முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 352
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 352
சிலர் சிறைக்கு வரும் அளவிற்குத் துணிந்தால், அவர்கள் உழைப்பாளர்கள் நலனுக்கும், தங்கள் நலனுக்கும் வேற்றுமை இருப்பதாகக் கருதக்கூடாது.”
சங்கரும் சபதரும், ஜெயிலில் கிடைத்த ஓய்வு நேரத்தையெல்லாம் புத்தகங்களைப் படிப்பதிலும், தேசத்தின் பொருளாதார, சமுதாயப் பிரச்னைகளைச் சிந்திப்பதிலும் செலவிட்டார்கள். ஆரம்ப காலத்தில், அவருடைய கருத்துக்களை மற்ற கைதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால்,
1921ம் வருடம் டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவிற்குப் பின்னும் சுதந்திரம் வந்து தாங்கள் விடுதலையடையாமற் போகவே, அவர்களில் பெரும்பாலோரின் நம்பிக்கை தளர்ந்து விட்டது. மேலும், சௌரிசாராவில் வெகுண்டெழுந்த பொது ஜனங்கள் சில போலீஸ்காரர்களைக் கொன்றுவிட்ட செய்தியைக் கேட்டு காந்திஜி சத்தியாக்ரகத்தை நிறுத்தி விட்டதை அறிந்ததும், பலர் ஆழ்ந்த கவலையோடு சிந்திக்கத் தொடங்கினர். அவர்களிலே சிலர், “புரட்சிச் சக்தியின் மூலாதாரம் பொது ஜனங்கள்தான். காந்திஜியின் மூளையல்ல. பொது ஜன சக்தியினிடத்தில் அவநம்பிக்கை வெளியிட்டதின்மூலம், காந்திஜி, தான்புரட்சி விரோதியென்று நிரூபித்துவிட்டார்” என்ற சபதரின் கருத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 350 | 351 | 352 | 353 | 354 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொது - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்