புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள் - புரட்சிக்கவி
[பில்கணீயம் என்ற வடமொழி நூலைத் தழுவியது]
அகவல் அரசன் அமைச்சர்பால் அறிவிக்கின்றான்; 'அமுத வல்லிஎன் ஆசைக் கொருபெண் தமிழிலக் கியங்கள் தமிழிலக்கணங்கள் அமைவுற ஆய்ந்தாள்; அயல்மொழி பயின்றாள்; ஆர்ந்த ஒழுக்கநூல், நீதிநூல் அறிந்தாள்; அனைத்தும் உணர்ந்தா ளாயினும், அன்னாள் கவிதை புனையக் கற்றாளில்லை. மலரும், பாடும் வண்டும், தளிரும், மலையும், கடலும், வாவியும், ஓடையும், விண்ணின் விரிவும், மண்ணின் வனப்பும், மேலோர் மேன்மையும், மெலிந்தோர் மெலிவும் தமிழின் அமுதத் தன்மையும், நன்மையும், காலைஅம் பரிதியும், மாலை மதியமும் கண்ணையும் மனத்தையும் கவர்வன; அதனால் என்மகள் அகத்தில் எழுந்த கவிதையைப் புறத்தில் பிறர்க்குப் புலப்படுத் துதற்குச் செய்யுள் இலக்கணம் தெரிதல் வேண்டுமாம்! ஏற்றஒர் ஆசான் எங்குள்ளான்? தோற்றியவாறு சொல்க அமைச்சரே!' |
எண்சீர் விருத்தம் தலைமை அமைச்சன் புகல்வான்: 'எனதுமன்னா, புலவன்; உயர்கவிஞன்; அவன்பேர் உதாரன்! இலையிந்த நாட்டினிலே அவனை ஒப்பார்! குலமகளை அன்னவன்பால் கற்க விட்டால் ஆனாலும் நானிதற்கோர் மார்க்கம் சொல்வேன்: தேனிதழாள் தனைஅவனும், அவனைப் பெண்ணும் பானல்விழி மங்கையிடம் 'உதாரனுக்குப் ஞானமுறும் உதாரனிடம் 'அமுதவல்லி தார்வேந்தன் இதுகேட்டான்; வியந்தான்! 'ஆம் ஆம் பேர்வாய்ந்த உதாரனைப்போய் அழைப்பீர்' என்றான். தேர்வாய்ந்த புவிராஜன் போலே யந்தச் பார்வேந்தன் நிகழ்த்தினான்; உதாரன் கேட்டுப் |
சிந்து
கண்ணி மன்னவன் ஆணைப்படி-கன்னி மாடத்தைச் சேர்ந்ததொரு பன்னரும் பூஞ்சோலை-நடுப் பாங்கில் ஓர் பொன்மேடை! அன்னதோர் மேடையிலே-திரை ஆர்ந்த மறைவினிலே மின்னொளி கேட்டிருப்பாள்-கவி வேந்தன் உரைத்திடுவான்! யாப்புமுறை உரைப்பான்-அணி யாவும் உரைத்திடுவான்; பாப்புனை தற்கான-அநு பவம்பல புகல்வான். தீர்ப்புற அன்னவளும்-ஆசு சித்திரம் நன்மதுரம் சேர்ப்புறு வித்தாரம்-எனும் தீங்கவிதை யனைத்தும். கற்றுவர லானாள்-அது கால பரியந்தம் சற்றும் அவன்முகத்தை-அவள் சந்திக்க வில்லை! விழி அற்றவனைப் பார்த்தால்-ஓர்¢ அபசகுன மென்றே! உற்றதோர் நோயுடையாள்-என்று உதாரனும் பார்த்ததில்லை! இவ்விதம் நாட்கள்பலப்-பல ஏகிட ஓர் தினத்தில் வெவ்விழி வேலுடையாள்-அந்த மேடையிற் காத்திருந்தாள். அவ்வமயந் தனிலே-விண் அத்தனையும் ஒளியால் கவ்வி உயர்ந்ததுபார்-இருட் காட்டை அழித்த நிலா! |
எண்சீர் விருத்தம் அமுதவல்லி காத்திருந்த மேடை யண்டை இமையாது நோக்கினான் முழு நிலாவை! சுமைசுமையாய் உவப்பெடுக்க, உணர்வு வெள்ளம் அமைத்திட்டாள் நற்கவிதை! மழைபோற் பெய்தான்! 'நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து கோலமுழு தும்காட்டி விட்டால் காதற் சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்! காலைவந்த செம்பரிதி கடலில்முழ்கிக் அந்தியிருளாற் கருகும் உலகு கண்டேன்! பிந்தியந்தக் காரிருள்தான் சிரித்த துண்டோ? சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம் இந்தாவென் றேஇயற்கை அன்னை வானில் உனைக்காணும் போதினிலே என்னு ளத்தில் நினைத்தாலும் வார்த்தைகிடைத் திடுவ தில்லை தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள் கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம் உன்னைஎன திருவிழியாற் காணுகின்றேன்; இன்னலெலாம் தவிர்க்கின்றேன்; களிகொள் கின்றேன் அன்புள்ளம் பூணுகின்றேன்; அதுவு முற்றி இன்பமெனும் பால்நுரையே! குளிர்விளக்கே! |
வேறு சிந்து கண்ணி
இவ்வித மாக உதாரனும்-தன தின்குரலால் வெண்ணி லாவையே திவ்விய வர்ணனை பாடவே-செவி தேக்கிய கன்னங் கருங்குயில், 'அவ்வறிஞன் கவி வல்லவன்-விழி அற்றவ னாயின்; நிலாவினை எவ்விதம் பார்த்தனன், பாடினன்?-இதில் எத்துக்கள் உண்டெ'ன ஓடியே. சாதுரியச் சொல் உதாரனை-அவன் தாமரைக் கண்ணெடும் கண்டனள்! ஓது மலைக் குலம்போலவே-அவன் ஓங்கிய தோள்களைக் கண்டனள்! 'ஏதிது போன்றஓ ராண்எழில்-குறை இன்றித் திருந்திய சித்திரம்? சோதி நிலாவுக்கும் மாசுண்டாம்-இச் சுந்தரனோ கறை ஒன்றிலான்!' என்று வியப்புடன் நின்றனள்;-அந்த ஏந்திழை தன்னெதிர் நின்றதைத் தன்னிக ரற்ற உதாரனும்-கண்டு தன்னை மறந்த வனாகியே என்ன வியப்பது? வானிலே-இருந் திட்டதோர் மாமதி மங்கையாய் என்னெதுரே வந்து வாய்த்ததோ?-புவிக் கேதிது போலொரு தண்ஒளி! மின்னற் குலத்தில் விளைந்ததோ?-வான் வில்லின் குலத்திற் பிறந்ததோ? கன்னற் றமிழ்க்கவி வாணரின்-உளக் கற்பனையே உருப் பெற்றதோ? பொன்னின் உருக்கிற் பொலிந்ததோ?-ஒரு பூங்கொடியோ? மலர்க் கூட்டமோ?' என்று நினைத்த உதாரன்தான்-'நீ யார்?' என்ற ஓர்உரை போக்கினான். 'அமுதவல்லி யன்றோ!' என்றாள்-'அந்த அமைச் சனும்முடி வேந்தனும் நமைப் பிரித்திடும் எண்ணத்தால்-உனை நாட்டம் இல்லாதவன் என்றனர்! சமுச யப்பட நீஇன்று-மதி தரிசன மதைப் பாடினை! கமலங் கள்எனும் கண்ணுடன்-உனைக் காணப் பெற்றதென் கண்' என்றாள். |
எண்சீர் விருத்தம்
'இன்னொன்று கேளாயோ அமுதவல்லி! முன்னொன்று தீவினையால் பெருநோய் வந்து மின்ஒன்று பெண்ணென்று புவியில் வந்து இன்றுவரை நான்பார்க்க எண்ண வில்லை' 'காரிருளால் சூரியன்தான் மறைவ துண்டோ? பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மை யாமோ? நேர்இருத்தித் தீர்ப்புரைத்துச் சிறையிற் போட்டால் சீரழகே! தீந்தமிழே! உனைஎன் கண்ணைத் |
பஃறொடை வெண்பா
'வானத்தை வெண்ணிலா வந்து தழுவுவதும் மோனத் திருக்கும் முதிர்சோலை மெய்சிலிர்க்க ஆனந்தத் தென்றல்வந் தாரத் தழுவுவதும் நானோக்கி நோக்கி நலிதலினைக் காணாயோ? சித்திரித்த ஆணழகே, சென்றுபடர் முல்லையினைக் கத்திரித்தல் இன்றிக் கரந்தழுவும் மாமரமும், சத்தமிட்ட வண்டு தடாகத்தின் அல்லியினை முத்தமிட்டுத் தேன்குடிக்கும் நல்ல முடிவும், உணர்வுதனை உண்டாக்க வில்லையோ உன்பால்? தணலைத்தான் வீசுகின்றான் சந்திரனும் என்மேல்! குணமுள்ளார், கொஞ்சவரும் கோதையரைக் காதற் பிணமாக்கித் தாங்கள் பிழைக்க நினைப்பாரோ? என்றுதன் காதல் எரிதழலுக் காற்றாமல் சென்றுதன் நெஞ்சம் தெரிவித்தாள் சேல்விழியாள்! 'நன்று மடமயிலே? நான்பசியால் வாடுகின்றேன்; குன்றுபோல் அன்னம் குவித்திருக்கு தென்னெதிரில்! உண்ண முடியாதே ஊராள்வோன் கூர்வாளும் வண்ணமுடிச் செல்வாக்கும் வந்து மறிக்குதடி! எண்ணக் கடலில் எழுங்காதல் நீளலைதான் உண்ணும் மணிக்குளத்தில் ஓடிக் கலக்காமல் நால்வருணங் கள்விதித்தார் நாட்டார்கள்; அன்னவற்றில் மேல்வருணம் கோல்கொண்டு மேதினியை ஆள்வருணம் நீயன்றோ பெண்ணே! நினைப்பை அகற்றிவிடு! நாயென்றே எண்ணிஎனை நத்தாமல் நின்றுவிடு! வேல்விழியால் என்றன் விலாப்புறத்தைக் கொந்தாதே! பால்போல் மொழியால் பதைக்கஉயிர் வாங்காதே! கண்ணாடிக் கன்னத்தைக் காட்டிஎன் உள்ளத்தைப் புண்ணாக்கிப் போடாதே; போபோ மறைந்துவிடு! காதல் நெருப்பால் கடலுன்மேல் தாவிடுவேன் சாதிஎனும் சங்கிலிஎன் தாளைப் பிணித்ததடீ! பாளைச் சிரிப்பில்நான் இன்று பதறிவிட்டால் நாளைக்கு வேந்தனெனும் நச்சரவுக்கு என்செய்வேன்? கொஞ்சு தமிழ்த்தேன் குடித்துவிட அட்டியில்லை அஞ்சுவ தஞ்சாமை பேதமையன் றோஅணங்கே? ஆணிப்பொன் மேனி அதில்கிடக்கும் நல்லொளியைக் காணிக்கை நீவைத்தால் காப்பரசர் வாராரோ? பட்டாளச் சக்ரவர்த்தி பார்த்தாலும் உன்சிரிப்புக் கட்டாணி முத்துக்குக் காலில்விழ மாட்டாரோ? என்றழுதான் விம்மி இளையான், கவியரசன். குன்றும் இரங்கும்! கொடும்பாம்பும் நெஞ்சிளகும்! ஏழையரைக் கொல்ல எதிரிருந்து பார்த்திருப்போர் பாழான நெஞ்சும் சிலசமயம் பார்த்துஇரங்கும்! சித்தும் துடிக்கின்ற சேயின் நிலைமைக்கு ரத்தவெறி கொண்டலையும் நால்வருணம் ஏனிரங்கும்? ரத்தவெறி கொண்டலையும் ராசன்மனம் ஏனிரங்கும்? அத்தருணம் அந்த அமுல்லி ஈதுசொல்வாள்: 'வாளை உருவிவந்து மன்னன் எனதுடலை நாளையே வெட்டி நடுக்கடலில் போடட்டும், காளைஉன் கைகள்எனைக் காவாமல் போகட்டும், தாளை அடைந்தஇத் தையல்உள்ளம் மாறாதே! ஆதரவு காட்டாமல் ஐய! எனைவிடுத்தால் பாதர¬க்ஷ போலுன்றன் பாதம் தொடர்வதன்றி, வேறு கதியறியேன்; வேந்தன் சதுர்வருணம் சீறும்எனில் இந்தஉடல் தீர்ந்தபின்னும் சீறிடுமோ? ஆரத் தழுவி அடுத்தவினா டிக்குள்உயிர் தீரவரும் எனிலும் தேன்போல் வரவேற்பேன்! அன்றியும்என் காதல் அமுதே! நமதுள்ளம் ஒன்றுபட்ட பின்னர் உயர்வென்ன தாழ்வென்ன? நாட்டின் இளவரசி நான்ஒருத்தி! ஆதலினால் கோட்டை அரசன்எனைக் கொல்வதற்குச் சட்டமில்லை! கோல்வேந்தன் என்காதற் கொன்றவனைக் கொல்லவந்தால், சேல்விழியாள் யான்எனது செல்வாக்கால் காத்திடுவேன்! சாதிஉயர் வென்றும் தனத்தால் உயர்வென்றும், போதாக் குறைக்குப் பொதுத்தொழிலாளர்சமுகம் மெத்த இனிவென்றும், மிகுபெரும்ப லோரைஎல்லாம் கத்தி முனைகாட்டிக் காலமெல்லாம் ஏய்த்துவரும் பாவி களைத்திருத்தப் பாவலனே நம்மிருவர் ஆவி களையேனும் அர்ப்பணம்செய்வோம்! இதனை நெஞ்சார உன்மேலே நேரிழையாள் கொண்டுள்ள மிஞ்சுகின்ற காதலின்மேல் ஆணையிட்டு விள்ளுகின்றேன்! இன்னும் என்ன?' என்றாள் உதாரன் விரைந்தோடி அன்னத்தைத் தூக்கியே ஆரத்தழுவினான். இனப உலகில் இருவர்களும் நாள் கழித்தார் பின்பொருநாள் அந்தப் பெருமாட்டி அங்கமெலாம் மாறுபடக் கண்டு மனம் பதறித் தோழியர்கள் வேறு ஒழியின்றி வேந்தனிடம் ஓடியே 'மன்னவனே! உன் அருமை மங்கை அமுதவல்லி தன்னை உதாரனுக்குத் தத்தம் புரிந்தாளோ, காதல்எனும் இனபக் கடலில் குளித்துவிட்ட மாதிரியாய்த் தோன்றுகிறாள், மற்றிதனை மேன்மைச் சமூகத்தில் விண்ணப்பம் சாதித்தோம்' என்றார். அமைதி யுடைய அரசன் அதன்உண்மை கண்டறிய வேண்டுமென்று கன்னிகைமா டத்தருகே அண்டியிருந் தான்இரவில் ஆரும் அறியாமல்! வந்த உதாரன்எழில் மங்கைக்கு கைலாகு தந்து, தமிழில் தனிக்காதலைக் கலந்து பேசினதும், காத்திருந்த பெண்ணரசி வேல்விழியை வீசினதும், முத்தம் விளைத்த நடைமுறையும் கண்டான் அரசன்! கடுகடுத்தான்! ஆயிரந்தேள் மண்டையிலே மாட்டியது போல மனமுளைந்து மாளிகைக்குச் சென்றான் மறுநாள் விடியலிலே வாளில் விஷம்பூசி வைத்திருக்கச் சொல்லிவிட்டுச் சேவகரைச் சீக்கிரம் உதாரனை இழுத்துவர ஏவினான், அவ்வா றிழுத்துவந்தார் வேந்தனிடம். இச்சேதி ஊரில் எவரும் அறிந்தார்கள்; அச்சமயம் எல்லாரும் அங்குவந்து கூடிவிட்டார். ஆர்ந்த கவியின் அரசனுயிர் இன்றோடு தீர்ந்ததோ என்று திடுக்கிட்டார் எல்லாரும். ஈடற்ற நற்கவிஞன் இந்நிலைமை, அக்கன்னி மாடத்தில் உள்ளஎழில் மங்கைக்கும் எட்டியதாம். அங்கே உதாரனிடம் மன்னன் உரைக்கின்றான், சிங்காதனத்திலே சேர்ந்து: 'கொற்றவன் பெற்ற குலக்கொடியைக் கவி குற்றம் புரிந்தனையா இல்லையா இதை வெற்றி எட்டுதிக்கும் முற்றிலுமே சென்று இற்றைக்கு நின்தலை அற்றது! மற்றென்னை வாள்பிடித் தேபுவி ஆளுமி ராசர்என் ஆள் பிடித்தால் பிடி ஒன்றிருப்பாய் என்ன மீள்வதற்கோ இந்தத் தீமை புரிந்தனை மாள்வதற்கே இன்று மாள்வதற்கே' என்று மாமயில் கண்டு மகிழ்ந்தாடும் முகில் ஆம்என்று நீயுரைத் தால்குற்றமே! குற்றம் கோமகள் என்னைக் குறையிரந்தாள் அவள் காமனும் தள்ளிடக் காலிடறிற்றுக் பழகும் இருட்டினில் நானிருந்தேன் எதிர் அழகு வெளிச்சம் அடித்த தென்மேல் பிழைபுரிந்தே னென்று தண்டனை போடுமுன் இழைபுரிச் சிற்றிடை அமுதவல்லிக் குள்ள |
நொண்டிச் சிந்து
கவிஞன் இவ்வா றுரைத்தான்-புவி காப்பவன் இடியெனக் கனன்றுரைப்பான்: 'குவிந்த உன் உடற்சதையைப்-பல கூறிட்டு நரிதின்னக் கொடுத்திடுவேன். தவந்தனில் ஈன்ற என்பெண்-மனம் தாங்குவ தில்லையெனிற் கவலை யில்லை! நவிலுமுன் பெரும்பிழைக்கெ-தக்க ராசதண்டனையுண்டு! மாற்ற முண்டோ? அரசனின் புதல்வி அவள்-எனில் அயலவ னிடம்மனம் அடைதலுண்டோ? சரச நிலையி லிருந்தீர்-அந்தத் தையலும் நீயும்அத் தருணமதில் இருவிழி யாற்பார்த்தேன்!-அறி விலி, உனதொரு குடி அடியோடே விரைவில்என் ஆட்சியிலே-ஒரு வேர்இன்றிப் பெயர்த்திட விதித்துவிட்டேன்!' 'கொலைஞர்கள் வருக' என்றான்-அவன் கூப்பிடு முன் வந்து கூடிவிட்டார் 'சிலையிடை இவனை வைத்தே-சிரச் சேதம் புரிக' எனச் செப்பிடுமுனம் மலையினைப் பிளந்திடும் ஓர்-சத்தம் வந்தது! வந்தனள் அமுதவல்லி! 'இலை உனக் கதிகாரம்-அந்த எழிலுடையான் பிழை இழைக்கவில்லை. ஒருவனும் ஒருத்தியுமாய்-மனம் உவந்திடில் பிழையென உரைப்பதுண்டோ? அரசென ஒருசாதி-அதற் கயலென வேறொரு சாதியுண்டோ? கரிசன நால்வருணம்-தனைக் காத்திடும் கருத்தெனில், இலக்கணந் தான் தரும்படி அவனை இங்கே-நீ தருவித்த வகையது சரிதா னோ? என்மனம் காதலனைச்-சென் றிழுத்தபின் னேஅவன் இணங்கின தால் அன்னவன் பிழையிலனாம்! அதற் கணங்கெனைத் தண்டித்தல் முறையெனினும், மன்னநின் ஒருமகள் நான்-எனை வருத்திட உனக்கதிகாரமில்லை! உன்குடிக் கூறிழைத்தான்-எனில் ஊர்மக்கள் இடம்அதை உரைத்தல் கடன்!' என்றபற் பலவார்த்தை-வான் இடியென உரைத்துமின் னெனநகைத்தே முன்னின்ற கொலைஞர் வசம்-நின்ற முழுதுணர் கவிஞனைத்-தனதுயிரை மென்மலர்க் கரத்தாலே-சென்று மீட்டனள் வெடுக்கெனத் தாட்டிகத்தால். மன்னவன் இருவிழியும்-பொறி வழங்கிட எழுந்தனன்; மொழிந்திடுவான்: |
கும்மி 'நாயை இழுத்துப் புறம் விடுப்பீர்-கெட்ட நாவை அறுத்துத் தொலைக்கு முன்னே!-இந்தப் பேயினை நான்பெற்ற பெண்ணெனவே சொல்லும் பேச்சை மறந்திடச் சொல்லிடுவீர்!-என் தூய குடிக்கொரு தோஷத்தையே தந்த துட்டச் சிறுக்கியைக் காவற்சிறை-தன்னில் போய் அடைப்பீர்! அந்தப் பொய்யனை ஊரெதிர் போட்டுக் கொலை செய்யக் கூட்டிச் செல்வீர்!' என்றுரைத்தான், இருசேவகர்கள்-அந்த ஏந்திழை அண்டை நெருங் கிவிட்டார்!-அயல் நின்ற கொலைஞர், உதாரனை யும்' நட நீஎன் றதட்டினர்! அச்சமயம்-அந்த மன்றி லிருந்தவேர் மந்திரிதான்-முடி மன்னனை நோக்கி யுரைத்திடுவான்-'நீதி அன்றிது மங்கைக் கிழைத்திருக்கும் தண்டம்; அன்னது நீக்கி யருள்க என்றான். |
எண்சீர் விருத்தம்
'காதலனைக் கொலைக்களத்துக்கு அனுப்பக்¢ கண்டும் நீதிநன்று மந்திரியே! அவன்இறந்தால் சாதல்எனில் இருவருமே சாதல் வேண்டும். ஒதுகஇவ் விரண்டிலொன்று மன்னவன்வாய்! என்ஆனை மறுப்பீரோ சபையி லுள்ளீர்! பின்நாணும் படிசும்மா இருப்ப துண்டோ? என் ஆணை! என் ஆணை !! உதார னோடே கன்மீதி லேகிடத்திக் கொலைசெய்வீர்கள் அவையினிலே அசைவில்லை பேச்சு மில்லை; சுவையறிந்த பிறகுணவின் சுகம்சொல் வார்போல் எவையும்நமைப் பிரிக்கவில்லை; இன்பம் கண்டோம்; நவையுடைய மன்னனுக்கு நாட்டு மக்கள் இருந்திங்கே அநீதியிடை வாழ வேண்டாம் பருந்தும், கண்மூடாத நரியும் நாயும், பொருந்தட்டும்; கொலைசெய்யும் எதேச்சை மன்னன் அருந்தட்டும்!' என்றாள் காதலர்கள் சென்றார்! கொலைக்களத்தில் கொலைஞர்களும் அதிகா ரங்கள் அலைகடல்போல் நாட்டார்கள் வீடு பூட்டி சிலைக்குநிகர் மங்கைக்கும் 'கடைசி யாகச் தலைப்பாகை அதிகாரி விடைதந் திட்டான்; பேரன்பு கொண்டவரே, பெரியோ ரேஎன் நீரோடை நிலங்கிழிக்க, நெடுமரங்கள் நேரோடி வாழ்ந்திருக்கப் பருக்கைக் கல்லின் போராடும் பாழ்நிலத்தை அந்த நாளில் சிற்றூரும், வரப்பெடுத்த வயலும், ஆறு நெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும் கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக் பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு லத்தைப் அக்கால உலகிருட்டைத் தலைகீ ழாக்கி இக்கால நால்வருணம் அன்றி ருந்தால் புக்கபயன் உண்டாமோ? பொழுது தோறும் கக்கும்விஷம் பாம்பினுக்கும் பிலத்தினுக்கும் பலியாகிக் கால்கைகள் உடல்கள் சிந்தும் சலியாத வருவாயும் உடைய தாகத் எலியாக முயலாக இருக்கின் றார்கள்! புலிவேஷம் போடுகின்றான்! பொதுமக் கட்குப் அரசனுக்கும் எனக்குமொரு வழக்குண் டாக சரியென்றேன்; ஒப்பவில்லை! இவளும் நானும் ஒருமனிதன் தேவைக்கே இந்தத் தேசம இருவர்இதோ சாகின்றோம்! நாளை நீங்கள் தன்மகளுக் கெனை அழைத்துக் கவிதை சொல்லித் பொன்மகளும் எனைக்காதல் எந்தி ரத்தால் என்உயிருக் கழவில்லை! அந்தோ! என்றன் மன்னுடல்வெட் டப்படுமோர் மாப ழிக்கு 'தமிழறிந்த தால் வேந்தன் எனை அழைத்தான் ¢ அமுதென்று சொல்லுமிந்தத் தமிழ்என் னாவி சமுதாயம் நினைத்திடுமோ? ஐயகோ! என் உமைஒன்று வேண்டுகின்றேன் மாசில் லாத அரசனுக்குப் பின்னிந்தத் தூய நாட்டை அரசனுக்கோ அதிகாரம் உங்க ளுக்கோ? சிரம்அறுத்தல் வேந்தனுக்குப் பொழுது போக்கும் அரசன்மகள் தன்நாளில் குடிகட்கு எல்லாம் ஐயகோ சாகின்றாள்! அவளைக் காப்பீர்! வையகத்தில் உன்பெருமை தன்னை நல்ல பெய்யுநறுஞ் சோலையினைத், தமிழாற் பாடும் மெய்யிதயம் அறுபடவும், அவ்விரத்த வாழியென் நன்னாடு பொன்னா டாக! வீழியபோய் மண்ணிடையே விண்வீழ் கொள்ளி ஏழையினேன் கடைசிமுறை வணக்கம் செய்தேன்! ஆழ்கஎன்றன் குருதியெலாம் அன்பு நாட்டில் படிகத்தைப் பாலாபி ஷேகம் செய்து அடிசேர்தல் கண்டார்கள் அங்கி ருந்தோர் படிமீது வாழாரோ?' என்று சொல்லிப் கொடிதென்றார்! கொடுவாளைப் பறித்தார்; அந்தக் கவிஞனுக்கும் காதலிக்கும் மீட்சி தந்தார்! 'புவியாட்சி தனிஉனக்குத் தாரோம் என்று செவியினிலே ஏறிற்றுப், போனான் வேந்தன்! நவையின்றி யெய்துதற்குச் சட்டம் செய்தார்! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புரட்சிக்கவி - Bharathidasan Books - புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - அமுதவல்லி, என்றான், துண்டோ, என்றாள், மன்னன், உதாரன், வேந்தன், விருத்தம், எண்சீர், உதாரனை, குற்றம், நால்வருணம், கின்றேன், இன்பம், ஆர்ந்த, சிந்து, உதாரனும், உதாரனிடம், மக்கள், மில்லை