புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள் - குடும்ப விளக்கு - முதற் பகுதி
ஒருநாள் நிகழ்ச்சி
அகவல்
காலை மலர்ந்தது
இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை, இரவு போர்த்த இருள் நீங்கவில்லை. ஆயினும் கேள்வியால் அகலும் மடமைபோல், நள்ளிரவு மெதுவாய் நடந்துகொண் டிருந்தது. தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த கலப்பென இருள்தன் கட்டுக் குலைந்தது. புலர்ந்திடப் போகும் பொழுது, கட்டிலில் மலர்ந்தன அந்த மங்கையின் விழிகள். |
அவள் எழுந்தாள்
தூக்கத் தோடு தூங்கி யிருந்த ஊக்கமும் சுறுசுறுப் புள்ளமும், மங்கை எழுந்ததும் எழுந்தன இருகை வீசி; தெளிவிலாக் கருக்கலில் ஒளிபடும் அவள்விழி குளத்து நீரில் குதிக்கும் கெண்டைமீன்! |
கோலமிட்டாள்
சின்ன மூக்குத் திருகொடு தொங்கும் பொன்னாற் செய்த பொடிமுத் தைப்போல் துளிஒளி விளக்கின் தூண்டு கோலைச் செங்காந் தள்நிகர் மங்கை விரலால் பெரிது செய்து விரிமலர்க் கையில் ஏந்தி, அன்னம் வாய்ந்த நடையொடு, முல்லை அரும்பு முத்தாய்ப் பிறக்கும், கொல்லை யடைந்து குளிர்புதுப் புனலை மொண்டாள்; மொண்டு, முகத்தைத் துலக்கி உண்டநீர் முத்தாய் உதிர்த்துப் பின்னும் சேந்துநீர் செங்கை ஏந்தித் தெருக்கதவு சார்ந்ததாழ் திறந்து, தகடுபோற் குறடு கூட்டி, மெருகு தீட்டிக் கழுவி, அரிசிமாக் கோலம் அமைத்தனள்; அவளுக்குப் பரிசில் நீட்டினான் பகலவன் பொன்னொளி! |
காலைப் பாட்டு
இல்லத்தினிலே எகினாள்; ஏகி யாழின் உறையினை எடுத்தாள்; இசையில் 'வாழிய வையம் வாழிய' என்று பாவலர் தமிழிற் பழச்சுவை சேர்த்தாள். தீங்கிலாத் தமிழில் தேனிசைக் கலவைபோய்த் தூங்கிய பிள்ளைகள், தூங்கிய கணவனின் காதின் வழியே கருத்தில் கலக்கவே, மாதின் எதிர்அவர் வந்துட் கார்ந்தனர். அமைதி தழுவிய இளம் பகல், கமழக் கமழத் தமிழிசை பாடினாள். |
வீட்டு வேலைகள்
பறந்தனள் பச்சைப் பசுங்கிளி; மாடு கறந்தனள்; வீட்டை நிறம் புரிந்தனள்; செம்பு தவளை செழும்பொன் ஆக்கினாள்; பைம்புனல் தேக்கினாள், பற்ற வைத்த அடுப்பினில் விளைத்த அப் பம் அடுக்கிக் குடிக்க இனிய கொத்து மல்லிநீர் இறக்கிப் பாலொடு சர்க்கரை இட்டு நிறக்க அன்பு நிறையப் பிசைந்த முத்தான வாயால் முழுநிலா முகத்தாள் "அத்தான்" என்றனள்; அழகியோன் வந்தான். |
கணவனுக்கு உதவி
வந்த கணவன் மகிழும் வண்ணம் குளிர்புனல் காட்டிக் குளிக்கச் சொல்லி, துளிதேன் சூழும் களிவண்டு போல அன்பனின் அழகிய பொன்னுடல் சூழ்ந்து, மின்னிடை துவள, முன்னின் றுதவி, வெள்ளுடை விரித்து மேனி துடைத்தபின், |
குழந்தைகட்குத் தொண்டு
" பிள்ளைகாள்" என்றனள்! கிள்ளைகள் வந்தனர்! தூய பசும்பொன் துளிகளைப் போன்ற சீயக் காய்த்தூள் செங்கையால் அள்ளிச் சிட்டுக் காட்டியும் சிறுகதை சொல்லியும் தொட்டுத் தேய்த்துத் துளிருடல் நலங்காது நின்ற திருக்கோலப் பொன்னின் சிலைகட்கு நன்னீ ராட்டி நலஞ்செய்த பின்னர் பூவிதழ் மேற்பனி தூவிய துளிபோல் ஓவியக் குழந்தைகள் உடலில்நீர்த் துளிகளைத் துடைத்து நெஞ்சில் சுரக்கும் அன்பை அடங்கா தவளாய் அழகுமுத் தளித்தே, "பறப்பீர் பச்சைப் புறாக்களே"என, அவர் அறைக்குள் ஆடைபூண் டம்பலத் தாடினார். |
காலையுணவு
அடுக்களைத் தந்தி அனுப்பினாள் மங்கை; "வந்தேன் என்று மணாளன் வந்தான்; "வந்தோம் என்று வந்தனர் பிள்ளைகள். பந்தியில் அனைவரும் குந்தினர் வரிசையாய். தழைத்த வாழைத் தளிரிலை தன்னில் பழத்தொடு படைத்த பண்டம் உண்டனர்; காய்ச்சிய நறுநீர் கனிவாய்ப் பருகினர். |
தய்தான் வாத்திச்சி
நேரம் போவது நினையா திருக்கையில் பாய்ச்சிய செங்கதிர் பட்டது சுவர்மேல்; அவள்கண்டு, காலை "ஆறுமணி" என உரைத்தாள்; கணவன், "இருக்கா" தென்றான். உண்டுண் டுண்டென ஒலித்தது சுவரின் அண்டையில் இருந்த அடுக்கும் மணிப்பொறி. பாடம் சொல்லப் பாவை தொடங்கினாள். அவள் வாத் திச்சி அறைவீடு கழகம்; தவழ்ந்தது சங்கத் தமிழ்ச்சுவை; அள்ளி விழுங்கினார் பிள்ளைகள்; "வேளையா யிற்றே! |
பள்ளிக்குப் பிள்ளைகள்
எழுங்கள்" என்றனள், எழுந்தனர்; சுவடியை ஒழுங்குற அடுக்கி, உடை அணிவித்துப் புன்னை இலைபோல் புதையடிச் செருப்புகள் சின்னவர் காலிற் செருகிச் சிறுகுடை கையில் தந்து, கையொடு கூட்டித் தையல், தெருவரை தானும் நடந்து, பள்ளி நோக்கித் தள்ளாடி நடக்கும் பிள்ளைகள் பின்னழகு வெள்ளம் பருகிக் கிளைமா றும்பசுங் கிளிபோல் ஓடி அளவ ளாவினாள் ஆள னிடத்தில். |
கடைக்குப்போகும் கணவன்
கடைக்குச் செல்லக் கணவன், அழகிய உடைகள் எடுத்தே உடுக்க லானான். "கழுத்துவரை உள்ள கரிய தலைமயிர் மழுக்குவீர் அத்தான்"என்று மங்கை சொன்னாள். நறுநெய் தடவி நன்றாய்ச் சீவி முறுக்கு மீசையை நிறுத்திச் சராயினை இட்டிடை இறுக்கி எழிலுறத் தொங்கும் சட்டை மாட்டத் தன்கையில் எடுத்தான். பொத்தலும் கிழிசலும் பூவை கண்டாள்; தைத்தாள் தையற் சடுகுடு பொறியால். ஆண்டநாள் ஆண்டு மாண்ட செந்தமிழ்ப் பாண்டிய மன்னன் மீண்டது போல, உடுத்திய உடையும் எடுத்த மார்பும் படைத்த கணவனைப் பார்த்துக் கிடந்தாள். |
வெற்றிலைச் சுருள்
ஒற்றி வைத்த ஒளிவிழி மீட்டபின், வெற்றிலைச் சுருள் பற்றி ஏந்தினாள்; கணவன் கைம்முன் காட்டி, அவன்மலர் வாயில் தரத்தன் மனத்தில் நினைத்தாள். தூயவன் அப்போது சொன்ன தென்னெனில், "சுருளுக்கு விலைஎன்ன? சொல்லுவாய்?" என்ன; "பொருளுக்குத் தக்கது போதும்" என்றாள். "கையிற் கொடுப்பதைக் காட்டிலும் சுருளை வாயிற் கொடுத்திடு மங்கையே" என்றான். சேயிழை அன்பாய்ச் செங்கை நீட்டினாள். குடித்தனப் பயனைக் கூட்டி எடுத்து வடித்த சுவையினை வஞ்சிக் களித்தல்போல் தளிர்க்கைக்கு முத்தம் தந்து, குளிர்வாய் வெற்றிலை குழைய ஏகினனே! |
அறுசீர் விருத்தம்
அவளின் காதலுள்ளம்
உணவுண்ணச் சென்றாள், அப்பம் தணல்நிற மாம் பழத்தில் மணவாளன் அருமை பற்றி 'இணையற்ற அவன் அன்புக்கு |
பிள்ளைகள் நினைவு
பள்ளிக்குச் சென்றி ருக்கும் துள்ளிக் குதித்து மான்போல் உள்ளத்தில் நினைத்தாள்;ஆனால் தள்ளினாள் அச்சந் தன்னை! |
வீட்டு வேலைகள்
ஒட்டடைக் கோலும் கையும் கட்டிய சிலந்திக் கூடு, தட்டியே பெருக்கித் "தூய்மை" சட்டைகள் தைப்ப தற்குத் |
தையல் வேலை
ஆடிக்கொண் டிருந்த தையற் ஓடிக்கொண் டிருக்கும் தைத்த பாடிக்கொண் டேயிருக்கும் நாடிக்கொண் டேயிருக்கும் |
மரச்சாமான்கள் பழுது பார்த்தல்
முடிந்தது தையல் வேலை. ஒடிந்தவை, பழுது பார்த்தாள்; படிந்துள்ள அழுக்கு நீக்கிப் |
கொல்லூற்று வேலை
இடிந்துள்ள சுவர் எடுத்தாள்; சுண்ணாம்பால் போரை பார்த்தாள். |
மாமன் மாமிக்கு வரவேற்பு
நாத்தியார் வீடு சென்ற பார்த்தனள்;உளம் மகிழ்ந்தாள். வாழ்த்திநல் வரவு கூறி நாத்தியார், தங்கள் பேரர் வண்டிவிட் டிறங்கி வந்த கண்டொத்த மரும கட்குக் கொண்டுவந் திட்ட பண்டம் வண்டியில் இருந்த வற்றை |
மாமி மாமன் வாங்கி வந்தவை
கொஞ்சநாள் முன்வாங் கிட்ட மஞ்சள்,குங் குமம், கண்ணாடி, செஞ்சாந்தின் சீசா,சொம்பு, இஞ்சியின் மூட்டை ஒன்றே, புதியஓர் தவலை நாலு, மிதியடிக் கட்டை,பிள்ளை எதற்கும்ஒன் றுக்கி ரண்டாய் குதிரினில் இருக்கும் நெல்லைக் தலையணை, மெத்தைக் கட்டு, எலிப்பொறி, தாழம் பாய்கள்; இலுப்பெண்ணெய், கொடுவாய்க் கத்தி, கலப்பட மிலாநல் லெண்ணெய்; திருமணம் வந்தால் வேண்டும் ஒருகாசுக் கொன்று வீதம் வரும்மாதம் பொங்கல் மாதம் பரிசாய்ச் சம்பந்தி தந்த மூலைக்கு வட்டம் போட்டு மேலுக்கோர் சுருக்குப் பையும் தோலுக்குள் காயிதத்தில் சேலொத்த விழியாள் யாவும் |
மருமகள் வினா
"இவையெல்லாம் வண்டிக் குள்ளே அவைக்களம் தனிலே நீவிர் சுவைப்புளி அடைத்து வைத்த கவர்ந்துண்ணும் பூச்சி கட்கும் |
மாமி விடை
என்றனள்; மாமி சொல்வாள்: குன்றுமேல் குரங்கு போல என்தலை நிமிர, வண்டி உன்மாமன் நடந்து வந்தார். |
மாமன் பேச்சு
"ஊரெல்லாம் சிரிக்க வைத்தேன் யாரெல்லாம் சிரித்து விட்டார்? பாரம்மா பழுத்த நல்ல நேரிலே இதனை யும்பார் வண்டியில் எவ்வி டத்தில் பண்டத்தைக் காப்ப தற்குப் முண்டம்இப் படிச் சொல்வாளா? அண்டையில் நடந்து வந்தால்?" |
மருமகள் செயல்
மாமனார் கொண்டு வந்த தீமையில் லாத வெந்நீர் தூய்மைசேர் உணவு தந்து, ஆம்,அதில் அமரச் சொல்லிக் கடையிலே செலவு செய்த இடையிலே மாமன் "விக்குள் கொடு"எனக் கொடுத்தாள். பின்னர்க் அடுக்களை அரங்கில், நெஞ்சம் |
என்ன கறி வாங்கலாம்?
கொண்டவர்க் கெது பிடிக்கும் தண்டூன்றி நடக்கும் மாமன் உண்பதில் எவரு டம்புக்(கு) கண்டனள், கறிகள் தோறும் |
பிள்ளைகள் உள்ளம் எப்படி?
பொரியலோ பூனைக் கண்போல் "அருந்துமா சிறிய பிள்ளை" இருந்தந்தச் சிறிய பிள்ளை அருந்தியே மகிழ்ந்த தைப்போல் |
அத்தானுக்கு எது பிடிக்கும்?
பொருளையும் பெரிதென் றெண்ணாள், அருளையே உயிரென் றெண்ணும் உருளைநற் கிழங்கில் தன்னை திருவுளம் எண்ணி எண்ணிச் |
எதிர்கால நினைவுகள்
இனிவாழும் நாள் நினைத்தாள் நனிஇரங் கிடுதல் வேண்டும்; எனதத்தான் தனையும் பெற்று தனிக்கடன் உடையேன், நானோர் கிழங்கினை அளியச் செய்வாள், கொழுங்காய்ப்பச் சடியே வைப்பாள் ஒழுங்காகத் தோலைச் சீவிப் விழுங்கிடும் வகை முடித்து |
முதியவருக்குத் துணை
தூங்கிய மாமன் "அம்மா ஏங்கியே ஓடி மாமன் வீங்கிய காலைப் பார்த்தாள் தாங்கியே மருந்து பூசிச் |
அவளோர் மருத்துவச்சி
நாடியில் காய்ச்சல் என்றே ஓடிநற் பாலை மொண்டு, வாடிய கிழவர்க் கீந்தாள்; ஓடிடச் செய்தாள் மங்கை |
அள்ளி அணைத்தாள் பிள்ளைகளை
குழந்தைகள் பள்ளி விட்டு இழந்தநல் லுரிமை தன்னை வழிந்தோடும் புதுவெள் ளத்தை எழுந்தோடி மக்கள் தம்மை |
உடை மாற்றினாள்
பள்ளியில் அறிஞர் சொன்ன வெள்ளிய உடை கழற்றி, உள்வீட்டில் பாட்டன் பாட்டி கள்ளினில் பிள்ளை வண்டு |
தலைவி சொன்ன புதுச்செய்தி
அன்றைக்கு மணம் புரிந்த இன்றைக்கு மணம் புரிந்தாள் குன்றாத விழியால், அன்பன் "ஒன்றுண்டு சேதி" என்றாள்; வந்தார்"என் றுரைத்தாள், கேட்டு "நொந்தார்கள்" என்று கேட்டு தந்தைதாய் கண்டு "உங்கள் நைந்திடும் வண்ணம் நீங்கள் |
முதியோர்க்கு
ஒக்கநல் லிளமை கண்டீர் மெய்க்காதல் மணமும் பெற்றீர்; மக்களைப் பெற்றீர்;வைய எக்குறை பெற்றீர்? இன்னும் அதிர்ந்திடும் இளமைப் போதில் முதிர்ந்திடும் பருவந் தன்னில் எதிர்ந்திடும் துன்ப மேதும் வதிந்திடல் கண்டு, நெஞ்சு |
அறிவுக்குத் திருவிளக்கு
என்றனன்; தந்தை சொல்வார்: ஒன்றிலும் கவலை கொள்ளேன் அன்றியும் உன்பெண் டாட்டி இன்றுநான் அடைந்த நோய்க்கும் செல்லப்பா உணவு கொள்ளச் சொல்லப்பா!" எனவே, அன்பு நல்லப்பா மகிழும் வண்ணம் மெல்லப்பா வைபு ரிந்த |
பிள்ளைக்கு அமுது
குழந்தைகள் உடனி ருந்து பழந்தமிழ்ப் பொருளை அள்ளிப் ஒழுங்குறு கறிகள் தம்மில் வழங்கினாள் அள்ளி அள்ளி, |
பாடு என்றான்
அனைவரும் உண்டார் அங்கே! சுனைவரும் கெண்டைக் கண்ணாள் எனைவரும் படிஏன் சொல்ல 'தினைவரும் படிஇல் லார்க்கும் |
யாழ் எடுத்தாள்
குளிர்விழி இளநகைப் பூங் தளிருடல் யாழ் உடம்பு ஒளியும் நல்வானும் ஆகி "தெளிதமிழ்" பவனி வந்தாள் |
கவிதை பாய்ச்சினாள்
உள்ளத்தில் கவிதை வைத்தே வெள்ளத்தில் சுவையைக் கோத்தாள்; தெள்ளத்தெ ளிந்த நீர்போல், பள்ளத்தில் கோடைத் துன்பம் |
உயிரெல்லாம் தமிழில் தொக்கின
வீடெல்லாம் இசையே; வீட்டில் ஏடெலாம் அறிவே; ஏட்டின் காடெலாம் ஆடும் கூத்தே; மாடெல்லாம் இவ்வா றானால் |
கடையை மறந்தீரோ?
இடையினில் தனை மறந்தே "கடையினை மறந்து விட்டீர் நடையினில் அன்னம் சொன்னாள்; உடையவன் "ஆம் ஆம்" என்றான்; |
மனைவியிடம் பிச்சை கேட்டான்
"கண்ணல்ல; நீதான் சற்றே உண்பதற் கனுப்பி, உண்டு பெண்ணல்ல" என்று சொல்லிச் கண்ணல்ல, கருத்தும் போன்றாள், |
கடையின் நடைமுறை
மல்லியை அளப்பார்; கொம்பு சொல்லிய விலை குறைக்கச் நல்லியல் தொகை கொடுப்பார்; வெல்லம்என் றொருகு ழந்தை |
அவள் வாணிபத் திறமை
களிப்பாக்குக் கேட்பார்க் கீந்து புளிப்பாக்கி தீர்ந்த பின்பு அளிப்பார்க்குப் பணம்அ ளித்தாள்; கிளிப்பேச்சுக் காரி யின்பால் இளகிய நெஞ்சத் தாளை அளவாக இலாபம் ஏற்றி மிளகுக்கு விலையும் கூறி புளுகாமல் புகன்ற வண்ணம் |
கணவனிடம் கணக்கு ஒப்புவித்தாள்
கொண்டவன் வந்தான்; கண்கள் கண்டுள்ள கணக்கின் வண்ணம் தண்டலும் கொடுத்தேன்; விற்று உண்டங்கு வேலை" என்றே |
வீட்டறை மருத்துவமைனை
படுக்கையில் மாம னாரைப் கடுக்கை தீர்ந்திலதோ" என்று உடுக்கையும் மாற்று வித்து, தடுக்கினி லிருந்து தூக்கிச் |
மற்றும் வீட்டு வேலை
வரிசையாய்க் காய வைத்த பெரிசான சாலில் சேர்த்தாள்; உரியநல் தீனி வைத்தாள்; வரும்மக்கள் எதிர்பார்த் திட்டாள்; |
கடற்கரையில்
சிற்றுண வளித்தாள்; பின்பு பெற்றதன் மக்கள் சூழப் பொற்கொடி படர்ந்தாள் தேனைப் வற்றாத வெள்ளக் காட்டின் |
கடற்கரைக் காட்சி
அக்கரை செலும்உள் ளத்தை இக்கரை அலையின் ஆர்ப்பும், மிக்கொளி மிதக்கும் மேனி "ஒக்கவே வாழ்க மக்காள்" |
காட்சி இன்பம்
குளிர்புனல் தெளிவி லெல்லாம் துளிதொறும் உயிர்து டிக்கும்; வெளியெலாம் அரசு செய்யும் களியெலாம் காணக் காணக் |
கடற் காற்று
கடலிடைப் புனலில் ஆடிக் உடலிடைப் பூசு கின்ற அடர்சிற கன்னப் புட்கள் நடையொடு நடந்து வீடு |
இரவுக்கு வரவேற்பு
மேற்றிசைக் கதிர்ப்ப ழத்தை மாற்றுடை யாய் உடுத்து கோற்கிளை ஒடுங்கும் புட்கள் காற்சிலம் பசையக் காதற் திருவிளக் கேந்தி வந்து உருவிளக் கிடவீட் டுக்குள் ஒருபெருங் கலயத் துள்ளே பெரியோரின் உள்ளம் எங்கும் |
அத்தானை எதிர்பார்க்கின்றாள்
கட்டுக்குள் அடங்கா தாடிக் சிட்டுக்கள், சுவடிக் குள்ளே விட்டுப்பின் அடுக்க ளைக்குள் எட்டுக்கு மணி அடிக்க |
எண்சீர் விருத்தம்
கட்டில் அழகு
சரக்கொன்றை தொங்ககவிட்ட பந்த லின்கீழ் இருக்கின்ற மெத்தைதலை யணைகள் தட்டி கரைக்கின்ற கலையத்துட் கரைத்துத் தென்றல் சுரக்கின்ற அன்பினால், தெருவில் மீண்டும் |
அவன் மலை போன்ற செல்வம்
பறக்கின்ற கருங்குயிலாள் மீண்டும் வீட்டில் சிறக்கின்ற செம்பினிலே ஊற்றி வைத்துச் நிறக்கின்ற மணிவிளக்கைச் சிறிது செய்து மறைக்கின்ற படிமறைத்து மற்றும் சென்று |
பிள்ளைகட்குப் பரிசு
கால்ஒடிந்து போகுமுன்னே அவனும் வந்தான்; மேலிருந்து "பிள்ளைவளர்ப் புப்போ ட்டிக்கு "ஆல்ஒடிந்து வீழ்ந்தாலும் தோள்கள் தாங்கும் பாலொடுசர்க் கரைகலந்த இனிய சொல்லாய் |
பழங்காலக் கிழங்கள்
அறையினிலே படுத்திருந்த பெற்றோர் காதில் அறியோமே எம்நாளில்" என்றார் பெற்றோர். "குறையின்றி வளர்ப்பவர்கள் பரிசு கொள்ளல்" அறிந்தாரோ?" எனக் கேட்டார் அக்கா லத்தார்; |
அடுக்களையிற் பிள்ளைகள்
பரிசுதனைப் பெற்ற பிள்ளை, ஓடி வந்தான்; பெரிசாக, இன்மொழிகள் செவிபி ளக்கப் அரசாட்சி செலுத்தியபின், எல்லா ரும்போய் ஒருபெரும்போர்க் களம்புகுந்தார், உணவைத் தூக்கி |
குழந்தைகள் தூங்கியபின்
அவன்பாடிக் கொண்டிருந்தான் அறைவீட் டுக்குள் உவந்தருள உணவிட்டுக் கடன் முடித்தாள்; குவிந்திருக்கும் சுவையுணவு தானும் உண்டாள்; அவிழ்ந்துவரும் நிலாஒளியால் இதழ்கள் மூடும் |
கதவைத் தாழிட்டாள்
கண்டுபடுக் கைதிருத்தி உடைதிருத்திக் வண்டுவிழி திறக்குமொரு குழந்தை, "தண்ணீர் பண்டிதர்கள் பழங்கதையின் ஓட்டைக் கெல்லாம் ஒண்பசு,நற் கன்றுக்கு வைக்கோல் ஈந்தே |
கட்டிலண்டை மங்கை
தொண்டையினில் ஒன்றுமே அடைக்க வில்லை; அண்டையிலே மங்கைபோய் "அத்தான்" என்றாள். திண்தோளில் சந்தனத்தைப் பூசு கின்றாள்; கண்டான்!கண் டாள்! உவப்பின் நடுவிலே,"ஓர் |
பொதுத்தொண்டு செய்தோமா?
"மிதிபாகற் காய்கசக்கும்; எனினும் அந்த அதுபோலத் தானேடி! அதனாலென்ன? அதிகாலை தொடங்கிநாம் இரவு மட்டும் இதுவரைக்கும் பொதுநலத்துக் கென்ன செய்தோம்? |
வீட்டுத் தொண்டா பொதுத் தொண்டு?
"இன்றைக்குக் கறிஎன்ன? செலவு யாது? சென்றாளா? கொழுக்கட்டை செய்ய லாமா? ஒன்றுக்கு மூன்றாக விற்ப தெந்நாள்? குன்றுநிகர் குடம் நிறையக் கறப்ப துண்டா? |
தன்னலத்தால் என்ன நடக்கும்
"தமிழரென்று சொல்லிக்கொள் கின்றோம் நாமும்; எமதென்று சொல்கின்றோம் நாடோ றுந்தான்; நமதுழைப்பை ஒருகாசைச் செலவு செய்தோம்? அமைவாகக் குந்திநினைத் தோமா? இல்லை; |
பெரும்படியான தொண்டு செய்துள்ளோம்
கரும்படியின் சாறுநிகர் மொழியாள் இந்தக் "வரும்படிவீ தப்படிநான் தரும்ப டிக்கு கரம்படி வீதித்தமிழர் கழகத் தார்கள் பெரும்படியாய்ச் செய்ததுண்டு; படிக்க ணக்கைப் |
தமிழ் படிக்க வேண்டும் எல்லோரும்
"அப்படியா! அறியாத படியால் சொன்னேன்; எப்படியா யினும்பெற்று விட்டால் மக்கள் மெய்ப்படிநம் அறிஞரின் சொற்படிந டந்தால், முற்படில் ஆகாததுண்டா? எப்ப டிக்கும் |
தமிழ்நாடு தலைதூக்க உயிரையும் தருவேன்
"இழந்தபழம் புகழ்மீள வேண்டும் நாட்டில், வழிந்தொழுகும் சுவைத்தமிழே பெருக வேண்டும். விழுந்ததமிழ் நாடுதலை தூக்க என்றன் "பழம்இடுவேன் சர்க்கரைப்பால் வார்ப்பேன் உங்கள் |
அன்றன்று புதுமை
"அன்றிலடி நாமிருவர் பழமும் பாலும் குன்றத்திற் படர்ந்தமலர்க் கொடியே, மண்ணில் ஒன்றொன்றும் மறுநாளே பழமை கொள்ளும்; அன்றன்று புதுமையடி, தெவிட்ட லுண்டோ? |
இரவுக்கு வழியனுப்பு விழா
நள்ளிரவின் அமைதியிலே மணிவி ளக்கும் மெல்லஉடல் குளிரும்வகை வீசா நிற்கும்; சொல்லரிதாய். இனிதினிதாய் நாழி கைபோம்; புல்லிதழிற் போய்ஒடுங்கும்; தமைம றந்து |
முதற் பகுதி முற்றும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குடும்ப விளக்கு - முதற் பகுதி - Bharathidasan Books - புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - என்றான், என்றாள், வேண்டும், பிள்ளைகள், வந்தான், வண்ணம், பிள்ளை, கண்டாள், குழந்தைகள், செய்து, பெற்றீர், வீட்டில், நடக்கும், சென்றாள், பார்த்தாள், கின்றாள், வைத்தாள், அத்தான், நடந்து, மக்கள், சேர்த்தாள், செய்தாள், கேட்டு, என்றனள், தன்னில், பெட்டி, காட்சி, வந்தாள், மற்றும், என்றன், எல்லாம், வெற்றிலைச், தூங்கிய, வீட்டு, எடுத்தாள், தைப்போல், போகும், தொண்டு, வந்தனர், நினைத்தாள், நெஞ்சம், இன்னும், தானும், நெஞ்சில், வந்தார்