கேள்வி எண் 22 - சட்டக்கேள்விகள் 100
22. இடையூறாக இருக்கும் பக்கத்து வீட்டின் மரக்கிளைகளை அகற்ற என்ன நடவடிக்கை எடுப்பது?
ஐயா, எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் வீட்டிலுள்ள மரத்திலிருந்து பல கிளைகள் எங்கள் வீட்டின் தாழ்வாரத்தின் உள்ளே சாய்ந்தபடி நிற்கின்றன, தினமும் மரத்திலிருந்து விழும் குப்பை எங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இதனால் எங்கள் காம்பவுன்ட் சுவரும் பலவீனப்பட்டு வருகிறது. பலமுறை சொல்லியும் அதை அவர் காதில் வாங்க மறுக்கிறார். நான் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். இதை எப்படி நான் எதிர்கொள்வது?
- ஷி. ராமச்சந்திரன், திருநெல்வேலி
பதில் :
நீங்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தை அணுகி தெரிவிப்பதன் மூலம் காவல்துறையினர் அவர்களை அழைத்து அறிவுறுத்த முடியும், அதற்கும் அவர் செவி கொடுக்க மறுத்தால் காவல்துறையில் அவர் மேல் பொது தொந்தரவிலிருந்து பாதுகாக்கும் சட்டம் (The Protection from Harassment Act 1997 and the Criminal Justice and Police Act 2001(Sec 42A)ன் மூலம் வழக்கு பதிவுசெய்து நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளலாம். இதற்கு நீதிமன்றம் குறைந்தபட்ச அபராதத்துடன் 6 மாதகால சிறைத் தண்ட னையும், அதிகபட்சமாக 5 வருட சிறைத் தண்டனையும் விதிக்க முடியும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, எங்கள், அவர், மூலம், முடியும், சிறைத், நான், மரத்திலிருந்து, வீட்டின், நடவடிக்கை, பக்கத்து