முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » அர்த்தமுள்ள இந்துமதம் » மதுவும் மதமும்
அர்த்தமுள்ள இந்துமதம் - மதுவும் மதமும்
இதை மட்டும் ஏன் `குடி’ என்கிறோம்? இது ஒன்றுதான், உயிரைக் குடிக்கிறது.
குடியைப்பற்றிச் சொல்கின்ற புராண இதிகாசங்கள் எல்லாம் `அவர்கள் குடித்தார்கள்’ என்று கூறிவிட்டு அதன் மூலம் என்னென்ன தவறுகள் செய்தார்கள் என்பதையே விவரிக்கின்றன.
வள்ளுவர், சுருக்கமாக, `நஞ்சுண்பார் கள்ளுண்பவர்’ என்றார்.
`இந்திரன் மதி மயங்கி, அகலிகை கெடுக்கப்பட்டதற்கும் மதுவேதான் காரணம்’ என்று ஓர் உபன்யாசகர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
என் அனுபவத்தில், சாராசரி மூளை சுறுசுறுப்பாக வேலை செய்து கடைசியில் முட்டாள்தனமாக முடிவெடுக்கும்படி வைப்பது மது ஒன்றே.
இரவு நேரத்தில், அக்கம் பக்கத்தார் விழித்துக் கொள்ளும்படியாகக்கூட நான் சத்தம் போட்டிருக்கிறேன்.
எவ்வளவு அறிவுள்ள மனிதனையும் முட்டாளாக்கி விடும் அந்த மதுவிற்கு அடிமையாகி விட்டால், பிறகு மீள்வது கடினம்.
கம்பராமாயணத்தில், மதுவுண்டு மயங்கிய சுக்ரீவன், தன் நிலமைக்கு இரங்கி, கீழ்க்கண்டவாறு புலம்புகிறான்.
“உறவுண்ட சிந்தை யானும்
உரைசெய்வான்! ஒருவற்கு இன்னம்
பெறல் உண்டோ?அவரால் ஈண்டுயான்
பெற்றபேர் உதவி; உற்றது
இறல்உண்டோ? என்னின் தீர்வான்
இருந்தபேர் இடரை எல்லாம்
நறவுஉண்டு மறந்தேன்! காண
நாணுவல், மைந்த!” என்றான்.
ஏயின அது அலால், மற்று ஏழைமைப் பாலது என்னோ?
“தாய் இவள் மனைவி” என்னும் தெளிவு இன்றேல்!
தருமம் என் ஆம்?
விவினை ஐந்தின் ஒன்று ஆம்; அன்றியின் திருக்கு நீங்க
மாயையின் மயங்குகின்றோம்; மயங்கினமேல்
மயக்கம்வைத்தோம்.
`தெளிந்து தீவினையைச் செற்றார் பிறவியின் தீர்வர்’ என்ன
தீளிந்திலா உணர்வி னோரும் வேதமும் விளம்ப வேயும்
தெளிந்து உறை புழுவை நீக்கி, நறவு உண்டு
நிறைகின்றேனால்
அளிந்து அகத்து: எரியும் தீயை நெய்யினால்
அவிக்கின்றாரின்,
`தன்னைத்தான் உணரத் தீரும் தகைஅறு பிறவி,
என்பது என்னத்தான் மறையும் மற்றத் துறைகளும்
இசைத்த எல்லாம்
முன்னை, தான் தன்னை ஓராமுழுப்பிணி அழுக்கின் மேலே
பின்னைத்தான் பெறுவது அம்மா; நறவுஉண்டு திகைக்கும்
பித்தோ?
அளித்தவர் அஞ்சும் நெஞ்சின் அடைத்தவர், அறிவில், மூழ்கிக்
குளித்தவர், இன்ப துன்பம் குறைந்தவர், அன்றி வேரி
ஒளித்தவர் உண்டு, மீண்டும் இவ்வுலகு எல்லாம் உணர
ஓடிக் களித்தவர் எய்தி நின்ற கதிஒன்று கண்டது உண்டோ?
செற்றது பகைஞர், நாட்டார் செய்தபேர் உதவி தானும்
கற்றதும், கண்கூடாகக் கண்டதும், நிலைவ லாளர்
சொற்றதும், மானம் வந்து தொடர்ந்ததும் படர்ந்த இன்பம்
உற்றதும் உணரார் ஆயின் இறுதிவேறு இதனின் உண்டோ?
வஞ்சமும், களவும், பொய்யும், மயக்கமும் மரபுஇல்
கொட்பும்
தஞ்சம் என்றாரை நீக்கும் தன்மையும், களிப்பும் தாக்கும்
கஞ்சமெல் அணங்கும் தீரும், கள்ளினால்! அருந்தினாரை
நஞ்சமும் கொல்வது அல்லால்; நரகினை நல்காது அன்றே
கேட்டனன் `நறவால் கேடுவரும்’ எனக் கிடைத்த
அச்சொல்
காட்டியது; அனுமன் நீதிக் கல்வியால் கடந்தது அல்லால்
மீட்டு இனி உரைப்பதே என்ன? விரைவின் வந்து
அடைந்த வீரன்
மூட்டிய வெகுளி யால்யாம் முடிவதற்கு ஐயம் உண்டா?
“ஐய நான் அஞ்சினேன்; இந்நறவனின் அரிய கேடு;
கையினால் அன்றி யேயும் கருதுதல் கருமம் அன்றால்;
வெய்யது ஆம் மதுவை; இன்னம் விரும்பினேன் என்னின்
செய்ய தாமரைகள் அன்ன சேவடி சிதைக்க” என்றான் வீரன்!
இந்தக் கட்டுரைத் தொடரில், நான் ஏன் மதுவிலக்குப் பிரச்சாரம் செய்ய வருகிறேன் என்றால், சில வேதங்களையும், கம்ப ராமாயணத்தையும், திருக்குறளையும் படித்தது ஒன்று; என் அனுபவம் இரண்டு.
மதுவினால், உண்மையிலேயே நான் போய்ச் சேர வேண்டிய ஊருக்குப் போய்ச் சேர முடியாமல் ரயிலைத் தவற விட்டிருக்கிறேன். வாழ்க்கை ரயிலையும் தவற விட்டிருக்கிறேன்.
ஒரு இந்து, மது அருந்துவதை மதம் நியாயப்படுத்தவில்லை.
வழக்கம்போலவே அவனைத் தட்டிக் கொடுத்துத் தர்ம போதனை மூலம் திருப்புகிறது.
மதுவிலக்கை சரியாகச் செயல்படுத்த வேண்டும் என்றால், அது நமது போலீஸ்காரர்களால் இயலாது.
மத விரிவுரையாளர்களால் மட்டுமே இயலும்.
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எல்லாம், நான், உண்டோ - Arththamulla Indhu Madham - அர்த்தமுள்ள இந்துமதம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்