ஆரூடப் பாடல் 42 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௪௨. (42) வந்தால்..
மனதிலோர் எண்ணத்தைக் கொண்டு நீதான் மாதமொன்றாய் கவலையுற்று வருந்துகின்றாய் இனமுள்ளவோர் பெண்மணியின் கலகத்தாலே இடையூறு மிகவுண்டுன் குடும்பந்தன்னில் தனதாண்யம் நிலபலமும் பொருளும் தோற்றாய் நிஷ்டூருனாக நின்றாய் வுன்குடும்பத்தாருக்கு தினமும் நீ நவக்கிரக பூஜை செய்தால் தீவினைகள் தீர்ந்து சுகமடைவாய் தானே. |
ஆரூடத்தில் நாற்பத்தியிரெண்டு வந்திருப்பதால், நீ மனதில் ஒர் எண்ணத்தை நினைத்து ஒருமாதமாக கவலைப்படுகிறாய். உன் குடும்பத்தில் ஒரு சிவந்த நிறமுள்ள பெண்மணியினால் கலகம் உண்டாகி, அதனால் அதிக இடையூறுகள் அதிகம் ஏற்படும். இதனால் பலவிதத்திலும் பொன் பொருள் நிலம் எல்லாம் இழந்தாய். குடும்பத்தவர்களுக்கு பகைவன் போலானாய். நாள் தோறும் நவக்கிரகத்தை வணங்கி வந்தால் இவை தீரும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 42 - Sri Agathiyar Horary Wheel - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - Horary Astrology - ஆரூடங்கள்