை பேசுமினே. |
10.3 |
3225 |
பேச நின்ற சிவனுக் கும்பிர மன்தனக் கும்பிறர்க்கும் நாய கனவ னே,க பாலநன் மோக்கத்துக் கண்டுகொள்மின், தேச மாமதிள் சூழ்ந்தழ காய திருக்குரு கூரதனுள், ஈசன் பாலோர் அவம்ப றைதலென் னாவதி லிங்கியர்க்கே? |
10.4 |
3226 |
இலிங்கத் திட்ட புராணத் தீரும் சமணரும் சாக்கியரும் வலிந்து வாதுசெய் வீர்களும் மற்றுநுந் தெய்வமு மாகிநின்றான் மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குரு கூரதனுள், பொலிந்து நின்றபி ரான்கண்டீ ரொன்றும் பொய்யில்லை போற்றுமினே. |
10.5 |
3227 |
போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு உம்மையின்னே தேற்றி வைத்ததெல் லீரும் வீடு பெற்றாலுல கில்லையென்றே, சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குரு கூரதனுள், ஆற்ற வல்லவன் மாயம் கண்டீரது அறிந்தறிந் தோடுமினே. |
10.6 |
3228 |
ஓடி யோடிப் பல்பிறப்பும் பிறந்துமற் றோர்தெய்வம், பாடி யாடிப் பணிந்துபல்படிகால் வழியே றிக்கண்டீர், கூடி வானவ ரேத்தனின்ற திருக்குரு கூரதனுள், ஆடு புட்கொடி யாதி மூர்த்திக் கடிமை புகுவதுவே. |
10.7 |
3229 |
புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை நக்கபிரானுமன் றுய்யக்கொண்டது நாராயணனருளே கொக்கலர் தடந்f தாழை வேலித் திருக்குருகூரதனுள் மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் விளம்புதிரே |
10.8 |
3230 |
விளம்பும் ஆறு சமய மும்அ வை யாகியும் மற்றும்தன்பால், அளந்து காண்டற் கரிய னாகிய ஆதிப்பி ரானமரும், வளங்கொள் தண்பணை சூழ்ந்தழ காய திருக்குரு கூரதனை, உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உய்யக்கொண்டு போகுறிலே. |
10.9 |
3231 |
உறுவ தாவ தெத்தேவும் எவ்வுலக கங்களும் மற்றும்தன்பால், மறுவில் மூர்த்தியோ டொத்தித் தனையும் நின்றவண் ணம்நிற்கவே, செறுவில் செந்நெல் கரும்பொ டோ ங்கு திருக்குரு கூரதனுள் குறிய மாணுரு வாகிய நீள்குடக் கூத்தனுக் காட்செய்வதே. |
10.10 |
3232 |
ஆட்செய்த தாழிப்பி ரானைச் சேர்ந்தவன் வண்குரு கூர்நகரான் நாட்க மழ்மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன், வேட்கை யால்சொன்ன பாடல் ஆயிரத் துளிப்பத் தும்வல்லார், மீட்சி யின்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே. |
10.11 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்ரீநம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி - Naalaayira Divya Prabandham - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - Vaishnava Literature's - வைணவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய இலக்கியங்கள் - குறைவிலமே, என்னும், காணில், திருக்குரு, குறைவில்லா, கூரதனுள், கண்ணன், உலகியற்கை, அன்னைமீர், சடகோபன், என்றென்று, இவையென்ன, ஆயிரத், னேலும், நோக்கி, மூர்த்தி, தென்னும், யாட்டியேன், வல்வினை, தெய்வம், நின்று, வைகுந்த, செய்கின்ற, யுமஃதே, வண்குரு, நாரணன், மாயோன், பெருமான்தன்னை, திருவடியே, சூழ்ந்தழ, கொண்டு, விண்ணோர், செந்நெல், கழல்கள், தாளிணை, நங்கைமீர், கென்செய்கேன், றுழாயென்றே, காடுதல், நோயிது, இவளைப், திருமகளும், வேதம்வல், தாவியுள்ளே, தோறும், பாவியேன், தாமரைக், வழுவாத, ழாயின், ளிப்பத்தும், ஆயிரத்து, மணிமாமை, தோள்குலைக்கப்படும், மேகலையால், ஆதிப்பி, கூட்டரிய, பிறப்பிறப்புப், திரிவனவும், மற்றைத், ணங்கும், மற்றும்தன்பால், பல்லுல, யாடிப், தெய்வமும், மணிவண்ணா, கொள்ளென்று, வரிவளையால், கிளரொளியால், அறிவினால், தளிர்நிறத்தால், தெரிவரிய, உயிரினால், அடியேனைக், தமருற்றார், வரும்பரிசு, உனகழற்கே, மடநெஞ்சால், கூவும், என்செய்கேன், மார்பினன், கேயிவள், தண்ணந்து, பைம்பொற், மலிபுகழ், கூர்ச்சட, சாந்தென், பூசும், வணங்கே, போதால், பாதங்கள், செய்து, துழாய்முடி, அண்ணல், வாழ்ந்தார்கள், மாயவன், னையில்லார், மீள்வில்லை, துழாயென்றே, தண்ணந், பொழில்சூழ், கழல்கள்மேல், னெஞ்சமே, புனையும், கண்டேனே, யால்சொன்ன, துழாய்மலர், கோவிந்தன், என்னுடைக், துள்ளிவை, வைகுந்தம், வீவில், சொல்லா, தடங்கண்ணன், போற்றி, அச்சுதன், சிறுமான், கீர்த்தி, பூத்தண், முற்றும், முண்டுமிழ்ந்த, சக்கரத், முற்று, கடல்வண்ணன், பத்தும், யானும், தாவியும், வல்லேற்