வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 14
சரி, வாருங்கள். அதோ மலையின் மீது உயர்ந்து வளர்ந்திருக்கும் தேவதாரு மரத்தின்மீது ஏறி நாலா பக்கங்களின் காட்சிகளைப் பார்ப்போம். யார் கண்டார்கள்? பனிக்கட்டி தேவதாரு விருட்சங்கள் இவைகளையல்லாமல் வேறு ஏதாவது அந்தப் பக்கம் தென்படாதா? அப்படி ஒன்றையும் காணோம். எங்கு பார்த்தாலும் பெரிய பெரிய மரங்களும், பனியுந்தானா? புற்களோ, புதர்களோ இந்தக் காட்டில் முளைக்கவே செய்யாதா? ஆனால் இவைகளைப் பற்றியெல்லாம் அபிப்பிராயம் கூறுவதற்காக நாம் இங்கு வரவில்லையே? பனி சூழ்ந்த இரண்டு பாகங்களைக் கடந்து கடைசிப் பாகத்துக்கு நாம் வந்திருக்கிறோம். இந்த வருஷம் பனியும் அதிகமென்று சொல்வதையும் நாம் கேட்டிருக்கிறோம் அல்லவா? இவ்வளவு பனியிலும் நின்று கொண்டிருக்கிற இந்த மரங்கள் எவ்வளவு பருமனாயிருக்கின்றன! அளந்து பார்ப்பதற்குக்கூட நம்மிடம் சாதனம் இல்லை. ஆனால் சுமாராகச் சுற்றளவு எட்டு முழம்
இருக்குமல்லவா? அதற்கு மேலும் இருக்கும்.
இந்த உயரமான மரத்தில் ஏறி நிற்கும் நாம் என்ன பார்க்கிறோம்? அதே பனிப்படலம்; அதே மரங்களின் கூட்டம். மேடு பள்ளமான அதே மலைப்பிரதேசம்! அதோ புகை; ஆம், உண்மையிலேயே புகைதான். இந்த நிசப்தமான வனாந்தரத்தில் புகை எங்கிருந்து வந்தது? நமக்கு ஆச்சரியமாயும், ஆனால் சந்தோஷமாயும் இருக்கிறதல்லவா? வாருங்கள், போய்ப் பார்த்து விடுவோமே!
புகை கிளம்புவது உண்மைதான். ஆனால் ரொம்ப தூரம் ஆகாயம் நிர்மலமாயிருப்பதனாலும், நாம் உயரத்தில் நிற்பதாலும் சமீபமாகத் தெரிகிறது. இருந்தாலுமென்ன? நெருங்கி வந்து விட்டோம். பிண நாற்றமும் மாமிச வாசனையும் நம்முடைய மூக்குக்கு முதல் விருந்தாகக் கிடைத்திருக்கிறது. அதோ சப்தம்; ஆம் சிறு குழந்தைகளின் சப்தம்; ஜாக்கிரதை; நாம் ரொம்ப மெதுவாக நடக்கவேண்டும். காலடிச் சத்தங்கூடக் கேட்கக்கூடாது. மூச்சும் மெதுவாக விட்டால் நல்லதுதான். யார் கண்டார் கள்! நம்மை வரவேற்பதில், அவர்களைப் பார்க்கிலும் அவர்களுடைய நாய்கள் முந்திக் கொண்டால்?
இந்தக் குழந்தைகளைப் பார்த்தீர்களா? உண்மையிலேயே சின்னஞ்சிறிய குழந்தைகள். அதோ யாவற்றிலும் பெரிய குழந்தைக்கு எட்டு வயதிருக்கும். சின்ன குழந்தைக்கு ஒரு வயது இருக்குமல்லவா? ஆம், ஒரே வீட்டில் ஆறு
குழந்தைகள்; இது வீடில்லையே; மலையின் இயற்கைக் குகை. உட்பக்கம் ஒரே இருட்டாகவல்லவா இருக்கிறது! இது எவ்வளவு அகலமும் நீளமும் இருக்கும்? எவ்வளவும் இருக்கட்டுமே! நீளத்தையும் அகலத்தையும் பார்ப்பதற்காகவா நாம் வந்திருக்கிறோம்? இனி இங்கு வசிப்பவரைக் கவனிப்போம். ஒரு பழுத்த கிழவி, அழுக்குப் படிந்து வெண்மையாய், ஆனால் சடை மாதிரி கற்றை கற்றையாக விரிந்து, அவளுடைய முகத்தையே மூடிக்கொண்டிருக்கின்றன, ரோமங்கள்! தன்னுடைய கைகளினால் அந்த ரோமக் கற்றைகளை விலக்குகிறாள். அவளுடைய புருவ ரோமங்களும்கூட ஒரே வெண்மை நிறம். அவளுடைய வெண்மையான முகத்தில் விழுந்துள்ள சுருக்கங்கள் அவளுடைய வாய்க்குள்ளிருந்து வெளிக் கிளம்புவன போன்று காட்சியளிக்கின்றன. புகையும் நெருப்பும் வெளித் தோன்றும் அந்தக் குகைக்குள்ளே தான் குழந்தைகளும் கிழவியும் வசிக்கிறார்கள். அவளுடைய உடம்பில் எந்த ஓர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாம், அவளுடைய, ஆனால், இந்த, பெரிய, புகை - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்