ஆரூடப் பாடல் 62 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௬௨. (62) வந்தால்..
பனிரெண்டில் சூரியனும் உதித்ததாலே பலபேர்களா லுனக்கு உதவியுண்டு பணியணிகள் சேருமப்பா பலத்தலாபம் பாவையர்க்கு கோபமதில் பாலனாகும் துணிந்து நீ எத்தொழில் செய்தபோதும் தொல்லையின்றி விர்த்திகர மாகுமப்பா தணியுமப்பா உந்தனுடகஷ்ட மல்லாம் தட்டாமல் ஒன்பதுநாள் கழிந்திடவே. |
ஆரூடத்தில் அறுபத்து இரண்டு வந்திருப்பது, பன்னிரெண்டில் சூரியன் இருப்பதை குறிக்கும். பலர் உனக்கு உதவுவார்கள். நல்ல தொழிலும், ஆடை ஆபரணங்களும் சேரும். பலவித லாபம் உண்டாகும். உன் மனைவிக்கு ஆண்குழந்தை தரிக்கும். எந்த தொழிலை செய்தாலும் எந்த தடையும் இல்லாமல் விருத்தியாகும். இன்னும் ஒன்பது நாளில் உனக்கு இருக்கும் துன்பம் எல்லாம் விலகிவிடும் என்கிறார் அகதியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 62 - Sri Agathiyar Horary Wheel - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - Horary Astrology - ஆரூடங்கள்