முதன்மை பக்கம் » ஜோதிடம் » வேத ஜோதிடம் » புலிப்பாணி ஜோதிடம் 300 » பாடல் 47 - வியாழன் 8 ல் தரும் பாதகம்
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 47 - வியாழன் 8 ல் தரும் பாதகம்
கேளப்பா யெட்டுக்கு வேசிகள்ளன் |
இனி எட்டாம் இடத்தில் குருபகவான் வீற்றிருப்பின் அவன், வேசி கள்ளனாகவும், தீய மனைவியால் பகைகொண்டவனாகவும், அவளாலும், பகையாலும் கண்டம் அடைபவனாகவும், அரசரது பகை பெற்றவனாகவும், பொருட் சேதம் அடைபவனாகவும், நிறைந்த அவமானம் அடைபவனாகவும், பெரிய டம்பனாகவும் இருப்பன். மேலும் 6ஆம் இடத்தில் குரு நிற்பின் சாதகனுக்கு அதனாலும் தோடம் உண்டு. அரசரது பகைநேரும். நோய் உபாதை ஏற்படும். ஆயினும் பன்னிரண்டாம் இடத்தில் குரு நின்றால் அதுவே அவனது ஆட்சி வீடானதால் அதனால் எந்த ஒரு குற்றமும் சென்மனுக்கு இல்லையென்று நீ ஆய்ந்தறிந்து கூறுவாயாக.
இப்பாடலில் வியாழன் இலக்கினத்திலிருந்து 8 ஆகிய இடங்களில் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 45 | 46 | 47 | 48 | 49 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 47 - வியாழன் 8 ல் தரும் பாதகம் - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் - அடைபவனாகவும், இடத்தில்