முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » வைணவ இலக்கியங்கள் » நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் »
ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த பெரியாழ்வார் திருமொழி
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த பெரியாழ்வார் திருமொழி
மூன்றாம் பத்து
முதல்திருமொழி - தன்னேராயிரம்
(யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்)
எழுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
223 |
தன்னேராயிரம்பிள்ளைகளோடு தளர்நடையிட்டுவருவான் பொன்னேய்நெய்யொடுபாலமுதுண்டு ஒருபுள்ளுவன்பொய்யேதவழும் மின்னேர் நுண்ணிடைவஞ்சமகள்கொங்கைதுஞ்ச வாய்வைத்தபிரானே. அன்னே. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. |
1 |
224 |
பொன்போல்மஞ்சனமாட்டிஅமுதூட்டிப்போனேன் வருமளவுஇப்பால் வன்பாரச்சகடம்இறச்சாடி வடக்கிலகம்புக்கிருந்து மின்போல் நுண்ணிடையால்ஒருகன்னியை வேற்றுருவம்செய்துவைத்த அன்பா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. |
2 |
225 |
கும்மாயத்தொடுவெண்ணெய்விழுங்கிக் குடத்தயிர்சாய்த்துப்பருகி பொய்ம்மாயமருதானஅசுரரைப் பொன்றுவித்துஇன்றுநீவந்தாய் இம்மாயம்வல்லபிள்ளைநம்பீ. உன்னைஎன்மகனேயென்பர்நின்றார் அம்மா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. |
3 |
226 |
மையார்கண்டமடவாய்ச்சியர்மக்களை மையன்மைசெய்துஅவர்பின்போய் கொய்யார்பூந்துகில்பற்றித்தனிநின்று குற்றம்பலபலசெய்தாய் பொய்யா. உன்னைப்புறம்பலபேசுவ புத்தகத்துக்குளகேட்டேன் ஐயா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. |
4 |
227 |
முப்போதும்கடைந்தீண்டியவெண்ணெயினோடு தயிரும்விழுங்கி கப்பாலாயர்கள்காவிற்கொணர்ந்த கலத்தொடுசாய்த்துப்பருகி மெய்ப்பாலுண்டழுபிள்ளைகள்போல நீவிம்மிவிம்மியழுகின்ற அப்பா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. |
5 |
228 |
கரும்பார்நீள்வயல்காய்கதிர்ச்செந்நெலைக் கற்றாநிறைமண்டித்தின்ன விரும்பாக்கன்றொன்றுகொண்டு விளங்கனிவீழஎறிந்தபிரானே. சுரும்பார்மென்குழல்கன்னியொருத்திக்குச் சூழ்வலைவைத்துத்திரியும் அரம்பா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. |
6 |
229 |
மருட்டார்மென்குழல்கொண்டுபொழில்புக்கு வாய்வைத்துஅவ்வாயர்தம்பாடி சுருட்டார்மென்குழல்கன்னியர்வந்துஉன்னைச் சுற்றும்தொழநின்றசோதி. பொருட்டாயமிலேன்எம்பெருமான். உன்னைப்பெற்றகுற்றமல்லால் மற்றிங்கு அரட்டா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. |
7 |
230 |
வாளாவாகிலும்காணகில்லார் பிறர்மக்களைமையன்மைசெய்து தோளாலிட்டுஅவரோடுதிளைத்து நீசொல்லப்படாதனசெய்தாய் கேளார்ஆயர்குலத்தவர்இப்பழி கெட்டேன். வாழ்வில்லை நந்தன் காளாய். உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. |
8 |
231 |
தாய்மோர்விற்கப்போவர் தமப்பன்மார்கற்றாநிறைப்பின்புபோவர் நீ ஆய்ப்பாடிஇளங்கன்னிமார்களைநேர்படவேகொண்டுபோதி காய்வார்க்குஎன்றும்உகப்பனவேசெய்து கண்டார்கழறத்திரியும் ஆயா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. |
9 |
232 |
தொத்தார்பூங்குழல்கன்னியொருத்தியைச் சோலைத்தடம்கொண்டுபுக்கு முத்தார்கொங்கைபுணர்ந்துஇராநாழிகை மூவேழுசென்றபின்வந்தாய் ஒத்தார்க்குஒத்தனபேசுவர்உன்னை உரப்பவேநான்ஒன்றும்மாட்டேன் அத்தா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. |
10 |
233 |
கரார்மேனிநிறத்தெம்பிரானைக் கடிகமழ்பூங்குழலாய்ச்சி ஆராஇன்னமுதுண்ணத்தருவன்நான் அம்மம்தாரேனென்றமாற்றம் பாரார்தொல்புகழான்புதுவைமன்னன் பட்டர்பிரான்சொன்னபாடல் ஏராரின்னிசைமாலைவல்லார் இருடீகேசனடியாரே. |
11 |
இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை
(யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்)
கலிநிலைத்துறை
234 |
அஞ்சனவண்ணனை ஆயர்குலக்கொழுந்தினை மஞ்சனமாட்டி மனைகள்தோறும்திரியாமே கஞ்சனைக்காய்ந்த கழலடிநோவக்கன்றின்பின் என்செயப்பிள்ளையைப்போக்கினேன்? எல்லேபாவமே. |
1 |
235 |
பற்றுமஞ்சள்பூசிப் பாவைமாரொடுபாடியில் சிற்றில்சிதைத்து எங்கும்தீமைசெய்துதிரியாமே கற்றுத்தூளியுடை வேடர்கானிடைக்கன்றின்பின் எற்றுக்குஎன்பிள்ளையைப்போக்கினேன்? எல்லேபாவமே. |
2 |
236 |
நன்மணிமேகலை நங்கைமாரொடுநாள்தொறும் பொன்மணிமேனி புழுதியாடித்திரியாமே கன்மணிநின்றதிர் கானதரிடைக்கன்றின்பின் என்மணிவண்ணனைப்போக்கினேன் எல்லேபாவமே. |
3 |
237 |
வண்ணக்கருங்குழல் மாதர்வந்துஅலர்தூற்றிட பண்ணிப்பலசெய்து இப்பாடியெங்கும்திரியாமே கண்ணுக்கினியானைக் கானதரிடைக்கன்றின்பின் எண்ணற்கரியானைப்போக்கினேன் எல்லேபாவமே. |
4 |
238 |
அவ்வவ்விடம்புக்கு அவ்வாயர்பெண்டிர்க்குஅணுக்கனாய் கொவ்வைக்கனிவாய்கொடுத்துக் கூழைமைசெய்யாமே எவ்வம்சிலையுடை வேடர்கானிடைக்கன்றின்பின் தெய்வத்தலைவனைப்போக்கினேன் எல்லேபாவமே. |
5 |
239 |
மிடறுமெழுமெழுத்தோட வெண்ணெய்விழுங்கிப்போய் படிறுபலசெய்து இப்பாடியெங்கும்திரியாமே கடிறுபலதிரி கானதரிடைக்கன்றின்பின் இடறஎன்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே. |
6 |
240 |
வள்ளிநுடங்கிடை மாதர்வந்துஅலர்தூற்றிட துள்ளிவிளையாடித் தோழரோடுதிரியாமே கள்ளியுணங்கு வெங்கானதரிடைக்கன்றின்பின் புள்ளின்தலைவனைப்போக்கினேன் எல்லேபாவமே. |
7 |
241 |
பன்னிருதிங்கள் வயிற்றில்கொண்டஅப்பாங்கினால் என்இளங்கொங்கை அமுதமூட்டியெடுத்துயான் பொன்னடிநோவப் புலரியேகானில்கன்றின்பின் என்னிளஞ்சிங்கத்தைப்போக்கினேன் எல்லேபாவமே. |
8 |
242 |
குடையும்செருப்பும்கொடாதே தாமோதரனைநான் உடையும்கடியன ஊன்றுவெம்பரற்களுடை கடியவெங்கானிடைக் காலடிநோவக்கன்றின்பின் கொடியேன்என்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே. |
9 |
243 |
என்றும்எனக்குஇனியானை என்மணிவண்ணனை கன்றின்பின்போக்கினேனென்று அசோதைகழறிய பொன்திகழ்மாடப் புதுவையர்கோன்பட்டன்சொல் இன்தமிழ்மாலைகள்வல்லவர்க்கு இடரில்லையே. |
10 |
மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை
(கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்)
எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
244 |
சீலைக்குதம்பைஒருகாது ஒருகாதுசெந்நிறமேல்தோன்றிப்பூ கோலப்பணைக்கச்சும்கூறையுடையும் குளிர்முத்தின்கோடாலமும் காலிப்பின்னேவருகின்ற கடல்வண்ணன்வேடத்தைவந்துகாணீர் ஞாலத்துப்புத்திரனைப்பெற்றார் நங்கைமீர். நானோமற்றாருமில்லை. |
1 |
245 |
கன்னிநன்மாமதிள்சூழ்தரு பூம்பொழில்காவிரித்தென்னரங்கம் மன்னியசீர்மதுசூதனா. கேசவா. பாவியேன்வாழ்வுகந்து உன்னைஇளங்கன்றுமேய்க்கச் சிறுகாலேயூட்டிஒருப்படுத்தேன் என்னின்மனம்வலியாள்ஒருபெண்இல்லை என்குட்டனேமுத்தம்தா. |
2 |
246 |
காடுகளூடுபோய்க்கன்றுகள்மேய்த்துமறியோடி கார்க்கோடல்பூச் சூடிவரிகின்றதாமோதரா. கற்றுத்தூளிகாண்உன்னுடம்பு பேடைமயிற்சாயல்பின்னைமணாளா. நீராட்டமைத்துவைத்தேன் ஆடிஅமுதுசெய்அப்பனுமுண்டிலன் உன்னோடுஉடனேயுண்பான். |
3 |
247 |
கடியார்பொழிலணிவேங்கடவா. கரும்போரேறே. நீயுகக்கும் குடையும்செருப்பும்குழலும்தருவிக்கக் கொள்ளாதேபோனாய்மாலே. கடியவெங்கானிடைக்கன்றின்பின்போன சிறுக்குட்டச்செங்கமல அடியும்வெதும்பி உன்கண்கள்சிவந்தாய்அசைந்திட்டாய்நீஎம்பிரான். |
4 |
248 |
பற்றார்நடுங்கமுன்பாஞ்சசன்னியத்தை வாய்வைத்தபோரேறே. எஞ்சிற்றாயர்சிங்கமே. சீதைமணாளா. சிறுக்குட்டச்செங்கண்மாலே. சிற்றாடையும்சிறுப்பத்திரமும்இவை கட்டிலின்மேல்வைத்துப்போய் கற்றாயரோடுநீகன்றுகள்மேய்த்துக் கலந்துடன்வந்தாய்போலும். |
5 |
249 |
அஞ்சுடராழிஉன்கையகத்தேந்தும் அழகா. நீபொய்கைபுக்கு நஞ்சுமிழ்நாகத்தினோடுபிணங்கவும் நான்உயிர்வாழ்ந்திருந்தேன் என்செய்யஎன்னைவயிறுமறுக்கினாய்? ஏதுமோரச்சமில்லை கஞ்சன்மனத்துக்குஉகப்பனவேசெய்தாய் காயாம்பூவண்ணம்கொண்டாய். |
6 |
250 |
பன்றியும்ஆமையும்மீனமுமாகிய பாற்கடல்வண்ணா. உன்மேல் கன்றினுருவாகிமேய்புலத்தேவந்த கள்ளஅசுரன்தன்னை சென்றுபிடித்துச்சிறுக்கைகளாலே விளங்காயெறிந்தாய்போலும் என்றும்என்பிள்ளைக்குத்தீமைகள்செய்வார்கள் அங்கனமாவார்களே. |
7 |
251 |
கேட்டறியாதனகேட்கின்றேன் கேசவா. கோவலர்இந்திரற்கு கட்டியசோறும்கறியும்தயிரும் கலந்துடன்உண்டாய்போலும் ஊட்டமுதலிலேன்உன்தன்னைக்கொண்டு ஒருபோதும்எனக்கரிது வாட்டமிலாப்புகழ்வாசுதேவா. உன்னைஅஞ்சுவன்இன்றுதொட்டும். |
8 |
252 |
திண்ணார்வெண்சங்குடையாய். திருநாள்திருவோணமின்றேழுநாள் முன் பண்ணோர்மொழியாரைக்கூவிமுளையட்டிப் பல்லாண்டுகூறுவித்தேன் கண்ணாலம்செய்யக் கறியும்கலத்தரிசியும்ஆக்கிவைத்தேன் கண்ணா. நீநாளைத்தொட்டுக்கன்றின்பின்போகேல் கோலம்செய்திங்கேயிரு. |
9 |
253 |
புற்றரவல்குல்அசோதைநல்லாய்ச்சி தன்புத்திரன்கோவிந்தனை கற்றினம்மேய்த்துவரக்கண்டுகந்து அவள்கற்பித்தமாற்றமெல்லாம் செற்றமிலாதவர்வாழ்தரு தென்புதுவைவிட்டுசித்தன்சொல் கற்றிவைபாடவல்லார் கடல்வண்ணன்கழலிணைகாண்பார்களே. |
10 |
நான்காம் திருமொழி - தழைகளும்
(காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்)
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
254 |
தழைகளும்தொங்கலும்ததும்பிஎங்கும் குழல்களும்கீதமுமாகிஎங்கும் மழைகொலோவருகின்றதென்றுசொல்லி நுழைவனர்நிற்பனராகி எங்கும் |
1 |
255 |
வல்லிநுண்இதழன்னஆடைகொண்டு பல்லிநுண்பற்றாகஉடைவாள்சாத்திப் முல்லைநல்நறுமலர்வேங்கைமலர் எல்லியம்போதாகப்பிள்ளைவரும் |
2 |
256 |
சுரிகையும்தெறிவில்லும்செண்டுகோலும் ஒருகையால்ஒருவன்தன்தோளையூன்றி வருகையில்வாடியபிள்ளைகண்ணன் அருகேநின்றாள்என்பென்-ஓக்கிக்கண்டாள் |
3 |
257 |
குன்றெடுத்துஆநிரைகாத்தபிரான் கன்றுகள்மேய்த்துத்தன்தோழரோடு என்றும்இவனையொப்பாரைநங்காய் ஒன்றும்நில்லாவளைகழன்று |
4 |
258 |
சுற்றிநின்றுஆயர்தழைகளிடச் பற்றிநின்றுஆயர்கடைத்தலையே மற்றொருவர்க்குஎன்னைப்பேசலொட்டேன் கொற்றவனுக்குஇவளாமென்றெண்ணிக் |
5 |
259 |
சிந்துரமிலங்கத்தன்திருநெற்றிமேல் அந்தரமுழவத்தண்தழைக்காவின்கீழ் அந்தமொன்றில்லாதஆயப்பிள்ளை பந்துகொண்டானென்றுவளைத்துவைத்துப் |
6 |
260 |
சாலப்பல்நிரைப்பின்னேதழைக்காவின்கீழ் நீலநல்நறுங்குஞ்சிநேத்திரத்தாலணிந்து கோலச்செந்தாமரைக்கண்மிளிரக் ஆலித்துவருகின்றஆயப்பிள்ளை |
7 |
261 |
சிந்துரப்பொடிக்கொண்டுசென்னியப்பித் அந்தரமின்றித்தன்னெறிபங்கியை இந்திரன்போல்வருமாயப்பிள்ளை சந்தியில்நின்றுகண்டீர் நங்கைதன் |
8 |
262 |
வலங்காதின்மேல்தோன்றிப்பூவணிந்து சிலிங்காரத்தால்குழல்தாழவிட்டுத் அலங்காரத்தால்வருமாய்ப்பிள்ளை விலங்கிநில்லாதுஎதிர்நின்றுகண்டீர் |
9 |
263 |
விண்ணின்மீதுஅமரர்கள்விரும்பித்தொழ கண்ணங்காலிப்பின்னேஎழுந்தருளக்கண்டு வண்ணம் வண்டமர்பொழில்புதுவையர்கோன் பண்ணின்பம்வரப்பாடும்பத்தருள்ளார் |
10 |
ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி
(கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை
தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்)
தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்)
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
264 |
அட்டுக்குவிசோற்றுப்பருப்பதமும் பொட்டத்துற்றி மாரிப்பகைபுணர்த்த வட்டத்தடங்கண்மடமான்கன்றினை கொட்டைத்தலைப்பால்கொடுத்துவளர்க்கும் |
1 |
265 |
வழுவொன்றுமிலாச்செய்கை வானவர்கோன் மழைவந்துஎழுநாள்பெய்துமாத்தடுப்ப இழவுதரியாததோரீற்றுப்பிடி குழவியிடைக்காலிட்டெதிர்ந்துபொரும் |
2 |
266 |
அம்மைத்தடங்கண்மடவாய்ச்சியரும் எம்மைச்சரணேன்றுகொள்ளென்றிரப்ப தம்மைச்சரணென்றதம்பாவையரைப் கொம்மைப்புயக்குன்றர்சிலைகுனிக்கும் |
3 |
267 |
கடுவாய்ச்சினவெங்கண்களிற்றினுக்குக் அடிவாயுறக்கையிட்டுஎழப்பறித்திட்டு கடல்வாய்ச்சென்றுமேகம்கவிழ்ந்திறங்கிக் குடவாய்ப்படநின்றுமழைபொழியும் |
4 |
268 |
வானத்திலுல்லீர். வலியீர்உள்ளீரேல் ஏனத்துருவாகியஈசன்எந்தை கானக்களியானைதன்கொம்பிழந்து கூனல்பிறைவேண்டிஅண்ணாந்துநிற்கும் |
5 |
269 |
செப்பாடுடையதிருமாலவன் தன் கப்பாகமடுத்துமணிநெடுந்தோள் எப்பாடும்பரந்திழிதெள்ளருவி குப்பாயமெனநின்றுகாட்சிதரும் |
6 |
270 |
படங்கள்பலவுமுடைப்பாம்பரையன் தடங்கைவிரலைந்தும்மலரவைத்துத் அடங்கச்சென்றுஇலங்கையையீடழித்த குடங்கைக்கொண்டுமந்திகள்கண்வளர்த்தும் |
7 |
271 |
சலமாமுகில்பல்கணப்போர்க்களத்துச் நலிவானுறக்கேடகம்கோப்பவன்போல் இலைவேய்குரம்பைத்தவமாமுனிவர் கொலைவாய்ச்சினவேங்கைகள்நின்றுறங்கும் |
8 |
272 |
வன்பேய்முலையுண்டதோர்வாயுடையன் தன்பேரிட்டுக்கொண்டுதரணிதன்னில் முன்பேவழிகாட்டமுசுக்கணங்கள் கொம்பேற்றியிருந்துகுதிபயிற்றும் |
9 |
273 |
கொடியேறுசெந்தாமரைக்கைவிரல்கள் வடிவேறுதிருவுகிர்நொந்துமில முடியேறியமாமுகிற்பல்கணங்கள் குடியேறியிருந்துமழைபொழியும் |
10 |
274 |
அரவில்பள்ளிகொண்டுஅரவம்துரந்திட்டு குரவிற்கொடிமுல்லைகள்நின்றுறங்கும் திருவிற்பொலிமறைவாணர்புத்தூர்த் பரவுமனநன்குடைப்பத்தருள்ளார் |
11 |
ஆறாம் திருமொழி - நாவலம்
(கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு)
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
275 |
நாவலம்பெரியதீவினில்வாழும் தூவலம்புரியுடையதிருமால் கோவலர்சிறுமியர்இளங்கொங்கை காவலும்கடந்துகயிறுமாலையாகி |
1 |
276 |
இடவணரைஇடத்தோளொடுசாய்த்து குடவயிறுபடவாய்கடைகூடக் மடமயில்களொடுமான்பிணைபோலே உடைநெகிழஓர்கையால்துகில்பற்றி |
2 |
277 |
வானிலவரசுவைகுந்தக்குட்டன் கோனிளவரசுகோவலர்குட்டன் வானிளம்படியர்வந்துவந்தீண்டி தேனளவுசெறிகூந்தலவிழச் |
3 |
278 |
தேனுகன்பிலம்பன்காளியனென்னும் கானகம்படிஉலாவியுலாவிக் மேனகையொடுதிலோத்தமைஅரம்பை வானகம்படியில்வாய்திறப்பின்றி |
4 |
279 |
முன்நரசிங்கமதாகி அவுணன் மன்னரஞ்சும் மதுசூதனன்வாயில் நன்னரம்புடையதும்புருவோடு கின்னரமிதுனங்களும் தம்தம் |
5 |
280 |
செம்பெருந்தடங்கண்ணன்திரள்தோளன் நம்பரமன்இந்நாள்குழலூதக் அம்பரம்திரியும்காந்தப்பரெல்லாம் நம்பரமன்றென்றுநாணிமயங்கி |
6 |
281 |
புவியுள்நான்கண்டதோரற்புதம்கேளீர் அவையுள் நாகத்தணையான்குழலூத அவியுணாமறந்துவானவரெல்லாம் செவியுணாவின்சுவைகொண்டுமகிழ்ந்து |
7 |
282 |
சிறுவிரல்கள்தடவிப்பரிமாறச் குறுவெயர்ப்புருவம்கூடலிப்பக் பறவையின்கணங்கள்கூடுதுறந்து கறவையின்கணங்கள்கால்பரப்பீட்டுக் |
8 |
283 |
திரண்டெழுதழைமழைமுகில்வண்ணன் சுருண்டிருண்டகுழல்தாழ்ந்தமுகத்தான் மருண்டுமான்கணங்கள்மேய்கைமறந்து இரண்டுபாடும்துலங்காப்புடைபெயரா |
9 |
284 |
கருங்கண்தோகைமயிற்பீலியணிந்து அருங்கலவுருவினாயர்பெருமான் மரங்கள்நின்றுமதுதாரைகள்பாயும் இரங்கும்கூம்பும்திருமால்நின்றநின்ற |
10 |
285 |
குழலிருண்டுசுருண்டேறியகுஞ்சிக் குழல்முழைஞ்சுகளினூடுகுமிழ்த்துக் குழல்முழவம்விளம்பும்புதுவைக்கோன் குழலைவென்றகுளிர்வாயினராகிச் |
11 |
ஏழாம் திருமொழி - ஐயபுழுதி
(திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு
நற்றாய் இரங்கும் பாசுரம்
நற்றாய் இரங்கும் பாசுரம்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
286 |
ஐயபுழுதிஉடம்பளைந்து இவள்பேச்சுமலந்தலையாய் செய்யநூலின்சிற்றாடை செப்பனடுக்கவும்வல்லளல்லள் கையினில்சிறுதூதையோடு இவள்முற்றில்பிரிந்துமிலள் பையரவணைப்பள்ளியானோடு கைவைத்துஇவள்வருமே. |
1 |
287 |
வாயில்பல்லும்எழுந்தில மயிரும்முடிகூடிற்றில சாய்விலாதகுறுந்தலைச் சிலபிள்ளைகளோடிணங்கி தீயிணக்கிணங்காடிவந்து இவள்தன்னன்னசெம்மைசொல்லி மாயன்மாமணிவண்ணன்மேல் இவள்மாலுறுகின்றாளே. |
2 |
288 |
பொங்குவெண்மணல்கொண்டு சிற்றிலும்முற்றத்திழைக்கலுறில் சங்குசக்கரம்தண்டுவாள் வில்லுமல்லதுஇழைக்கலுறால் கொங்கைஇன்னம்குவிந்தெழுந்தில கோவிந்தனோடுஇவளை சங்கையாகிஎன்னுள்ளம் நாள்தொறும்தட்டுளுப்பாகின்றதே. |
3 |
289 |
ஏழைபேதைஓர்பாலகன்வந்து என்பெண்மகளையெள்கி தோழிமார்பலர்கொண்டுபோய்ச்செய்த சூழ்ச்சியையார்க்குரைக்கேன்? ஆழியானென்னுமாழமோழையில் பாய்ச்சிஅகப்படுத்தி மூழையுப்பறியாததென்னும் மூதுரையுமிலளே. |
4 |
290 |
நாடும்ஊரும்அறியவேபோய் நல்லதுழாயலங்கள் சூடி நாரணன்போமிடமெல்லாம் சோதித்துழிதருகின்றாள் கேடுவேண்டுகின்றார்பலருளர் கேசவனோடுஇவளை பாடுகாவலிடுமினென்றென்று பார்தடுமாறினதே. |
5 |
291 |
பட்டம்கட்டிப்பொற்றோடுபெய்து இவள்பாடகமும்சிலம்பும் இட்டமாகவளர்த்தெடுத்தேனுக்கு என்னோடுஇருக்கலுறாள் பொட்டப்போய்ப்புறப்பட்டுநின்று இவள்பூவைப்பூவண்ணாவென்னும் வட்டவார்குழல்மங்கைமீர். இவள்மாலுறுகின்றாளே. |
6 |
292 |
பேசவும் தரியாதபெண்மையின் பேதையேன்பேதைஇவள் கூசமின்றிநின்றார்கள்தம்மெதிர் கோல்கழிந்தான்மூழையாய் கேசவாவென்றும்கேடிலீயென்றும் கிஞ்சுகவாய்மொழியாள் வாசவார்குழல்மங்கைமீர். இவள்மாலுறுகின்றாளே. |
7 |
293 |
காறைபூணும்கண்ணாடிகாணும் தன்கையில்வளைகுலுக்கும் கூறையுடுக்கும்அயர்க்கும் தங்கொவ்வைச்செவ்வாய்திருத்தும் தேறித்தேறிநின்று ஆயிரம்பேர்த்தேவன்திறம்பிதற்றும் மாறில்மாமணிவண்ணன்மேல் இவள்மாலுறுகின்றாளே. |
8 |
294 |
கைத்தலத்துள்ளமாடழியக் கண்ணாலங்கள்செய்து இவளை வைத்துவைத்துக்கொண்டுஎன்னவாணியம்? நம்மைவடுப்படுத்தும் செய்த்தலையெழுநாற்றுப்போல் அவன்செய்வனசெய்துகொள்ள மைத்தடமுகில்வண்ணன்பக்கல் வளரவிடுமின்களே. |
9 |
295 |
பெருப்பெருத்தகண்ணாலங்கள்செய்து பேணிநம்மில்லத்துள்ளே இருத்துவானெண்ணிநாமிருக்க இவளும்ஒன்றெண்ணுகின்றாள் மருத்துவப்பதம்நீங்கினாளென்னும்வார்த்தை படுவதன்முன் ஒருப்படுத்திடுமின்இவளை உலகளந்தானிடைக்கே. |
10 |
296 |
ஞாலமுற்றும்உண்டுஆலிலைத்துயில் நாராயணனுக்கு இவள் மாலதாகிமகிழ்ந்தனளென்று தாயுரைசெய்ததனை கோலமார்பொழில்சூழ்புதுவையர்கோன் விட்டுசித்தன்சொன்ன மாலைபத்தும்வல்லவர்கட்கு இல்லைவருதுயரே. |
11 |
எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை
(தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய்
பலபடி வருந்திக்கூறும் பாசுரம்
பலபடி வருந்திக்கூறும் பாசுரம்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
297 |
நல்லதோர்தாமரைப்பொய்கை நாண்மலர்மேல்பனிசோர அல்லியும்தாதும்உதிர்ந்திட்டு அழகழிந்தாலொத்ததாலோ இல்லம்வெறியோடிற்றாலோ என்மகளைஎங்கும்காணேன் மல்லரையட்டவன்பின்போய் மதுரைப்புறம்புக்காள்கொலோ? |
1 |
298 |
ஒன்றுமறிவொன்றில்லாத உருவறைக்கோபாலர்தங்கள் கன்றுகால்மாறுமாபோலே கன்னியிருந்தாளைக்கொண்டு நன்றும்கிறிசெய்துபோனான் நாராயணன்செய்ததீமை என்றும்எமர்கள்குடிக்கு ஓரேச்சுக்கொலாயிடுங்கொலோ? |
2 |
299 |
குமரிமணம்செய்துகொண்டு கோலம்செய்துஇல்லத்திருத்தி தமரும்பிறரும்அறியத் தாமோதரற்கென்றுசாற்றி அமரர்பதியுடைத்தேவி அரசாணியை வழிபட்டு துமிலமெழப்பறைகொட்டித் தோரணம்நாட்டிடுங்கொலோ? |
3 |
300 |
ஒருமகள்தன்னையுடையேன் உலகம்நிறைந்தபுகழால் திருமகள்போலவளர்த்தேன் செங்கண்மால்தான்கொண்டுபோனான் பெருமகளாய்க்குடிவாழ்ந்து பெரும்பிள்ளைபெற்றஅசோதை மருமகளைக்கண்டுகந்து மணாட்டுப்புறம்செய்யுங்கொலோ? |
4 |
301 |
தம்மாமன்நந்தகோபாலன் தழீஇக்கொண்டுஎன்மகள்தன்னை செம்மாந்திரேயென்றுசொல்லிச் செழுங்கயற்கண்ணும்செவ்வாயும் கொம்மைமுலையும்இடையும் கொழும்பணைத்தோள்களும்கண்டிட்டு இம்மகளைப்பெற்றதாயர் இனித்தரியாரென்னுங்கொலோ? |
5 |
302 |
வேடர்மறக்குலம்போலே வேண்டிற்றுச்செய்துஎன்மகளை கூடியகூட்டமேயாகக் கொண்டுகுடிவாழுங்கொலோ? நாடும்நகரும்அறிய நல்லதோர்கண்ணாலம்செய்து சாடிறப்பாய்ந்தபெருமான் தக்கவாகைப்பற்றுங்கொலோ? |
6 |
303 |
அண்டத்தமரர்பெருமான் ஆழியான்இன்றுஎன்மகளை பண்டப்பழிப்புக்கள்சொல்லிப் பரிசறஆண்டிடுங்கொலோ? கொண்டுகுடிவாழ்க்கைவாழ்ந்து கோவலப்பட்டம்கவித்து பண்டைமணாட்டிமார்முன்னே பாதுகாவல்வைக்குங்கொலோ? |
7 |
304 |
குடியில்பிறந்தவர்செய்யும் குணமொன்றும்செய்திலன்அந்தோ. நடையொன்றும்செய்திலன்நங்காய். நந்தகோபன்மகன்கண்ணன் இடையிருபாலும்வணங்க இளைத்திளைத்துஎன்மகள்ஏங்கி கடைகயிறேபற்றிவாங்கிக் கைதழும்பேறிடுங்கொலோ? |
8 |
305 |
வெண்ணிறத்தோய்தயிர்தன்னை வெள்வரைப்பின்முன்எழுந்து கண்ணுறங்காதேயிருந்து கடையவும்தான்வல்லள்கொலோ? ஒண்ணிறத்தாமரைச்செங்கண் உலகளந்தான்என்மகளை பண்ணறையாப்பணிகொண்டு பரிசறஆண்டிடுங்கொலோ? |
9 |
306 |
மாயவன்பின்வழிசென்று வழியிடைமாற்றங்கள்கேட்டு ஆயர்கள்சேரியிலும்புக்கு அங்குத்தைமாற்றமுமெல்லாம் தாயவள்சொல்லியசொல்லைத் தண்புதுவைப்பட்டன்சொன்ன தூயதமிழ்ப்பத்தும்வல்லார் தூமணிவண்ணனுக்காளரே. |
10 |
ஒன்பதாம் திருமொழி - என்னாதன்
(க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை
இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்)
இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்)
கலித்தாழிசை
307 |
என்னாதன்தேவிக்கு அன்றுஇன்பப்பூஈயாதாள் தன் நாதன்காணவே தண்பூமரத்தினை வன்னாதப்புள்ளால் வலியப்பறித்திட்ட என்னாதன்வன்மையைப்பாடிப்பற எம்பிரான்வன்மையைப்பாடிப்பற. |
1 |
308 |
என்வில்வலிகண்டு போவென்றுஎதிர்வந்தான் தன் வில்லினோடும் தவத்தைஎதிர்வாங்கி முன்வில்வலித்து முதுபெண்ணுயிருண்டான் தன் வில்லின்வன்மையைப்பாடிப்பற தாசரதிதன்மையைப்படிப்பற. |
2 |
309 |
உருப்பிணிநங்கையைத் தேரேற்றிக்கொண்டு விருப்புற்றங்கேக விரைந்துஎதிர்வந்து செருக்குற்றான் வீரம்சிதைய தலையைச் சிரைத்திட்டான்வன்மையைப்பாடிப்பற தேவகிசிங்கத்தைப்பாடிப்பற. |
3 |
310 |
மாற்றுத்தாய்சென்று வனம்போகேஎன்றிட ஈற்றுத்தாய்பின்தொடர்ந்து எம்பிரான். என்றுஅழ கூற்றுத்தாய்சொல்லக் கொடியவனம்போன சீற்றமிலாதானைப்பாடிப்பற சீதைமணாளனைப்பாடிப்பற. |
4 |
311 |
பஞ்சவர்தூதனாய்ப் பாரதம்கைசெய்து நஞ்சுமிழ்நாகம்கிடந்த நல்பொய்கைபுக்கு அஞ்சப்பணத்தின்மேல் பாய்ந்திட்டுஅருள்செய்த அஞ்சனவண்ணனைப்பாடிப்பற அசோதைதன்சிங்கத்தைப்பாடிப்பற. |
5 |
312 |
முடியொன்றிமூவுலகங்களும் ஆண்டு உன் அடியேற்கருளென்று அவன்பின்தொடர்ந்த படியில்குணத்துப் பரதநம்பிக்கு அன்று அடிநிலையீந்தானைப்பாடிப்பற அயோத்தியர்கோமானைப்பாடிப்பற. |
6 |
313 |
காளியன்பொய்கைகலங்கப்பாய்ந்திட்டு அவன் நீள்முடியைந்திலும்நின்று நடம்செய்து மீளஅவனுக்கு அருள்செய்தவித்தகன் தோள்வலிவீரமேபாடிப்பற தூமணிவண்ணனைப்பாடிப்பற. |
7 |
314 |
தார்க்குஇளந்தம்பிக்கு அரசீந்து தண்டகம் நூற்றவள் சொல்கொண்டுபோகி நுடங்கிடைச் சூர்ப்பணகாவைச்செவியொடுமூக்கு அவள் ஆர்க்கஅரிந்தானைப்பாடிப்பற அயோத்திக்கரசனைப்பாடிப்பற. |
8 |
315 |
மாயச்சகடமுதைத்து மருதிறுத்து ஆயர்களோடுபோய் ஆநிரைகாத்து அணி வேயின்குழலூதி வித்தகனாய்நின்ற ஆயர்களேற்றினைப்பாடிப்பற ஆநிரைமேய்த்தானைப்பாடிப்பற. |
9 |
316 |
காரார்கடலையடைத்திட்டு இலங்கைபுக்கு ஓராதான்பொன்முடி ஒன்பதோடொன்றையும் நேராஅவன்தம்பிக்கே நீளரசீந்த ஆராவமுதனைப்பாடிப்பற அயோத்தியர்வேந்தனைப்பாடிப்பற. |
10 |
தரவு கொச்சகக்கலிப்பா
317 |
நந்தன்மதலையைக் காகுத்தனைநவின்று உந்திபறந்த ஒளியிழையார்கள்சொல் செந்தமிழ்த்தென்புதுவை விட்டுசித்தன்சொல் ஐந்தினோடைந்தும்வல்லார்க்கு அல்லலில்லையே. |
11 |
பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல்
(இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு,
சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக்
கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்
சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக்
கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்
கலிவிருத்தம்
318 |
நெறிந்தகருங்குழல்மடவாய். நின்னடியேன்விண்ணப்பம் செறிந்தமணிமுடிச்சனகன் சிலையிறுத்துநினைக்கொணர்ந்தது அறிந்து அரசுகளைகட்ட அருந்தவத்தோன்இடைவிலங்க செறிந்தசிலைகொடுதவத்தைச் சிதைத்ததும்ஓரடையாளம். |
1 |
319 |
அல்லியம்பூமலர்க்கோதாய். அடிபணிந்தேன்விண்ணப்பம் சொல்லுகேன்கேட்டருளாய் துணைமலர்க்கண்மடமானே. எல்லியம்போதினிதிருத்தல் இருந்ததோரிடவகையில் மல்லிகைமாமாலைகொண்டு அங்குஆர்த்ததும்ஓரடையாளம். |
2 |
320 |
கலக்கியமாமனத்தனளாய்க் கைகேசிவரம்வேண்ட மலக்கியமாமனத்தனனாய் மன்னவனுமறாதொழிய குலக்குமரா. காடுறையப்போ என்றுவிடைகொடுப்ப இலக்குமணன்தன்னொடும் அங்குஏகியதுஓரடையாளம். |
3 |
321 |
வாரணிந்தமுலைமடவாய். வைதேவீ. விண்ணப்பம் தேரணிந்தஅயோத்தியர்கோன் பெருந்தேவீ. கேட்டருளாய் கூரணிந்தவேல்வலவன் குகனோடும்கங்கைதன்னில் சீரணிந்ததோழமை கொண்டதும்ஓரடையாளம். |
4 |
322 |
மானமருமெல்நோக்கி. வைதேவீ. விண்ணப்பம் கானமரும்கல்லதர்போய்க் காடுறைந்தகாலத்து தேனமரும்பொழிற்சாரல் சித்திரகூடத்துஇருப்ப பால்மொழியாய். பரதநம்பி பணிந்ததும்ஓரடையாளம். |
5 |
323 |
சித்திரகூடத்துஇருப்பச் சிறுகாக்கைமுலைதீண்ட அத்திரமேகொண்டெறிய அனைத்துலகும்திரிந்தோடி வித்தகனே. இராமாவோ. நின்னபயம்என்றுஅழைப்ப அத்திரமேஅதன்கண்ணை அறுத்ததும்ஓரடையாளம். |
6 |
324 |
மின்னொத்த_ண்ணிடையாய். மெய்யடியேன்விண்ணப்பம் பொன்னொத்தமானொன்று புகுந்துஇனிதுவிளையாட நின்னன்பின்வழிநின்று சிலைபிடித்துஎம்பிரான்ஏக பின்னேஅங்குஇலக்குமணன் பிரிந்ததும்ஓரடையாளம். |
7 |
325 |
மைத்தகுமாமலர்க்குழலாய். வைதேவீ. விண்ணப்பம் ஒத்தபுகழ்வானரக்கோன் உடனிருந்துநினைத்தேட அத்தகுசீரயோத்தியர்கோன் அடையாளமிவைமொழிந்தான் இத்தகையால்அடையாளம் ஈதுஅவன்கைமோதிரமே. |
8 |
326 |
திக்குநிறைபுகழாளன் தீவேள்விச்சென்றநாள் மிக்கபெருஞ்சபைநடுவே வில்லிறுத்தான்மோதிரம்கண்டு ஒக்குமால்அடையாளம் அனுமான். என்றுஉச்சிமேல் வைத்துக்கொண்டு உகந்தனளால் மலர்க்குழலாள்சீதையுமே. |
9 |
327 |
வாராரும்முலைமடவாள் வைதேவிதனைக்கண்டு சீராரும்திறலனுமன் தெரிந்துரைத்தஅடையாளம் பாராரும்புகழ்ப்புதுவைப் பட்டர்பிரான்பாடல்வல்லார் ஏராரும்வைகுந்தத்து இமையவரோடுஇருப்பாரே. |
10 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த பெரியாழ்வார் திருமொழி - Naalaayira Divya Prabandham - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - Vaishnava Literature's - வைணவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய இலக்கியங்கள் - கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே, உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே, உன்னைஅறிந்துகொண்டேன், எல்லேபாவமே, திருமொழி, எங்கும், இவள்மாலுறுகின்றாளே, கோவிந்தன்குழல்கொடுஊதினபோது, விண்ணப்பம், வைதேவீ, எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம், கானதரிடைக்கன்றின்பின், கண்ணன், பரிசறஆண்டிடுங்கொலோ, அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம், வேடர்கானிடைக்கன்றின்பின், அஞ்சனவண்ணனை, பாசுரம், மாதர்வந்துஅலர்தூற்றிட, பல்லாயர்குழாம்நடுவே, பரமானவைகுந்தம்நண்ணுவரே, இப்பாடியெங்கும்திரியாமே, தாமோதரன்தாங்குதடவரைதான், மூன்றாம்