முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 227
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 227
களைப் போல் விற்பனை செய்வதற்காக, அடிமைப் பெண்களும் ஆண்களும் வரிசை வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதையும், அவர்களின் திறந்த முதுகுகளிலே சவுக்கடிகள் விழுவதையும் நகரங்களிலே தான் காணமுடியும். ஒருநாள் என் குரு காளிதாஸர், முன்ஜென்ம வினையின் பயனாகத்தான் மனிதர்கள் அடிமைகளாகப் பிறக்கிறார்கள் என்று சொன்னார். அதைக் கேட்டது முதல், முன் ஜென்ம நம்பிக்கை எனக்கு அடியோடு போய்விட்டது. குப்தர்கள் தங்கள் ஆட்சியின் வேரை ஆழமாக ஊன்றுவதற்காக, மத நம்பிக்கையை எப்படி நூற்றுக் கணக்கான வழிகளிலே உபயோகித்துக் கொள்கிறார்கள் என்பதை ஒவ்வொரு அறிவுள்ள மனமும் உணரவே செய்யும். ஆனால், சாதாரண ஜனங்களோ இதை முற்றிலும் உணராதவர்களாகவே இருந்தார்கள். ஒருகால் அது அவர்களின் அறிவுக்கு அப்பாற்பட்டதாய் இருக்கலாம். கிராமவாசிகளோ, தங்கள் கிராமத்திற்கு வெளியேயுள்ள செய்திகளைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. ஆனால், கிராமத்திற்குள்ளே ஓர் அங்குல நிலத்திற்காகவும் உயிரை விடுவார்கள். அவர்கள் சிறிய நிலங்களுக்குகாகச் சண்டை போட்டுக் கொள்வதைப் பார்த்தால், குமார குப்தன்கூட தன் தன் நாட்டின் ஒரு
மாகாணத்திற்காக இவ்வளவு பெரிய சண்டை போடுவானா என்பது சந்தேகமே. இதையெல்லாம் நினைக்கும்போது, எனக்கொரு சம்பவம் ஞாபகத்திற்கு வந்தது. எனது பிரயாணப் பாதையிலே ஒரு சிறிய கிராமம். அதிலே நாற்பது வீடுகள் இருந்தன. ஒரு வீட்டிலே திடீரென்று நெருப்புப் பிடித்துக் கொண்டது உடனே மற்ற வீட்டுக்காரர்களெல்லாம் பெரிய பெரிய பாத்திரயங்களிலே தண்ணீரை நிரப்பினார்கள். ஆனால் அந்த நெருப்பை அணைப்பதற்கல்ல; தங்கள் வீடுகளைக் காப்பதற்கு என்று கருதி - தண்ணீர்ப் பாத்திரங்களோடு தங்கள் தங்கள் வீடுகளின் முன்னால் உட்கார்ந்து கொண்டார்கள். அதிர்ஷ்டவசமாகக் காற்றுவேறு பக்கம் திரும்பிவிட்டது. இல்லாவிடில், அந்தக் கிராமத்திலே ஒரு வீடுகூடத் தப்பியிருக்க முடியாது. இதைப் பார்த்த பொழுது கிராமத்திலுள்ள எல்லா வீடுகளும் தங்கள் வீடுகளே என்றும், எல்லோருடைய சுகதுக்கங்களும் தங்களுடையதே என்றும் கருதி, ஐக்கியத்தோடு வாழ்ந்த ஜன ஆட்சிகள் ஞாபகத்திற்கு வந்தன. இன்றும்கூட சமுத்திர குப்தன், சந்திரகுப்தன், குமார குப்தன் இவர்களுடைய வெற்றிப் பெருக்கிற்காக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரைக் கொடுக்கிறார்கள். அடிமைகளைப்போல் எஜமானர்களுக்குக் கீழ்ப்படிந்து, ஆனால் சுதந்திரம் உள்ள மனிதர்களைப்போல, மனித உணர்ச்சியில் ஒன்றுபட்டுத் தங்கள் நலனைத் தேடிக்கொள்ள அவர்களால் முடியவில்லை. நூறு வருட காலத்திற்குள் மனிதர்களுடைய மனப்பான்மையில்தான் எத்தனை பெரிய மாற்றம்? இந்த குப்த ஆட்சி, இன்னும் நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு நடந்துகொண்டிருக்குமானால், இந்த நாடு தங்கள் அரசர்களுக்காகப் போராடி மடியும் சுய உணர்ச்சியற்ற அடிமைகள் நிறைந்த தேசமாக ஆகிவிடும். மனிதர்களுக்குச் சில உரிமைகளும் இருக்கிறது;
மனிதத்தன்மை என்ற ஒரு பண்பும் உண்டு என்பதையே இந்த ஜனங்கள் மறந்து விடுவார்கள்.
அஜந்தா மடம் மிக மிகப் பெரியதாயும் அழகாயும் இருந்தது. ஒரு பெரிய மலையை, அர்த்த சந்திர வடிவமாக ஒரு நதி அறுத்து ஓடிக்கொண்டி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 225 | 226 | 227 | 228 | 229 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தங்கள், பெரிய, ஆனால், இந்த - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்