கேள்வி எண் 44 - சட்டக்கேள்விகள் 100
44. காலம் காலமாக இருக்கும் தெருவின் பெயரை நகராட்சி நிர்வாகம் எந்த முன்னறிவிப்புமின்றி மாற்றமுடியுமா?
பல தலைமுறையாக குடியிருந்து வந்த தெருவின் பெயரை எந்த முன்னறிவிப்புமின்றி நகராட்சி நிர்வாகம் மாற்றி விட்டது. குடும்ப அட்டை, வாக்காளர் ஜாபிதா, வீட்டு ரசீதுகளிலும் அவ்வாறே மாற்றியுள்ளது. தெருமக்களும், வீட்டுப் பத்திரம், வீடுகட்ட அனுமதி உத்தரவு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றுடன் CM Cell, தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் போன்றவற்றிற்கு மனுச் செய்தும் எந்தப் பலனும் இல்லை. நகராட்சி சர்வே பதிவேடுஇ Town Planning Record ஆகியவற்றில் Original Nameஉள் ளது. முறையான தீர்வு குறித்து தயது செய்து கூறவும்.
- J. ஸ்ரீரங்கம், பரமக்குடி
பதில் :
நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு தெருவின் பெயரை மாற்றி அமைக்க வேண்டுமானால், நகராட்சியில் தீர்மானம் கொண¢டு வந்து, மாநில அரசிடமும் உரிய அனுமதி பெற்ற பின்னரே நகராட்சி நிர்வாகம் பெயரை மாற்ற இயலும்.
குறிப்பாக சென்னையில் ஆங்கிலப் பெயர்கள் உள்ள சாலைகளின் பெயர்களை தமிழில் மாற்ற 2010-ம் ஆண்டு மாநகராட்சியில் அப்போதைய மேயர் மா.சுப்பிரமணியன் தீர்மானம் கொண்டு வந்து, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார்.
அந்த கோப்புகள் இன்று வரை கிடப்பில் போடப்பட்டுள்ளன. கிரீம்ஸ் ரோடு பெயரை பால்தினகரன் சாலை என்று மாற்றினாலும், இன்றுவரை பல ஆவணங்களில் கிரீம்ஸ் சாலை என்றே உள்ளது. ஆகையால் பரமக்குடி நகராட்சி நிர்வாகம் முறையற்ற வகையில் பெயர் மாற்றம் செய்திருப்பின், பொதுநலவழக்கு தொடரலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, நகராட்சி, பெயரை, நிர்வாகம், தெருவின், வந்து, தீர்மானம், சாலை, பரமக்குடி, கிரீம்ஸ், மாற்ற, அட்டை, எந்த, முன்னறிவிப்புமின்றி, மாற்றி, வாக்காளர், அனுமதி