ஆரூடப் பாடல் 26 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௨௬. (26) வந்தால்..
பாலனே இனியொன்றும் பயமேயில்லை பலிக்குமப்பா உந்தனுட எண்ணமெல்லாம் மேலான லாபமெல்லாம் அடைவாயப்பா மேதினியில் செய்தொழிலும் நீடித்தோங்கும் ஆலமுண்டோன் அருளாலே ஆண்குழந்தை அப்பனே உன்மனையில் பிறக்கும்பாரு கீலகமின்றி யிருபத்தேழ் நாளில் கனவிலும் அதிசயங்கள் காண்பாய்தானே. |
ஆரூடத்தில் இருபத்தியாறு வந்திருப்பதால், இனி பயப்பட எதுவும் இல்லை. உன் எண்ணமெல்லாம் பலிக்கும். செய்யும் தொழில் விருத்தியாகும் அதிக லாபமும் கிடைக்கும். சிவன் அருளால் ஆண் குழந்தையும் கிடைக்கும். இவை அனைத்தும் இந்த ஆரூடம் பார்த்த இருத்தேழு நாளில் நடக்கும், இதற்கு அடையாளமாக இனி வரும் இரவுகளில் அதிசயமான கனவுகள் காண்பாய் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 26 - Sri Agathiyar Horary Wheel - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - Horary Astrology - ஆரூடங்கள்