முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » வைணவ இலக்கியங்கள் » நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் »
ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த பெரியாழ்வார் திருமொழி
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த பெரியாழ்வார் திருமொழி
இரண்டாம் பத்து
முதல்திருமொழி - மெச்சூது
(பூச்சிகாட்டி விளையாடுதல்.
கலித்தாழிசை
118 |
மெச்சூதுசங்கம்இடத்தான் நல்வேயூதி பொய்ச்சூதில்தோற்ற பொறையுடைமன்னர்க்காய் பத்தூர்பெறாதுஅன்று பாரதம்கைசெய்த அத்தூதன்அப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். |
1 |
119 |
மலைபுரைதோள்மன்னவரும் மாரதரும்மற்றும் பலர்குலைய நூற்றுவரும்பட்டழிய பார்த்தன் சிலைவளையத் திண்தேர்மேல்முன்னின்ற செங்கண் அலவலைவந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். |
2 |
120 |
காயும்நீர்புக்குக் கடம்பேறி காளியன் தீயபணத்தில் சிலம்பார்க்கப்பாய்ந்தாடி வேயிங்குழலூதி வித்தகனாய்நின்ற ஆயன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். |
3 |
121 |
இருட்டில்பிறந்துபோய் ஏழைவல்லாயர் மருட்டைத்தவிர்ப்பித்து வன்கஞ்சன்மாளப் புரட்டி அந்நாள்எங்கள் பூம்பட்டுக்கொண்ட அரட்டன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். |
4 |
122 |
சேப்பூண்ட சாடுசிதறி திருடிநெய்க்கு ஆப்பூண்டு நந்தன்மனைவிகடைதாம்பால் சோப்பூண்டு துள்ளித்துடிக்க அன்று ஆப்பூண்டான்அப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். |
5 |
123 |
செப்பிளமென்முலைத் தேவகிநங்கைக்கு சொப்படத்தோன்றித் தொறுப்பாடியோம்வைத்த துப்பமும்பாலும் தயிரும்விழுங்கிய அப்பன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். |
6 |
124 |
தத்துக்கொண்டாள்கொலோ? தானேபெற்றாள்கொலோ? சித்தமனையாள் அசோதையிளஞ்சிங்கம் கொத்தார்கருங்குழல் கோபாலகோளரி அத்தன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். |
7 |
125 |
கொங்கை வன்கூனிசொற்கொண்டு குவலயத் துங்கக்கரியும் பரியும்இராச்சியமும் எங்கும்பரதற்கருளி வன்கானடை அங்கண்ணன்அப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். |
8 |
126 |
பதகமுதலைவாய்ப் பட்டகளிறு கதறிக்கைகூப்பி என்கண்ணா. கண்ணா. என்ன உதவப்புள்ளூர்ந்து அங்குஉறுதுயர்தீர்த்த அதகன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். |
9 |
தரவு கொச்சகக்கலிப்பா
127 |
வல்லாளிலங்கைமலங்கச் சரந்துரந்த வில்லாளனை விட்டுசித்தன் விரித்த சொல்லார்ந்த அப்பூச்சிப்பாடல்இவைபத்தும் வல்லார்போய் வைகுந்தம் மன்னியிருப்பரே. |
10 |
இரண்டாம் திருமொழி - அரவணையாய்
(கண்ணனை முலையுண்ண அழைத்தல்)
கலிவிருத்தம்
128 |
அரவணையாய். ஆயரேறே. அம்மமுண்ணத்துயிலெழாயே இரவுமுண்ணாதுஉறங்கிநீபோய் இன்றுமுச்சிகொண்டதாலோ வரவும்காணேன்வயிறசைந்தாய் வனமுலைகள்சோர்ந்துபாய திருவுடையவாய்மடுத்துத் திளைத்துதைத்துப்பருகிடாயே. |
1 |
129 |
வைத்தநெய்யும்காய்ந்தபாலும் வடிதயிரும்நறுவெண்ணெயும் இத்தனையும்பெற்றறியேன் எம்பிரான். நீ பிறந்தபின்னை எத்தனையும்செய்யப்பெற்றாய் ஏதும்செய்யேன்கதம்படாதே முத்தனையமுறுவல்செய்து மூக்குறுஞ்சிமுலையுணாயே. |
2 |
130 |
தந்தம்மக்கள்அழுதுசென்றால் தாய்மாராவார்தரிக்ககில்லார் வந்துநின்மேல்பூசல்செய்ய வாழவல்லவாசுதேவா. உந்தையர்உந்திறத்தரல்லர் உன்னைநானொன்றுரப்பமாட்டேன் நந்தகோபனணிசிறுவா. நான்சுரந்தமுலையுணாயே. |
3 |
131 |
கஞ்சன்தன்னால்புணர்க்கப்பட்ட கள்ளச்சகடுகலக்கழிய பஞ்சியன்னமெல்லடியால் பாய்ந்தபோதுநொந்திடுமென்று அஞ்சினேன்காண்அமரர்கோவே. ஆயர்கூட்டத்தளவன்றாலோ கஞ்சனைஉன்வஞ்சனையால் வலைப்படுத்தாய். முலையுணாயே. |
4 |
132 |
தீயபுந்திக்கஞ்சன்உன்மேல் சினமுடையன், சோர்வுபார்த்து மாயந்தன்னால்வலைப்படுக்கில் வாழகில்லேன்வாசுதேவா. தாயர்வாய்ச்சொல்கருமம்கண்டாய் சாற்றிச்சொன்னேன்போகவேண்டா ஆயர்பாடிக்கணிவிளக்கே. அமர்ந்துவந்துஎன்முலையுணாயே. |
5 |
133 |
மின்னனையநுண்ணிடையார் விரிகுழல்மேல்நுழைந்தவண்டு இன்னிசைக்கும்வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய். உன்னைக்கண்டார் என்னநோன்புநோற்றாள்கொலோ இவனைப்பெற்றவயிறுடையாள் என்னும்வார்த்தையெய்துவித்த இருடீகேசா. முலையுணாயே. |
6 |
134 |
பெண்டிர்வாழ்வார்நின்னொப்பாரைப் பெறுதுமென்னுமாசையாலே கண்டவர்கள்போக்கொழிந்தார் கண்ணிணையால்கலக்கநோக்கி வண்டுலாம்பூங்குழலினார் உன்வாயமுதம்உண்ணவேண்டி கொண்டுபோவான்வந்துநின்றார் கோவிந்தா. நீமுலையுணாயே. |
7 |
135 |
இருமலைபோலெதிர்ந்தமல்லர் இருவரங்கம்எரிசெய்தாய். உன் திருமலிந்துதிகழ்மார்வு தேக்கவந்துஎன்னல்குலேறி ஒருமுலையைவாய்மடுத்து ஒருமுலையைநெருடிக்கொண்டு இருமுலையும்முறைமுறையா ஏங்கிஏங்கிஇருந்துணாயே. |
8 |
136 |
அங்கமலப்போதகத்தில் அணிகொள்முத்தம்சிந்தினாற்போல் செங்கமலமுகம்வியர்ப்பத் தீமைசெய்துஇம்முற்றத்தூடே அங்கமெல்லாம்புழுதியாக அளையவேண்டாஅம்ம. விம்ம அங்கமரர்க்கமுதளித்த அமரர்கோவே. முலையுணாயே. |
9 |
137 |
ஓடவோடக்கிங்கிணிகள் ஒலிக்குமோசைப்பாணியாலே பாடிப்பாடிவருகின்றாயைப் பற்பநாபனென்றிருந்தேன் ஆடியாடியசைந்தசைந்திட்டு அதனுக்கேற்றகூத்தையாடி ஓடியோடிப்போய்விடாதே உத்தமா. நீமுலையுணாயே. |
10 |
138 |
வாரணிந்தகொங்கையாய்ச்சி மாதவா. உண்ணென்றமாற்றம் நீரணிந்தகுவளைவாசம் நிகழநாறும்வில்லிபுத்தூர் பாரணிந்ததொல்புகழான் பட்டர்பிரான்பாடல்வல்லார் சீரணிந்தசெங்கண்மால்மேல் சென்றசிந்தைபெறுவார்தாமே. |
11 |
மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு
(பன்னிருநாமம்: காதுகுத்துதல்)
எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
139 |
போய்ப்படுடையநின்தந்தையும்தாழ்த்தான் காப்பாருமில்லைகடல்வண்ணா. உன்னைத் பேய்ப்பால்முலையுண்டபித்தனே. ஆய்ப்பாலர்பெண்டுகளெல்லாரும்வந்தார் |
1 |
140 |
வண்ணப்பவளம்மருங்கினில்சாத்தி நண்ணித்தொழுமவர்சிந்தைபிரியாத எண்ணற்கரியபிரானே. திரியை கண்ணுக்குநன்றுமழகுடைய |
2 |
141 |
வையமெல்லாம்பெறுவம்வார்கடல்வாழும் வெய்யவேகாதில்திரியையிடுவன் உய்யஇவ்வாயர்குலத்தினில்தோன்றிய மையன்மைசெய்துஇளவாய்ச்சியருள்ளத்து |
3 |
142 |
வணநன்றுடையவயிரக்கடிப்பிட்டு குணநன்றுடையர்இக்கோபாலபிள்ளைகள் இணைநன்றழகியஇக்கடிப்புஇட்டால் சுணநன்றணிமுலையுண்ணத்தருவன்நான் |
4 |
143 |
சோத்தம்பிரான். என்றுஇரந்தாலும்கொள்ளாய் கோத்துக்குரவைபிணைந்துஇங்குவந்தால் பேர்த்தும்பெரியனஅப்பம்தருவன் வேய்த்தடந்தோளார்விரும்புகருங்குழல் |
5 |
144 |
விண்ணெல்லாம்கேட்கஅழுதிட்டாய். மண்ணெல்லாம்கண்டுஎன்மனத்துள்ளேயஞ்சி புண்ணேதுமில்லைஉன்காதுமறியும் கண்ணா. என்கார்முகிலே. |
6 |
145 |
முலையேதும்வேண்டேனென்றோடி மலையையெடுத்துமகிழ்ந்துகல்மாரிகாத்துப் சிலையொன்றுஇறுத்தாய். திரிவிக்கிரமா. தலைநிலாப்போதேஉன்காதைப்பெருக்காதே |
7 |
146 |
என்குற்றமேயென்றுசொல்லவும்வேண்டாகாண் அன்புற்றுநோக்கிஅடித்தும்பிடித்தும் வன்புற்றரவின்பகைக்கொடிவாமனநம்பீ. துன்புற்றனவெல்லாம்தீர்ப்பாய்பிரானே. |
8 |
147 |
மெய்யென்றுசொல்லுவார்சொல்லைக்கருதித் கையைப்பிடித்துக்கரையுரலோடுஎன்னைக் செய்தனசொல்லிச்சிரித்துஅங்குஇருக்கில் கையில்திரியையிடுகிடாய் இந்நின்ற |
9 |
148 |
காரிகையார்க்கும்உனக்கும்இழுக்குற்றென்? தாரியாதாகில்தலைநொந்திடுமென்று சேரியிற்பிள்ளைகளெல்லாரும் காது ஏர்விடைசெற்றுஇளங்கன்றுஎறிந்திட்ட |
10 |
149 |
கண்ணைக்குளிரக்கலந்துஎங்கும்நோக்கிக் எண்ணத்துள்என்றும்இருந்துதித்திக்கும் உண்ணக்கனிகள்தருவன் கடிப்பொன்றும் பண்ணைக்கிழியச்சகடமுதைத்திட்ட |
11 |
150 |
வாவென்றுசொல்லிஎன்கையைப்பிடித்து நோவத்திரிக்கில்உனக்கிங்கிழுக்குற்றென்? நாவற்பழம்கொண்டுவைத்தேன் சாவப்பாலுண்டுசகடிறப்பாய்ந்திட்ட |
12 |
151 |
வார்காதுதாழப்பெருக்கியமைத்து சீரால்அசோதைதிருமாலைச்சொன்னசொல் பாரார்தொல்புகழான்புதுவைமன்னன் ஆராதஅந்தாதிபன்னிரண்டும்வல்லார் |
13 |
நாலாம் திருமொழி - வெண்ணெயளைந்த
(கண்ணனை நீராட அழைத்தல். )
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
152 |
வெண்ணெயளைந்தகுணுங்கும் விளையாடுபுழுதியும்கொண்டு திண்ணெனெஇவ்விராஉன்னைத் தேய்த்துக்கிடக்கநான்ஒட்டேன் எண்ணெய்ப்புளிப்பழம்கொண்டு இங்குஎத்தனைபோதும்இருந்தேன் நண்ணலரியபிரானே. நாரணா. நீராடவாராய். |
1 |
153 |
கன்றுகளோடச்செவியில் கட்டெறும்புபிடித்திட்டால் தென்றிக்கெடுமாகில் வெண்ணெய்திரட்டிவிழுங்குமாகாண்பன் நின்றமராமரம்சாய்த்தாய். நீபிறந்ததிருவோணம் இன்று, நீநீராடவேண்டும் எம்பிரான். ஓடாதேவாராய். |
2 |
154 |
பேய்ச்சிமுலையுண்ணக்கண்டு பின்னையும்நில்லாதுஎன்னெஞ்சம் ஆய்ச்சியரெல்லாம்கூடி அழைக்கவும்நான்முலைதந்தேன் காய்ச்சினநீரொடுநெல்லி கடாரத்தில்பூரித்துவைத்தேன் வாய்த்தபுகழ்மணிவண்ணா. மஞ்சனமாடநீவாராய். |
3 |
155 |
கஞ்சன்புணர்ப்பினில்வந்த கடியசகடம்உதைத்து வஞ்சகப்பேய்மகள்துஞ்ச வாய்முலைவைத்தபிரானே. மஞ்சளும்செங்கழுநீரின் வாசிகையும்நாறுசாந்தும் அஞ்சனமும்கொண்டுவைத்தேன் அழகனே. நீராடவாராய். |
4 |
156 |
அப்பம்கலந்த சிற்றுண்டி அக்காரம்பாலில்கலந்து சொப்படநான்சுட்டுவைத்தேன் தின்னலுறிதியேல்நம்பீ. செப்பிளமென்முலையார்கள் சிறுபுறம்பேசிச்சிரிப்பர் சொப்படநீராடவேண்டும் சோத்தம்பிரான். இங்கேவாராய். |
5 |
157 |
எண்ணெய்க்குடத்தையுருட்டி இளம்பிள்ளைகிள்ளியெழுப்பி கண்ணைப்புரட்டிவிழித்துக் கழகண்டுசெய்யும்பிரானே. உண்ணக்கனிகள்தருவன் ஒலிகடலோதநீர்போலே வண்ணம்அழகியநம்பீ. மஞ்சனமாடநீவாராய். |
6 |
158 |
கறந்தநற்பாலும்தயிரும் கடைந்துஉறிமேல்வைத்தவெண்ணெய் பிறந்ததுவேமுதலாகப் பெற்றறியேன்எம்பிரானே. சிறந்தநற்றாய்அலர்தூற்றும் என்பதனால்பிறர்முன்னே மறந்தும்உரையாடமாட்டேன் மஞ்சனமாடநீவாராய். |
7 |
159 |
கன்றினைவாலோலைகட்டிக் கனிகளுதிரஎறிந்து பின்தொடர்ந்தோடிஓர்பாம்பைப் பிடித்துக்கொண்டாட்டினாய்போலும் நின்திறத்தேனல்லன்நம்பீ. நீபிறந்ததிருநல்நாள் நன்றுநீநீராடவேண்டும் நாரணா. ஓடாதேவாராய். |
8 |
160 |
பூணித்தொழுவினில்புக்குப் புழுதியளைந்தபொன்மேனி காணப்பெரிதும்உகப்பன் ஆகிலும்கண்டார்பழிப்பர் நாணெத்தனையுமிலாதாய். நப்பின்னைகாணில்சிரிக்கும் மாணிக்கமே. என்மணியே. மஞ்சனமாடநீவாராய். |
9 |
161 |
கார்மலிமேனி நிறத்துக் கண்ணபிரானையுகந்து வார்மலிகொங்கையசோதை மஞ்சனமாட்டியவாற்றை பார்மலிதொல்புதுவைக்கோன் பட்டர்பிரான்சொன்னபாடல் சீர்மலிசெந்தமிழ்வல்லார் தீவினையாதுமிலரே. |
10 |
ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை
(கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்)
கலித்தாழிசை
162 |
பின்னைமணாளனைப் பேரில்கிடந்தானை முன்னையமரர் முதல்தனிவித்தினை என்னையும் எங்கள்குடிமுழுதுஆட்கொண்ட மன்னனைவந்துகுழல்வாராய்அக்காக்காய். மாதவன்தன்குழல்வாராய்அக்காக்காய். |
1 |
163 |
பேயின்முலையுண்ட பிள்ளைஇவன்முன்னம் மாயச்சகடும் மருதும்இறுத்தவன் காயாமலர்வண்ணன் கண்ணன்கருங்குழல் தூய்தாகவந்துகுழல்வாராய்அக்காக்காய். தூமணிவண்ணன்குழல்வாராய்அக்காக்காய். |
2 |
164 |
திண்ணக்கலத்தில் திரையுறிமேல்வைத்த வெண்ணெய்விழுங்கி விரையஉறங்கிடும் அண்ணல் அமரர்பெருமானை ஆயர்தம் கண்ணனைவந்துகுழல்வாராய்அக்காக்காய். கார்முகில்வண்ணன்குழல்வாராய்அக்காக்காய். |
3 |
165 |
பள்ளத்தில்மேயும் பறவையுருக்கொண்டு கள்ளவசுரன்வருவானைத் தான்கண்டு புள்ளிதுவென்று பொதுக்கோவாய்கீண்டிட்ட பிள்ளையைவந்துகுழல்வாராய்அக்காக்காய். பேய்முலையுண்டான்குழல்வாராய்அக்காக்காய். |
4 |
166 |
கற்றினம்மேய்த்துக் கனிக்குஒருகன்றினை பற்றியெறிந்த பரமன்திருமுடி உற்றனபேசி நீஓடித்திரியாதே அற்றைக்கும்வந்துகுழல்வாராய்அக்காக்காய். ஆழியான்தன்குழல்வாராய்அக்காக்காய். |
5 |
167 |
கிழக்கில்குடிமன்னர் கேடிலாதாரை அழிப்பான்நினைந்திட்டு அவ்வாழியதனால் விழிக்குமளவிலே வேரறுத்தானை குழற்குஅணியாகக்குழல்வாராய்அக்காக்காய். கோவிந்தன்தன்குழல்வாராய்அக்காக்காய். |
6 |
168 |
பிண்டத்திரளையும் பேய்க்குஇட்டநீர்ச்சோறும் உண்டற்குவேண்டி நீஓடித்திரியாதே அண்டத்துஅமரர்பெருமான் அழகமர் வண்டொத்திருண்டகுழல்வாராய்அக்காக்காய். மாயவன்தன்குழல்வாராய்அக்காக்காய். |
7 |
169 |
உந்தியெழுந்த உருவமலர்தன்னில் சந்தச்சதுமுகன்தன்னைப் படைத்தவன் கொந்தக்குழலைக் குறந்துபுளியட்டி தந்தத்தின்சீப்பால்குழல்வாராய்அக்காக்காய். தாமோதரன்தன்குழல்வாராய்அக்காக்காய். |
8 |
170 |
மன்னன்தன்தேவிமார் கண்டுமகிழ்வெய்த முன்இவ்வுலகினை முற்றும்அளந்தவன் பொன்னின்முடியினைப் பூவணைமேல்வைத்து பின்னேயிருந்துகுழல்வாராய்அக்காக்காய். பேராயிரத்தான்குழல்வாராய்அக்காக்காய். |
9 |
தரவு கொச்சகக்கலிப்பா
171 |
கண்டார்பழியாமே அக்காக்காய். கார்வண்ணன் வண்டார்குழல்வார வாவென்றஆய்ச்சிசொல் விண்தோய்மதிள் வில்லிபுத்தூர்க்கோன்பட்டன்சொல் கொண்டாடிப்பாடக் குறுகாவினைதாமே. |
10 |
ஆறாம் திருமொழி - வேலிக்கோல்
(காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்)
கலித்தாழிசை
172 |
வேலிக்கோல்வெட்டி விளையாடுவில்லேற்றி தாலிக்கொழுந்தைத் தடங்கழுத்திற்பூண்டு பீலித்தழையைப் பிணைத்துப்பிறகிட்டு காலிப்பின்போவாற்குஓர்கோல்கொண்டுவா கடல்நிறவண்ணற்குஓர்கோல்கொண்டுவா. |
1 |
173 |
கொங்குங்குடந்தையும் கோட்டியூரும்பேரும் எங்கும்திரிந்து விளையாடும்என்மகன் சங்கம்பிடிக்கும் தடக்கைக்குத்தக்க நல் அங்கமுடையதோர்கோல்கொண்டுவா அரக்குவழித்ததோர்கோல்கொண்டுவா. |
2 |
174 |
கறுத்திட்டுஎதிர்நின்ற கஞ்சனைக்கொன்றான் பொறுத்திட்டுஎதிர்வந்த புள்ளின்வாய்கீண்டான் நெறித்தகுழல்களை நீங்கமுன்னோடி சிறுக்கன்றுமேய்ப்பாற்குஓர்கோல்கொண்டுவா தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா. |
3 |
175 |
ஒன்றேயுரைப்பான் ஒருசொல்லேசொல்லுவன் துன்றுமுடியான் துரியோதனன்பக்கல் சென்றுஅங்குப்பாரதம் கையெறிந்தானுக்கு கன்றுகள்மேய்ப்பதோர்கோல்கொண்டுவா கடல்நிறவண்ணர்க்குஓர்கோல்கொண்டுவா. |
4 |
176 |
சீரொன்றுதூதாய்த் துரியோதனன்பக்கல் ஊரொன்றுவேண்டிப் பெறாதஉரோடத்தால் பாரொன்றிப் பாரதம்கைசெய்து பார்த்தற்குத் தேரொன்றையூர்ந்தாற்குஓர்கோல்கொண்டுவா தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா. |
5 |
177 |
ஆலத்திலையான் அரவினணைமேலான் நீலக்கடலுள் நெடுங்காலம்கண்வளர்ந்தான் பாலப்பிராயத்தே பார்த்தர்க்குஅருள்செய்த கோலப்பிரானுக்குஓர்கோல்கொண்டுவா குடந்தைக்கிடந்தார்க்குஓர்கோல்கொண்டுவா. |
6 |
178 |
பொன்திகழ் சித்திரகூடப்பொருப்பினில் உற்றவடிவில் ஒருகண்ணும்கொண்ட அக் கற்றைக்குழலன் கடியன்விரைந்து உன்னை மற்றைக்கண்கொள்ளாமேகோல்கொண்டுவா மணிவண்ணநம்பிக்குஓர்கோல்கொண்டுவா. |
7 |
179 |
மின்னிடைச் சீதைபொருட்டா இலங்கையர் மன்னன்மணிமுடி பத்தும்உடன்வீழ தன்னிகரொன்றில்லாச் சிலைகால்வளைத்திட்ட மின்னுமுடியற்குஓர்கோல்கொண்டுவா வேலையடைத்தாற்குஓர்கோல்கொண்டுவா. |
8 |
180 |
தென்னிலங்கைமன்னன் சிரம்தோள்துணிசெய்து மின்னிலங்குபூண் விபீடணநம்பிக்கு என்னிலங்குநாமத்தளவும் அரசென்ற மின்னிலங்காரற்குஓர்கோல்கொண்டுவா வேங்கடவாணர்க்குஓர்கோல்கொண்டுவா. |
9 |
தரவு கொச்சகக்கலிப்பா
181 |
அக்காக்காய். நம்பிக்குக் கோல்கொண்டுவாவென்று மிக்காளுரைத்தசொல் வில்லிபுத்தூர்ப்பட்டன் ஒக்கவுரைத்த தமிழ்பத்தும்வல்லவர் மக்களைப்பெற்று மகிழ்வர்இவ்வையத்தே. |
10 |
ஏழாம் திருமொழி - ஆனிரை
(கண்ணனைப் பூச்சூட அழைத்தல்)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
182 |
ஆனிரைமேய்க்கநீபோதி அருமருந்தாவதறியாய் கானகமெல்லாம்திரிந்து உன்கரியதிருமேனிவாட பானையில்பாலைப்பருகிப் பற்றாதாரெல்லாம்சிரிப்ப தேனிலினியபிரானே. செண்பகப்பூச்சூட்டவாராய். |
1 |
183 |
கருவுடைமேகங்கள்கண்டால் உன்னைக்கண்டாலொக்கும்கண்கள் உருவுடையாய். உலகேழும்உண்டாகவந்துபிறந்தாய். திருவுடையாள்மணவாளா. திருவரங்கத்தேகிடந்தாய். மருவிமணம்கமழ்கின்ற மல்லிகைப்பூச்சூட்டவாராய். |
2 |
184 |
மச்சொடுமாளிகையேறி மாதர்கள்தம்மிடம்புக்கு கச்சொடுபட்டைக்கிழித்துக் காம்புதுகிலவைகீறி நிச்சலும்தீமைகள்செய்வாய். நீள்திருவேங்கடத்துஎந்தாய். பச்சைத்தமனகத்தோடு பாதிரிப்பூச்சூட்டவாராய். |
3 |
185 |
தெருவின்கன்-இன்று இளவாய்ச்சிமார்களைத்தீமைசெய்யாதே மருவும்தமனகமும்சீர் மாலைமணம்கமழ்கின்ற புருவம்கருங்குழல்நெற்றி பொலிந்தமுகிற்கன்றுபோலே உருவமழகியநம்பீ. உகந்திவைசூட்டநீவாராய். |
4 |
186 |
புள்ளினைவாய்பிளந்திட்டாய். பொருகரியின்கொம்பொசித்தாய். கள்ளவரக்கியைமூக்கொடு காவலனைத்தலைகொண்டாய். அள்ளிநீவெண்ணெய்விழுங்க அஞ்சாதுஅடியேன்அடித்தேன் தெள்ளியநீரிலெழுந்த செங்கழுநீர்சூட்டவாராய். |
5 |
187 |
எருதுகளோடுபொருதி ஏதும்உலோபாய்கான்-அம்பி. கருதியதீமைகள்செய்து கஞ்சனைக்கால்கொடுபாய்ந்தாய். தெருவின்கண்தீமைகள்செய்து சிக்கெனமல்லர்களோடு பொருதுவருகின்றபொன்னே. புன்னைப்பூச்சூட்டவாராய். |
6 |
188 |
குடங்களெடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்லஎம்கோவே. மடங்கொள்மதிமுகத்தாரை மால்செய்யவல்லஎன்மைந்தா. இடந்திட்டுஇரணியன்நெஞ்சை இருபிளவாகமுன்கீண்டாய். குடந்தைக்கிடந்தஎம்கோவே. குருக்கத்திப்பூச்சூட்டவாராய். |
7 |
189 |
சீமாலிகனவனோடு தோழமைகொள்ளவும்வல்லாய். சாமாறுஅவனைநீயெண்ணிச் சக்கரத்தால்தலைகொண்டாய். ஆமாறறியும்பிரானே. அணியரங்கத்தேகிடந்தாய். ஏமாற்றம்என்னைத்தவிர்த்தாய். இருவாட்சிப்பூச்சூட்டவாராய். |
8 |
190 |
அண்டத்தமரர்கள்சூழ அத்தாணியுள்ளங்கிருந்தாய். தொண்டர்கள்நெஞ்சிலுறைவாய். தூமலராள்மணவாளா. உண்டிட்டுஉலகினையேழும் ஓராலிலையில்துயில்கொண்டாய். கண்டுநான்உன்னையுகக்கக் கருமுகைப்பூச்சூட்டவாராய். |
9 |
191 |
செண்பகமல்லிகையோடு செங்கழுநீர்இருவாட்சி எண்பகர்பூவும்கொணர்ந்தேன் இன்றுஇவைசூட்டவாவென்று மண்பகர்கொண்டானை ஆய்ச்சிமகிழ்ந்துரைசெய்தஇம்மாலை பண்பகர்வில்லிபுத்தூர்க்கோன் பட்டர்பிரான்சொன்னபத்தே. |
10 |
எட்டாம் திருமொழி - இந்திரனோடு
(கண்ணனை த்ருஷ்டிதோஷம் வாராதபடி திருவந்திக்காப்பிட அழைத்தல்)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
192 |
இந்திரனோடுபிரமன் ஈசன்இமையவரெல்லாம் மந்திரமாமலர்கொண்டு மறைந்துஉவராய்வந்துநின்றார் சந்திரன்மாளிகைசேரும் சதிரர்கள்வெள்ளறைநின்றாய். அந்தியம்போதுஇதுவாகும் அழகனே. காப்பிடவாராய். |
1 |
193 |
கன்றுகள்இல்லம்புகுந்து கதறுகின்றபசுவெல்லாம் நின்றொழிந்தேன்உன்னைக்கூவி நேசமேலொன்றுமிலாதாய். மன்றில்நில்லேல் அந்திப்போது மதிள்திருவெள்ளறைநின்றாய். நன்றுகண்டாய்என்தன்சொல்லு நான்உன்னைக்காப்பிடவாராய். |
2 |
194 |
செப்போதுமென்முலையார்கள் சிறுசோறும்இல்லும்சிதைத்திட்டு அப்போதுநானுரப்பப்போய் அடிசிலுமுண்டிலைஆள்வாய். முப்போதும்வானவரேத்தும் முனிவர்கள்வெள்ளறைநின்றாய். இப்போதுநான்ஒன்றும்செய்யேன் எம்பிரான். காப்பிடவாராய். |
3 |
195 |
கண்ணில்மணல்கொடுதூவிக் காலினால்பாய்ந்தனையென்றென்று எண்ணரும்பிள்ளைகள்வந்திட்டு இவரால்முறைப்படுகின்றார் கண்ணனே. வெள்ளறைநின்றாய். கண்டாரோடேதீமைசெய்வாய். வண்ணமேவேலையதொப்பாய். வள்ளலே. காப்பிடவாராய். |
4 |
196 |
பல்லாயிரவர்இவ்வூரில்பிள்ளைகள் தீமைகள்செய்வார் எல்லாம்உன்மேலன்றிப்போகாது எம்பிரான். நீஇங்கேவாராய் நல்லார்கள்வெள்ளறைநின்றாய். ஞானச்சுடரே. உன்மேனி சொல்லாரவாழ்த்திநின்றேத்திச் சொப்படக்காப்பிடவாராய். |
5 |
197 |
கஞ்சங்கறுக்கொண்டுநின்மேல் கருநிறச்செம்மயிர்ப்பேயை வஞ்சிப்பதற்குவிடுத்தானென்பது ஓர்வார்த்தையும்உண்டு மஞ்சுதவழ்மணிமாட மதிள்திருவெள்ளறைநின்றாய். அஞ்சுவன்நீஅங்குநிற்க அழகனே. காப்பிடவாராய். |
6 |
198 |
கள்ளச்சகடும்மருதும் கலக்கழியஉதைசெய்த பிள்ளையரசே. நீபேயைப்பிடித்துமுலையுண்டபின்னை உள்ளவாறுஒன்றும்அறியேன் ஒளியுடைவெள்ளறைநின்றாய். பள்ளிகொள்போதுஇதுவாகும் பரமனே. காப்பிடவாராய். |
7 |
199 |
இன்பமதனைஉயர்த்தாய். இமையவர்க்குஎன்றும்அரியாய். கும்பக்களிறட்டகோவே. கொடுங்கஞ்சன்நெஞ்சினிற்கூற்றே. செம்பொன்மதிள்வெள்ளறையாய். செல்வத்தினால்வளர்பிள்ளாய். கம்பக்கபாலிகாண்அங்குக் கடிதோடிக்காப்பிடவாராய். |
8 |
200 |
இருக்கொடுநீர்சங்கில்கொண்டிட்டு எழில்மறையோர்வந்துநின்றார் தருக்கேல்நம்பி. சந்திநின்று தாய்சொல்லுக்கொள்ளாய்சிலநாள் திருக்காப்புநான்உன்னைச்சாத்தத் தேசுடைவெள்ளறைநின்றாய். உருக்காட்டும்அந்திவிளக்கு இன்றொளிகொள்ளஏற்றுகேன்வாராய். |
9 |
201 |
போதமர்செல்வக்கொழுந்து புணர்திருவெள்ளறையானை மாதர்க்குயர்ந்தஅசோதை மகன்தன்னைக்காப்பிட்டமாற்றம் வேதப்பயன்கொள்ளவல்ல விட்டுசித்தன்சொன்னமாலை பாதப்பயன்கொள்ளவல்ல பத்தருள்ளார்வினைபோமே. |
10 |
ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி
(வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்)
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
202 |
வெண்ணெய்விழுங்கிவெறுங்கலத்தை கண்ணபிரான்கற்றகல்விதன்னைக் புண்ணில்புளிப்பெய்தாலொக்கும்தீமை அண்ணற்கண்ணானோர்மகனைப்பெற்ற |
1 |
203 |
வருகவருகவருகஇங்கே கரியகுழல்செய்யவாய்முகத்துக் அரியனிவன்எனக்குஇன்றுநங்காய். பரிபவம்பேசத்தரிக்ககில்லேன் |
2 |
204 |
திருவுடைப்பிள்ளைதான்தீயவாறு உருகவைத்தகுடத்தொடுவெண்ணெய் அருகிருந்தார்தம்மைஅநியாயம்செய்வது வருகவென்றுஉன்மகன்தன்னைக்கூவாய் |
3 |
205 |
கொண்டல்வண்ணா. இங்கேபோதராயே தெண்திரைசூழ்திருப்பேர்க்கிடந்த உண்டுவந்தேன்அம்மனென்றுசொல்லி கண்டெதிரேசென்றெடுத்துக்கொள்ளக் |
4 |
206 |
பாலைக்கறந்துஅடுப்பேறவைத்துப் மேலையகத்தேநெருப்புவேண்டிச்சென்று சாளக்கிராமமுடையநம்பி ஆலைக்கரும்பின்மொழியனைய |
5 |
207 |
போதர்கண்டாய்இங்கேபோதர்கண்டாய் ஏதேனும்சொல்லிஅசலகத்தார் கோதுகலமுடைக்குட்டனேயா. வேதப்பொருளே. என்வேங்கடவா. |
6 |
208 |
செந்நெலரிசிசிறுபருப்புச் பன்னிரண்டுதிருவோணம்அட்டேன் இன்னமுகப்பன்நானென்றுசொல்லி உன்மகன்தன்னையசோதைநங்காய். |
7 |
209 |
கேசவனே. இங்கேபோதராயே நேசமிலாதாரகத்திருந்து தூசனம்சொல்லும்தொழுத்தைமாரும் தாய்சொல்லுக்கொள்வதுதன்மம்கண்டாய் |
8 |
210 |
கன்னலிலட்டுவத்தோடுசீடை என்னகமென்றுநான்வைத்துப்போந்தேன் பின்னும்அகம்புக்குஉறியைநோக்கிப் உன்மகன்தன்னையசோதைநங்காய். |
9 |
211 |
சொல்லிலரசிப்படுதிநங்காய். இல்லம்புகுந்துஎன்மகளைக்கூவிக் கொல்லையில்நின்றும்கொணர்ந்துவிற்ற நல்லனநாவற்பழங்கள்கொண்டு |
10 |
212 |
வண்டுகளித்திரைக்கும்பொழில்சூழ் பண்டவன்செய்தகிரீடையெல்லாம் கொண்டிவைபாடிக்குனிக்கவல்லார் எண்திசைக்கும்விளக்காகிநிற்பார் |
11 |
பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து
(ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்)
கலித்தாழிசை
213 |
ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை சேற்றாலெறிந்து வளைதுகில்கைக்கொண்டு காற்றின்கடியனாய் ஓடிஅகம்புக்கு மாற்றமும்தாரானால்இன்றுமுற்றும் வளைத்திறம்பேசானால்இன்றுமுற்றும். |
1 |
214 |
குண்டலம்தாழக் குழல்தாழநாண்தாழ எண்திசையோரும் இறைஞ்சித்தொழுதேத்த வண்டமர்பூங்குழலார் துகில்கைக்கொண்டு விண்தோய்மரத்தானால்இன்றுமுற்றும் வேண்டவும்தாரானால்இன்றுமுற்றும். |
2 |
215 |
தடம்படுதாமரைப் பொய்கைகலக்கி விடம்படுநாகத்தை வால்பற்றிஈர்த்து படம்படுபைந்தலை மேலெழப்பாய்ந்திட்டு உடம்பையசைத்தானால்இன்றுமுற்றும் உச்சியில்நின்றானால்இன்றுமுற்றும். |
3 |
216 |
தேனுகனாவி செகுத்து பனங்கனி தானெறிந்திட்ட தடம்பெருந்தோளினால் வானவர்கோன்விட வந்தமழைதடுத்து ஆனிரைகாத்தானால்இன்றுமுற்றும் அவையுய்யக்கொண்டானால்இன்றுமுற்றும். |
4 |
217 |
ஆய்ச்சியர்சேரி அளைதயிர்பாலுண்டு பேர்த்தவர்கண்டுபிடிக்கப் பிடியுண்டு வேய்த்தடந்தோளினார் வெண்ணெய்கொள்மாட்டாது அங்கு ஆப்புண்டிருந்தானால்இன்றுமுற்றும் அடியுண்டழுதானால்இன்றுமுற்றும். |
5 |
218 |
தள்ளித்தளிர்நடையிட்டு இளம்பிள்ளையாய் உள்ளத்தினுள்ளே அவளையுறநோக்கி கள்ளத்தினால்வந்த பேய்ச்சிமுலையுயிர் துள்ளச்சுவைத்தானால்இன்றுமுற்றும் துவக்கறவுண்டானால்இன்றுமுற்றும். |
6 |
219 |
மாவலிவேள்வியில் மாணுருவாய்ச்சென்று மூவடிதாவென்று இரந்தஇம்மண்ணினை ஓரடியிட்டு இரண்டாமடிதன்னிலே தாவடியிட்டானால்இன்றுமுற்றும் தரணியளந்தானால்இன்றுமுற்றும். |
7 |
220 |
தாழைதண்ணாம்பல் தடம்பெரும்பொய்கைவாய் வாழுமுதலை வலைப்பட்டுவாதிப்புண் வேழம்துயர்கெட விண்ணோர்பெருமானாய் ஆழிபணிகொண்டானால்இன்றுமுற்றும் அதற்குஅருள்செய்தானால்இன்றுமுற்றும். |
8 |
221 |
வானத்தெழுந்த மழைமுகில்போல் எங்கும் கானத்துமேய்ந்து களித்துவிளையாடி ஏனத்துருவாய் இடந்தஇம்மண்ணினை தானத்தேவைத்தானால்இன்றுமுற்றும் தரணியிடந்தானால்இன்றுமுற்றும். |
9 |
தரவு கொச்சகக்கலிப்பா
222 |
அங்கமலக்கண்ணன்தன்னை யசோதைக்கு மங்கைநல்லார்கள்தாம் வந்துமுறைப்பட்ட அங்கவர்சொல்லைப் புதுவைப்கோன்பட்டன்சொல் இங்கிவைவல்லவர்க்கு ஏதமொன்றில்லையே. |
10 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த பெரியாழ்வார் திருமொழி - Naalaayira Divya Prabandham - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - Vaishnava Literature's - வைணவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய இலக்கியங்கள் - அம்மனே, திருமொழி, அப்பூச்சிகாட்டுகின்றான், இங்கேவாராய், இங்கேபோதராயே, காப்பிடவாராய், கொச்சகக்கலிப்பா, மஞ்சனமாடநீவாராய், முலையுணாயே, கலித்தாழிசை, எம்பிரான், அழைத்தல், அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம், கண்ணனை, சோத்தம்பிரான், தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா, அக்காக்காய், துரியோதனன்பக்கல், ஆற்றிலிருந்து, அசோதைநங்காய், உன்மகன்தன்னையசோதைநங்காய், நீஓடித்திரியாதே, வருகஇங்கே, உன்மகனைக்கூவாய், மதிள்திருவெள்ளறைநின்றாய், உண்ணக்கனிகள்தருவன், நீமுலையுணாயே, நீஇங்கேவாராய், கோவிந்தா, இருடீகேசா, அரவணையாய், விட்டிட்டேன்குற்றமேயன்றே, இரண்டாம், காக்கையை, ஓடாதேவாராய், நீராடவாராய், தாமோதரா, வெண்ணெய்விழுங்கி